சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 5, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 9


·         செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

·         எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கையா அறுத்துக் கொள்வது?

·         எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

·         கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

·         கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

·         கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

·         காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

·         கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

·         எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல

·         கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல

·         சில்லரைக் கடன் சீரழிக்கும்.

·         சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?



தொகுப்பு: என்.கணேசன்

2 comments: