சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 27, 2008

கற்பனை படுத்தும் பாடு

கற்பனை போல் ஒரு வரப்பிரசாதம் இல்லை. அதைப் போல் ஒரு சாபக்கேடும் இல்லை. அது கதையாய், கவிதையாய், காவியமாய் வடிவுகள் எடுத்து நம்மை சந்தோஷப்படுத்தவும் முடியும். இல்லாததை எல்லாம் எண்ண வைத்து, சந்தேகப்பட வைத்து நம்மை அது பாடாய் படுத்தவும் முடியும்.

இதோ ஒரு நிகழ்வு. ·ப்ளாட் ஒன்றில் குடி இருக்கும் ராமசாமி ஆபிஸ் வேலை முடிந்து களைத்துப் போய் இரவில் வீடு திரும்புகிறார். அவர் குடும்பத்தினர் எல்லாம் வெளியூர் சென்றிருக்கிறார்கள். பக்கத்து ·ப்ளாட் ஒன்றில் இருந்து சத்தமாக FM ரேடியோ பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்து போய் விட்டிருந்தார்கள். இப்போது புதிதாக யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை இந்த பாட்டு சத்தம் அறிவித்தது. தங்களுக்கு மட்டும் கேட்கும் படியாக வைத்துக் கொள்ள மாட்டார்களோ என்று முணுமுணுத்துக் கொண்டே ராமசாமி தன் ·பளாட்டினுள் நுழைந்தார்.

கதவை சாத்தினாலும் பாட்டின் ஓசை பெரிதாகக் குறைந்து விடவில்லை. அவருக்கு லேசாக தலை வலித்தது. ஒரு வேளை இளைஞர்கள் குடி வந்து இருக்கிறார்களோ என்று அவருக்கு சந்தேகம் வந்தது. ஊருக்கே கேட்பது போல் ஒலியை அதிகப்படுத்தி பாட்டைக் கேட்டு ரசிப்பது இளைஞர்கள் தான். மற்றவர்களுக்குத் தொந்திரவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க மாட்டார்களோ?

நேரம் சென்று கொண்டே இருந்தது பாட்டு நிற்பதாகக் காணோம். அதுவும் நேரமாக நேரமாக பாட்டின் ஒலியும் கூடி காதில் நாராசமாக ஒலித்தது. மணி பார்த்தார். பத்து. தூங்கவும் மாட்டார்களா இந்த சனியன்கள். முன்பு குடியிருந்தவர்களால் இந்த மாதிரி தொந்திரவுகள் ஒரு நாளும் வந்ததில்லை. இந்த சனியன்கள் தூங்கும் நேரம் பத்தரையோ என்னவோ?

ராமசாமி பத்தரை வரை பொறுத்தார். பாட்டு நிற்கவில்லை. இந்த சைத்தான்கள் பதினோரு மணிக்குத் தான் தூங்குவார்களோ. 24 நேரமும் தொடர்ந்து இசையருவியை கொட்டுவதாக FM பெருமை அடித்துக் கொண்டு விளம்பரம் செய்தது. தூங்க முடியாமல் தவித்த ராமசாமி பதினோரு மணி எப்போது ஆகும் அன்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதுவரை இந்த பொறுப்பில்லாத இளைஞர் சமுதாயத்தை மனமார வசை பாடினார். இந்த மாதிரி இளைஞர்களுக்கு ·ப்ளாட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தூரத்தில் ஹாயென்று இருக்கும் ·ப்ளாட் உரிமையாளரை மனதாரத் திட்டித் தீர்த்தார். நாளைக்கு முதல் வேலையாக புகார் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

11 மணிக்கும் பாட்டு நிற்கவில்லை. இரவின் நிசப்தத்தில் பாட்டு சம்மட்டியாக அடித்தது. கொஞ்சம் பஞ்சை எடுத்து இரண்டு காதுகளிலும் வைத்துப் பார்த்தார். பதினொன்றரை மணிக்கு ராமசாமியால் தாங்க முடியவில்லை. கொதித்துப் போய் எழுந்தார். இன்று அந்தப் பையன்களை உண்டு இல்லை என்று செய்து விட வேண்டும் என்று ஆவேசமாக பக்கத்து ·ப்ளாட்டிற்குப் போனார்.

கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. 'இப்படி சத்தமாய் பாட்டு வச்சா தட்டறது கேட்குமா செவிட்டு முண்டங்களா?' என்று மனதில் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். கதவின் கைப்பிடியைத் திருப்ப கதவு திறந்து கொண்டது. உள்ளே ஓரிரு பெயிண்ட் டின்களைத் தவிர வேறு சாமான்கள் இல்லை. ஆள்களும் இல்லை. ஒரு செல்பில் இருந்த ரேடியோ மட்டும் மிக சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. மெள்ள ராமசாமிக்கு உண்மை விளங்கியது.

மீண்டும் வாடகைக்கு விடுவதற்கு முன் வீட்டை பெயிண்ட் அடித்து விட நினைத்த வீட்டுக்காரர் பெயிண்டர்களிடம் வேலையை விட்டிருக்கிறார். அவர்கள் தங்கள் ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இடையில் மின்வெட்டால் பாட்டு நின்றிருக்கிறது. மாலையில் செல்லும் போது ரேடியோவை மறந்து விட்டு பெயிண்டர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் போன பிறகு மின் இணைப்பு மீண்டும் வந்ததில் இருந்து பாட்டு தொடர்ந்திருக்கிறது. ஆவேசம் அடங்கிய ராமசாமி ஸ்விட்ச் ஆ·ப் செய்து விட்டு ஒரு அசட்டுச் சிரிப்புடன் தன் ·ப்ளாட்டுக்குத் திரும்பினார்.

இரவு எட்டு மணியில் இருந்து உண்மை அறிந்த கணம் வரை ராமசாமியின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். கற்பனையில் சில இளைஞர்களை சிருஷ்டித்து, அவர்களை அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சைத்தான்களாக எண்ணி, மனம் வெந்து, நொந்து, திட்டி, சபித்து பட்ட பாட்டைப் பாருங்கள்.

பல நேரங்களில் உண்மை என்ன என்று எளிதாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு அறிந்து கொள்வதற்கு பதிலாக நாம் நம் கற்பனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விடுகிறோம். இந்த நிகழ்வில் ராமசாமி ஆரம்பத்திலேயே பக்கத்து ·ப்ளாட்டில் ஆளில்லை என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மையே. ஆனால் ஆளிருப்பதாக எண்ணியிருந்தால் கூட ஆரம்பத்திலேயே சென்று அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு 'ரேடியோ வால்யூமை மட்டும் குறைத்துக் கொள்ளுங்களேன்' என்று இயல்பாகச் சொல்லி சுமுகமாக விஷயத்தை முடிக்க முனைந்திருக்கலாம். இந்த எளிய வழிக்குப் பதிலாக அந்த இரைச்சல் தொந்தரவை அனுபவித்து இல்லாத நபர்கள் மீது கோபத்தைக் குவித்துக் கொண்டு தன் தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இது போல நம் தினசரி வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. வீட்டிலும் சரி வெளியிலும் சரி நேரடியாக கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குப் பதிலாக 'அவர்கள் இப்படி நினைத்துத் தான் அப்படி நடந்து கொண்டிருப்பார்கள்', 'இவர்கள் நம்மை முட்டாள் என்று நினைத்திருப்பார்கள்', 'அவர்கள் வேண்டும் என்றே தான் அப்படி நடந்து கொள்கிறார்கள்' என்று எண்ண ஆரம்பித்து நம் கற்பனையால் ஏதேதோ எண்ணி, மற்றவர் சொல், செயல்களுக்கெல்லாம் எப்படி எப்படியோ அர்த்தம் கண்டு நம் நிம்மதியையும், அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து விடுகிறோம்.

இனி கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் முன் சற்று சிந்திப்போமா?

- என்.கணேசன்

Tuesday, October 21, 2008

படித்ததில் பிடித்தது - WORDS



சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன் அந்த சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உபயோகிக்கத் தெரியாதவன் எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான். தவறாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகக் காரணமாகி விடுகின்றன. எனவே என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிக முக்கியமானது என்பதை மிக அழகாக அந்தோணி ராபின்ஸ் சொல்கிறார். படித்துப் பயனடையுங்களேன்.


WORDS

Words . . . They've been used to make us laugh and cry. They can wound or heal. They offer us hope or devastation. With words we can make our noblest intentions felt and our deepest desires known. Throughout human history, our greatest leaders and thinkers have used the power of words to transform our emotions, to enlist us in their causes, and to shape the course of destiny. Words can not only create emotions, they create actions.

Most beliefs are formed by words—and they can be changed by words as well. Our nation's view of racial equality was certainly shaped by actions, but those actions were inspired by impassioned words. Who can forget the moving invocation of Martin Luther King, jr., as he shared his vision, "I have a dream that one day this nation will rise up and live the true meaning of its creed . . ."? Many of us are well aware of the powerful pan that words have played in our history, of the power that great speakers have to move us, but few of us are aware of our own power to use these same words to move ourselves emotionally, to challenge, embolden, and strengthen our spirits, to move ourselves to action, to seek greater richness from this gift we call life.

An effective selection of words to describe the experience of our lives can heighten our most empowering emotions. A poor selection of words can devastate us just as surely and just as swiftly. Most of us make unconscious choices in the words that we use; we sleepwalk our way through the maze of possibilities available to us. Realize now the power that your words command if you simply choose them wisely.

What a gift these simple symbols are! We transform these unique shapes we call letters (or sounds, in the case of the spoken word) into a unique and rich tapestry of human experience. They provide us with a vehicle for expressing and sharing our experience with others; however, most of us don't realize that the words you habitually choose also affect how you communicate with yourself and therefore what you experience.

Words can injure our egos or inflame our hearts—we can instantly change any emotional experience simply by choosing new words to describe to ourselves what we're feeling. If, however, we fail to master words, and if we allow their selection to be determined strictly by unconscious habit, we may be denigrating our entire experience of life.

Most people are not challenged, though, by the size of the vocabulary they consciously understand, but rather by the words they choose to use. Many times, we use words as "short cuts," but often these short cuts shortchange us emotionally. To consciously control our lives, we need to consciously evaluate and improve our consistent vocabulary to make sure that it is pulling us in the direction we desire instead of that which we wish to avoid.

- Anthony Robbins

Wednesday, October 15, 2008

சிகரங்களும் சமவெளிகளும்


நீங்கள் யாரை மிகப் பெரிய வெற்றியாளர் என்று நினைக்கிறீர்கள்? யாருடைய வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்களை பெரிதும் ஊக்குவிக்கிறது? இது போல் ஆக முடிந்தால் அது தான் அதிர்ஷ்டம் என்று யாரைப் பார்த்து முடிவெடுக்கிறீர்கள்? அவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்க்கையில் அடைந்த சிகரங்களைப் பார்த்தே நீங்கள் அப்படி முடிவெடுத்திருப்பீர்கள் என்ற சந்தேகமே இல்லை. அது ஒரு சினிமா நடிகராக இருக்கலாம், ஒரு பெரிய பணக்காரராக இருக்கலாம், ஏதாவது துறையில் பிரமிக்கத் தக்க சாதனைகள் புரிந்தவராக இருக்கலாம். அவர்கள் படைத்துள்ள வெற்றி உங்களை அப்படி நினைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் வாழ்க்கையில் சிகரங்களை எட்டுதல் தினசரி அனுபவமல்ல. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வருவதும், பாராட்டு விழாக்களில் நாயகனாக இருந்து பெருமைகளை ஏற்றுக் கொள்வதும் அன்றாட சம்பவம் அல்ல.

2008 ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்கள் பெற்ற ஒரே நபர் என்ற பெருமை படைத்த மைக்கேல் ·ப்ரெட் பெல்ப்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒலிம்பிக் பந்தயம் ஒரு சிகரம். சில நாட்கள் அவர் சந்தித்த வெற்றிகள் அவை. ஆனால் கடந்த பல வருடங்களாக அதற்கான தீவிர பயிற்சி என்ற சமவெளியில் சஞ்சரித்து பிறகு அடைந்த சிகரமே ஒலிம்பிக் வெற்றி. அந்த வருடங்களில் ஒவ்வொரு நாளும் பயிற்சி தொடர்ந்து செய்வது சுலபமான ஒன்றல்ல. பயிற்சியின் போது அவரைப் படம்பிடித்து பத்திரிக்கைகளில் போடவோ, டெலிவிஷனில் காட்டவோ நிருபர் கூட்டம் காத்திருக்கவில்லை. தனிமையில் போரடிக்கிறது, சோம்பலாக இருக்கிறது என்றெல்லாம் சும்மா இருந்து விட்டு நேரடியாக ஒலிம்பிக்கிற்கு வந்து பதக்கம் பெற்று விடவில்லை. நாம் காண்பது சிகரங்களைத் தான் என்றாலும் அவர்கள் சிகரங்களை நோக்கிச் செல்லும் வாழ்க்கையில் அதிகம் பயணிப்பது சமவெளிகளிலேயே என்பதை மறந்து விடக் கூடாது.

இனியும் 2012ல் அவர் சிகரங்களை எட்ட வேண்டுமானால் இனி வரும் நான்கு வருடங்கள் பயிற்சி என்ற சமவெளிகளில் சோர்வில்லாமல் பயணம் செய்தே ஆக வேண்டும். இது எல்லா சாதனையாளர்களும் சந்தித்தாக வேண்டிய வாழ்க்கை முறை தான். பரிசு, வெற்றி என்ற பகட்டான அம்சங்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கை என்றென்றைக்கும் யாருக்கும் அமைந்து விட முடியாது. கதைகளிலும் அல்லது சினிமாக்களிலும் கடைசியாக சொல்வது போல அதற்கு மேல் கதாநாயகனும், கதாநாயகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்பது அழகான கற்பனை. நிஜ வாழ்க்கை அப்படியல்ல. சிகரத்திற்கு மேல் சிகரமாகவே போய்க் கொண்டிருப்பது கற்பனையில் மட்டுமே நிகழ முடியும்.

எனவே சிகரங்களை ஆராதித்து சமவெளிகளை வெறுத்து விடாதீர்கள். சமவெளிகள் இல்லாமல் சிகரங்களை மட்டுமே சந்திக்க ஆசைப்படாதீர்கள். இன்றோடு சமவெளி வாழ்க்கை முடிந்து விட்டது. நாளையில் இருந்து சிகரங்கள் மட்டுமே என்று பகற்கனவு காணாதீர்கள். இரு சிகரங்களுக்கு மத்தியில் அதிகமாக நாம் இருப்பது சமவெளிகளிலேயே என்பதை நினைவு வைத்திருங்கள். சமவெளிகளை வெறுப்பவன் சிகரங்களை அடைய முடியாது.

எனவே வாழ்க்கையில் நிறைவையும், மகிழ்வையும் வேண்டுபவர் யாராயினும் தினசரி வாழ்க்கை என்ற சமவெளிகளையும் ரசிக்கப் பழகுவது முக்கியம். ஏனென்றால் அவையே ஒருவர் வாழ்வில் அதிகம். அப்படியே வெற்றி என்னும் சிகரங்களை அடைய விரும்புபவரும் பயிற்சி என்ற சமவெளிகளை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. ஏனென்றால் சமவெளிகளைத் தாண்டினால் மட்டுமே ஒருவரால் சிகரங்களை அடைய முடியும். அதை மறந்து விட்டு சுலபமாக சிகரங்களில் இருந்து சிகரங்களுக்குத் தாவி சஞ்சரித்துக் கொண்டே இருக்க ஒருவர் ஆசைப்பட்டால் அது நிஜ வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அளிக்கும்.

- என்.கணேசன்

Wednesday, October 8, 2008

இருட்டைப் பரப்பாதீர்கள்


திரு அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இஸ்ரேல் நாட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போராட்டம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. முந்தைய நாள் இரவு ஒரு பாலஸ்தீன கிராமமே வெடிகுண்டு தாக்குதலில் இரையாகி இருந்தது. ஆனால் மறு நாள் காலை பத்திரிக்கையைப் பிரித்த அப்துல் கலாம் திகைத்துப் போனார். காரணம் பத்திரிக்கையின் முதல் பக்கம் முழுவதும் இஸ்ரேலின் விவசாயி ஒருவர் செய்த சாதனையின் விளக்கங்கள் நிறைந்திருந்தன. குறுகிய இடத்தில் அபார விளைச்சல் செய்து சாதனை படைத்த விவசாயி அதை எப்படிச் செய்தார் என்று படங்களுடன் செய்தி முதல் பக்கம் வந்திருக்க மூன்றாவது பக்கத்தில் தான் அந்த கிராமத்தில் வெடிகுண்டு வெடித்து சேதமான செய்தி வெளிவந்திருந்தது.

இந்தியாவுக்குத் திரும்பிய அப்துல் கலாம் அவர்கள் ஒரு சொற்பொழிவில் இந்தத் தகவலைத் தெரிவித்து இது போன்ற நல்ல சாதனைக்கு அங்கு பத்திரிக்கைகளில் கிடைத்த முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டி ஏன் நாமும் இது போன்ற நல்லவற்றைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார். நம் பத்திரிக்கைகள் எது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பது ஊரறிந்த விஷயம். பத்திரிக்கைகளில் நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட செய்திகள், கிளுகிளுப்பான செய்திகள், பரபரப்பான செய்திகள் என பக்கங்கள் நிரம்பி வழிகின்றன. இது போன்ற சாதனை செய்திகள், நம்பிக்கையூட்டும் நல்ல விஷயங்கள் எல்லாம் மக்களை சென்று அடைகிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

பத்திரிக்கைகளை விடுங்கள், தனி மனிதர்களான நாம் என்ன செய்கிறோம்? நாம் அறிந்து பரப்பும் செய்திகள் எப்படிப்பட்டதாக இருக்கின்றன? நாம் எதைக் காண்கிறோம்? காண்பதில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம்? எதை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்? இந்தக் கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது.

காணும் நல்லவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் அவை நம்மால் காணப்படுதேயில்லை. கண்டாலும் அதை சீக்கிரத்திலேயே மறக்கவும் செய்கிறோம். நல்லதல்லாதவற்றையே அதிகம் காண்கிறோம். அதைப் பற்றியே அதிகம் நினைக்கிறோம். அதைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். இந்த வியாதி நம்மை அறியாமலேயே பலருக்கும் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் ஜன்னலோரம் இருக்கிற பெண்களின் கழுத்திலிருந்து நகைகளை இழுத்துக் கொண்டு ஓடும் திருட்டுகள் பற்றி பக்கத்தில் இருந்த ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார். காலம் கெட்டு விட்டது, நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஓரிருவர் சொன்னார்கள். அதே சமயம் இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதான மனிதர் சில புத்தகங்களை இடது தோளில் வைத்து, ஒரு கையால் அவை விழாதபடி இறுக்கமாக பிடித்துக் கொண்டு மறு கையால் இரு கால்களையும் நகர்த்திக் கொண்டு ரயிலில் புத்தகம் விற்றுக் கொண்டு வந்தார். சிலர் அவருக்காகவே புத்தகங்கள் வாங்கினோம். அவர் சென்று விட்டார்.

ஆனால் திருடர்கள் பற்றிய பேச்சே அங்கு தொடர்ந்தது. மற்றவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட திருட்டு அனுபவங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. காலிரண்டும் செயல்படாத போதும் பிச்சையெடுக்காமல் தொழில் செய்து பிழைக்கும் அந்த நபர் பற்றி பேச இருப்பதாக நேரில் பார்த்த பின்னும் அவர்கள் எண்ணவில்லை. ஆனால் திருடர்கள் பற்றி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கேள்விப்பட்ட மற்றவர்களின் அனுபவங்களையும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் அப்படி பேசியது தவறு என்று சொல்ல வரவில்லை. இது போன்ற அனுபவப் பகிர்வுகள் மற்ற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் நல்லதைப் பார்க்கையில் மட்டும் நாம் ஊமையாகி விடுகிறோமே அது ஏன் என்பது தான் விளங்கவில்லை.

நம்மைச் சுற்றி நல்லது, கெட்டது இரண்டும் நடக்கிறது. அதில் ஒன்றை மட்டுமே காண்பது, பேசுவது என்பது ஒருவித வியாதியே அல்லவா? அதுவும் எத்தனையோ எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நல்லதைச் செய்பவர்கள், நல்லபடியாக இருப்பவர்கள் உண்மையில் பராக்கிரமசாலிகளே. எதிர்நீச்சல் கஷ்டம் தானே?

நல்லது எதுவும் தானாக நடந்து விடுவதில்லை. அதற்கு உயர்ந்த சிந்தனை, மன உறுதி, கட்டுப்பாடு எல்லாம் தேவைப்படுகிறது. பார்த்தீனியம் தானாக வளரும். நட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு ரோஜாச் செடி அப்படி வளராது. அதை வளர்க்க முயற்சி தேவைப்படுகிறது. அதிகமாக உள்ளது என்பதற்காக நம் முழுக் கவனத்தையும் பார்த்தீனியம் மீதே வைத்து, ரோஜாவைக் காண மறுப்போமா?

எனவே வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லதையும் காணவும், கண்டதைப் பாராட்டவும் மறந்து விடாதீர்கள். நீங்கள் காணும் நல்லவர்களைப் பற்றியும், அவர்களது நல்ல செயல்களைப் பற்றியும் கூட நாலு பேருக்குச் சொல்லுங்கள். எதை அதிகம் காண்கிறோமோ, எதை அதிகம் சிந்திக்கிறோமோ, எதை அதிகம் பேசுகிறோமோ அதுவே நம் வாழ்வில் மேலும் அதிகம் பெருகும் என்று ஞானிகள் சொல்கிறார்கள். எனவே எது உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியும் பெருக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கு அதிக கவனம் கொடுக்க ஆரம்பியுங்கள்.

தீயதையே கண்டு தீயதையே பேசி தீயதையே பரப்புவது இருட்டைப் பரப்புவது போன்றது. ஏற்கெனவே பெருகி இருக்கும் இருட்டை அதிகப்படுத்துவது போலத்தான் அது. இப்படிச் செய்து நம்மை சுற்றி நிறையவே இருட்டடிப்பு செய்து விட்டோம். அவநம்பிக்கை, அச்சம் போன்ற வியாதியைப் பரப்பும் ஊடகமாகி விட்டோம். போதும் இதோடு நிறுத்திக் கொள்வோம்.

நல்லதைத் தேடிக் கண்டுபிடிப்போம். அடையாளம் காட்டுவோம். பாராட்டி மரியாதை செய்வோம். மற்றவர்கள் அதற்குத் தகுந்தவர்களாக ஊக்குவிப்போம். இதுவே இருளை நீக்கி ஒளியை ஏற்படுத்துவது போன்ற உயர்ந்த, தேவையான செயல். இதை நம்மில் பெரும்பாலானோர் செய்ய முடிந்தால், நமக்குப் பின்வரும் தலைமுறை ஒரு ஒளிமயமான, ஆரோக்கியமான உலகில் அடி எடுத்து வைக்கும் என்பது உறுதி.

- என்.கணேசன்

Wednesday, October 1, 2008

படித்ததில் பிடித்தது - Fire of Motivation


எது நல்லது என்றும் எது சிறந்தது என்றும் அறியாதவர்கள் மிகக் குறைவு. ஆனால் அறிந்தபடி அவர்கள் எதனால் வாழ்வதில்லை என்ற கேள்வி எழுவது இயற்கை. அந்தக் கேள்விக்குப் பதிலை ஆராய்ந்த ஷிவ் கேரா, அறிந்தும் சாதிக்காதவர்களிடம் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்து மிக அழகாகச் சொல்லும் இந்த வரிகள் அருமையானவை. அது என்ன என்று அறிய இதைப் படியுங்கள். அது இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். உலகம் என்றும் உங்களுடையதே. இல்லாதவர்கள் அதை முதலில் வளர்த்துக் கொள்வார்களாக!

என்.கணேசன்

Fire of Motivation

I believe in two premises:
(i) most people are good people, but can do better; and
(ii) most people already know what to do, so why aren't they doing it?

What is missing is the spark--motivation. Some self help books adopt the approach of teaching what to do; we take a different approach. We ask, "Why don't you do it?" If you ask people on the street what should be done, they will give you all the correct answers. But ask them whether they are doing it and the answer will be no. What is lacking is motivation.

The greatest motivation comes from a person's belief system. That means he needs to believe in what he does and accept responsibility. That is where motivation becomes important. When people accept responsibility for their behavior and actions, their attitude toward life becomes positive. They become more productive, personally and professionally. Their relationships improve both at home and at work. Life becomes more meaningful and fulfilled.

After a person's basic physical needs are met, emotional needs become a bigger motivator. Every behavior comes out of the "pain or gain" principle. If the gain is greater than the pain, that is the motivator. If the pain is greater than the gain, then that is a deterrent.

Gains can be tangible, such as: monetary rewards, vacations, and gifts. They can be intangible, such as: recognition, appreciation, sense of achievement, promotion, growth, responsibility, sense of fulfillment, self worth, accomplishment, and belief.

Inspiration is changing thinking; motivation is changing action.

Motivation is like fire unless you keep adding fuel to it, it dies. Just like exercise and food don't last long, neither does motivation. However, if the source of motivation is belief in inner values, it becomes long--lasting.

- Shiv Khera