என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, January 8, 2020

சென்னை புத்தகக்காட்சியில் அரங்கு எண்.333ல் என் நூல்கள் கிடைக்கும்!



அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம். 

ஜனவரி 9 முதல் 21 வரை சென்னை நந்தனம் மைதானத்தில் நடக்கும் புத்தகக் காட்சியில் என் புதிய நூல்கள் இல்லுமினாட்டி, விதி எழுதும் விரல்கள்,  இவ்வார இறுதியில் வெளியாகவிருக்கும் ‘ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்’ உட்பட அனைத்து நூல்களும் சிறப்புத் தள்ளுபடியுடன் ப்ளாக்ஹோல் மீடியா அரங்கு  333ல் கிடைக்கும். 

என்னுடைய மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் இரண்டு நூல்களும் தந்தி பதிப்பக அரங்கு 331, 332ல் கிடைக்கும். அருகருகே இருக்கும் இந்த இரண்டு அரங்குகளிலுமே என் அனைத்துப் படைப்புகளையும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த அரங்குகள்  ஐந்தாவது வரிசையில் வலது புறமாக அமைந்துள்ளன.

சென்னையில் உள்ள வாசகர்களையும், இந்தச் சமயத்தில் சென்னை வரும் வாய்ப்புள்ள வாசகர்களையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பல வாசகர்கள் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருவீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். வேறு பல பணிகள் இருக்கும் காரணங்களால் அங்கு வரும் வாய்ப்பில்லை.  வாசகர்களின் அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி.

அன்புடன்
என்.கணேசன்




1 comment: