சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, June 25, 2008

படித்ததில் பிடித்தது - Money

பணம் மிக முக்கியம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் அது மட்டுமே முக்கியம் என்று மனிதன் தீர்மானிக்கும் போது ஒருவன் தன் வாழ்க்கையின் அனைத்து உயர்ந்த விஷயங்களையும் அதற்கு விலையாகத் தர வேண்டி வருகிறது. பொருட்களுக்கு என்ன விலை தருகிறோம் என்று கவலைப்படும் நாம் பணத்திற்கு என்ன விலை தந்து பெற்றிருக்கிறோம் என்று யோசிக்கிறோமா? என்று சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமானது. படித்து பணத்தை உங்கள் வாழ்க்கையில் எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று நீங்களும் யோசியுங்களேன்.

Money

With money, much good can be done and much unnecessary suffering avoided or eliminated. Moreover, in the culture we live in today, time is money and money is power. It takes time to appreciate and enjoy life and all of its simple beauties. It takes time to stop and listen to the voice of our true selves. It takes time to develop our gifts and talents. It takes time to learn and grow. It takes time to develop and nurture meaningful relationships. And in making time for all of these, money is a great help.

Money can also give us a measure of freedom from the control of others and in this respect is more important today than ever. Throughout most of human history, one did not need money to live, that is, for the basic necessities of life. For one unable or unwilling to fit into society’s mold, there was always the option of retreating to some remote place and subsisting on the land—an option that isn’t really feasible today.

The Taoist values freedom and preserving the dignity of the human spirit and, in this respect, would not object to Humphrey Bogart’s assertion that "the only point in making money is, you can tell some big shot where to go." The idea here is not to express (or harbor) hostility toward others but to affirm and follow your own path, free from intimidation or the control of others. The big shot might be a boss for whom you do soul-draining, monotonous work—or a landlord or mortgage-holding bank, whom you must pay for the privilege of a little peace and quiet. In as much as money is an important factor in determining the time we have to enjoy life and the power and freedom we have in it, the pursuit of money is a worthy goal. On the other hand, if we are looking to money to fulfill or satisfy us, we are sure to be disappointed.

In lacking money, we too often think a lack of money is our only problem. Money can give us the time to appreciate the simple things in life more fully, but not the spirit of innocence and wonder necessary to do so. Money can give us the time to develop our gifts and talents, but not the courage and discipline to do so. Money can give us the power to make a difference in the lives of others, but not the desire to do so. Money can give us the time to develop and nurture our relationships, but not the love and caring necessary to do so. Money can just as easily make us more jaded, escapist, selfish, and lonely. In short, money can help to free or enslave us, depending on why we want it and what we do with it. In this respect, nothing has changed in the two thousand years since Horace wrote, "Riches either serve or govern the possessor."

Money is a relatively simple issue. There are only two important questions: (1) How much do you need? (2) What is it going to cost you to get it? It is keeping these two questions in mind that gives us a true sense of money’s relationship to abundance. If we have less than what we need, or if what we have is costing us too much—in either case, our experience of abundance will be incomplete. As things stand in the modern world, you need money to eat, sleep, dress, work, play, relate, heal, move about, and keep the government off your back. In what style you choose to do each of these will determine how much money you need, that is, your lifestyle. Remember in choosing your style that it comes with a price tag. How much money it costs is not the issue, but how much the money costs you is of critical importance. Keep in mind:

Money should not cost you your soul.
Money should not cost you your relationships.
Money should not cost you your dignity.
Money should not cost you your health.
Money should not cost you your intelligence.
Money should not cost you your joy.

- Laurence G. Boldt

Wednesday, June 18, 2008

நிலவும், சுட்டிக் காட்டும் விரலும்


அறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவதும் இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்களில் இருந்து அறிவு கிடைக்கிறது. அறிந்தவர்களின் பேச்சில் இருந்து அறிவு கிடைக்கிறது. இண்டர்நெட் போன்ற விஞ்ஞான வளர்ச்சி சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது. ஆனால் அறிந்து கொள்வது மட்டுமே போதுமா? அது ஞானமாகி விடுமா?

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார். பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டான் மில்மன் கேட்டார். "சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?".

சாக்ரடீஸ் சொன்னார். "காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்"

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

அறிவுக்கு துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக்காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறிவாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம் காண முடிவதில்லை.

அதன் விளைவு ஆன்மீக அறிவாளிகளை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளை செய்து விடுகிறோம். 'அவர் நான்கு வேதங்களையும் படித்தவர், மகா ஞானி' என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை, ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே. வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாக விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப்பட்டால் மட்டுமே ஞானம் ஆகும். அது வரை அவருக்கு 'நான்கு வேதங்களைப் படித்தவர்' என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத்தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

உண்மையாக ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உள்ளவர்களில் பலரும் கூட அறிவதையே ஞானமாக எண்ணித் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். படித்துக் கொண்டே போகிறார்கள். சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக தாங்கள் ஞானமார்க்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதே கசப்பான உண்மை. எத்தனை படித்தாலும், கேட்டாலும் ஒரு சிறு அம்சத்தைக் கூட பின்பற்ற முடியவில்லை என்றால் அந்த அறிவு வியர்த்தமே. எல்லாம் தெரியும் என்கிற தவறான அகங்காரம் மட்டுமே அந்த அறிவின் பலனாக இருக்கும்.

நல்ல விஷயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப் படுத்துவது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதை சிந்தித்து விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். "நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது". விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம். கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம்.

வேதங்கள், உபநிஷத்துகள், திருக்குறள், கீதை போன்ற வழிகாட்டும் நூல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போலத் தான். என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பதே ஞானத்திற்கான ஆரம்பம்.

-என்.கணேசன்

Thursday, June 12, 2008

தாழ்வு மனப்பான்மை வேண்டாமே!

ண்ணங்கள் சக்தி வாய்ந்தவை என்பதில் சந்தேகமே இல்லை. திருவள்ளுவர், புத்தர் முதல் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் வரை அடித்துச் சொல்லும் இந்த விஷயம் எந்த அளவு உண்மை? சமீபத்தில் சில வகை எண்ணங்கள் நம் மூளையை சுருங்க வைக்கின்றன என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்கிற அளவுக்கு உண்மை.

மாண்ட்ரீல்(Montreal) நகரத்தின் புகழ் பெற்ற மெக்கில் (McGill) பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகளாக மூளை ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் எஸ்.லூபியன் (Dr.S.Lupien) சிலவகை எண்ணங்கள் மனித மூளையை கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சுருங்கச் செய்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை எண்ணங்களைக் கொண்டவர்கள் மூளை காலப்போக்கில் 20 சதவீதம் வரை சுருங்குகிறது என்றும் புதியன கற்றுக் கொள்வதிலும், நினைவாற்றலிலும் இத்தகைய மனிதர்கள் மிகவும் பின் தங்கி விடுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

அது மட்டுமல்ல, தங்களைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதவர்கள் தீய பழக்கங்களுக்கு சீக்கிரமாக அடிமையாகிறார்கள், அந்தப் பழக்கங்களில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறார்கள், கான்சர், இருதய நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள் என்றெல்லாம் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே உங்களைப் பற்றிக் குறைவாக எண்ணுவதை நிறுத்துங்கள். தாழ்வு மனப்பான்மையைப் போல உங்களை வேறெதுவும் முடங்கச் செய்ய முடியாது. தாழ்வு மனப்பான்மை ஒரு விதத்தில் தெய்வத்தையே குறைத்து மதிப்பிடுவதைப் போலத்தான். கடவுள் பயனில்லாத மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதே அவரை இழிவுபடுத்துவது போலத்தானே.

உங்கள் தாழ்வு மனப்பான்மை சிலரை உங்களுடன் ஒப்பிட்டு உருவான ஆதாரபூர்வமான உண்மையாக நீங்கள் ஒருவேளை கருதலாம். அதையும் மேலும் ஆழமாக சிந்தித்தால் உண்மை அல்ல என்று நீங்கள் உணரலாம்.

ஒரு கோடீஸ்வரன் தன் பிள்ளைகளுக்கு நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அறிந்து அதைத் தனக்கு வேண்டியபடி பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்பவன் தன்னம்பிக்கை உடையவன், சாதனையாளன். தனக்கு சொத்து இருப்பதே தெரியாமல், சொத்து கிணற்றில் போட்ட கல்லாக எங்கோ இருக்க, வறுமையில் உழல்பவன் தன்னம்பிக்கை அற்றவன், தோல்வியாளன். எனவே உண்மையில் இருவரும் செல்வந்தர்களே என்றாலும் அறிந்தவன், அறியாதவன் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது.

உங்கள் சொத்து உங்களுக்குள் உறங்கிக் கிடக்கின்றது. அதை அறியாமல் உங்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவுக்கு வருவது அறியாமையே. கடவுள் வெறுமைகளைப் படைப்பதில்லை. அப்படி நினைத்து அவரையும் உங்களையும் அவமதித்துக் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்கள் மூளையைச் சுருக்கி, திறமையைச் சுருக்கி, வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடாதீர்கள். உங்களுக்கென இறைவன் உள்ளே வைத்திருக்கும் தனித் திறமையைக் கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பியுங்கள். தாழ்வு மனப்பான்மையும், தேக்க நிலையும் சூரியன் முன் பனி போல காணாமல் போவதைக் காண்பீர்கள்.

-என்.கணேசன்

Friday, June 6, 2008

படித்ததில் பிடித்தது- Time is Short



வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயமல்ல, எனவே வேகத்திலேயே குறியாக இருக்காதீர்கள், ரசித்து வாழுங்கள், பாட்டு முடிவதற்குள் இந்த இசையின் இனிமையை அனுபவியுங்கள் என்றெல்லாம் சொல்லும் இந்தக் கவிதை இன்றைய காலகட்டத்தினர் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நிதானித்து ரசித்து வாழ வேண்டிய வாழ்க்கையை ஏதோ கட்டாயப்பாடம் போல கஷ்டப்பட்டுப் படித்துக் கொண்டிருப்பது ஏன்? நீங்களே சொல்லுங்களேன். அவசர வாழ்க்கை முறையில் எத்தனையோ இழக்கிறோம் என்று சொல்லும் இந்தக் கவிதையை நீங்களும் படியுங்களேன்.

Time is Short (Poem)

Have you ever watched kids on a merry-go-round
Or listened to the rain slapping on the ground?
Ever followed a butterfly's erratic flight
Or gazed at the sun into the fading night?
You better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

Do you run through each day on the fly
When you ask "How are you?" do you hear the reply?
When the day is done, do you lie in your bed
With the next hundred chores running through your head?
You'd better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

Ever told your child, we'll do it tomorrow
And in your haste, not see his sorrow?
Ever lost touch, and let a good friendship die
'Cause you never had time to call and say "Hi"?
You'd better slow down
Don't dance so fast
Time is short
The music won't last

When you run so fast to get somewhere
You miss half the fun of getting there.
When you worry and hurry through your day,
It is like an unopened gift....
Thrown away...
Life is not a race.
Do take it slower
Hear the music
Before the song is over.

- Unknown

Monday, June 2, 2008

உண்மையான அன்பு

இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.

அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?

என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.

எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.

இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?

உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.

இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?

- என்.கணேசன்