சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, April 12, 2014

இளைய தலைமுறைக்கு சொல்ல விரும்புவது...

பெண்மை.காமில் கேள்வி பதில் பகுதி-4

கார்த்திகா: Sir, Seriously உங்க பதிலுக்கு என்ன Reply செய்யுறது ன்னு தெரியாமால் இருக்கேன்.. Admire your Skills Sir.. Bhaa ன்னு பார்த்துட்டுருக்கோம்..

அதும் //அமானுஷ்ய சக்தி, அல்லது ஆழ்மன சக்தி // எப்படி Sir இப்படிலாம் யோசிக்கறீங்க..?? சுவாரஸ்யமான சம்பவங்கள்… நீங்களே அதை தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள் ன்னு சொல்லிட்டீங்க..

//யாரோ எனக்கு எடுத்துத் தருவது போல. // //ஒரு நாள் இரவில் ஒரு காட்சி என் மனத்திரையில் வந்து போனது. அதுவே பரம(ன்) இரகசியம் நாவலின் க்ளைமேக்ஸ் காட்சியாக அமைந்தது.// Got Goosebumps Sir.. Just Something is there.. Many thanks for Sharing with us..

அடுத்த கேள்வி Sir,

நீங்க எப்படி Blogging - குள்ள வந்தீங்க..?? Blog Start பண்ற Idea எப்படி வந்தது??


நான்: நான் நிலாச்சாரலில் எழுதிய “மௌனம் ஒரு மகாசக்தி” என்ற கட்டுரையை ஒரு ப்ளாக்கர் தன் ப்ளாகில் போட்டிருந்ததை நான் தற்செயலாகப் பார்த்தேன். அது வரை ப்ளாக் என்றால் என்ன என்று கூடத் தெரியாது. யாரோ ஒருவர் என் கட்டுரையைப் பதிவு செய்திருக்கிறார், நாமே ஏன் நம் படைப்புகளை எல்லாம் ஒரு ப்ளாகை ஏற்படுத்தி பதித்துக் கொள்ளக் கூடாது என்று தோன்ற ப்ளாக் ஆரம்பித்தேன். அப்போது எனக்கு கம்ப்யூட்டரும் புதிது, இண்டர்நெட்டும் புதியது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட தெரியாது. எப்படியோ தட்டுத் தடுமாறி கற்றுக் கொண்டேன். அப்படி 2007 அக்டோபரில் ஆரம்பித்த என் ப்ளாக் இன்று வரை வாசகர்களின் பேராதரவுடன் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.


கார்த்திகா: 2007 ல Blog ஆரம்பிச்சு இப்போ 2014 ல Best Blogger ன்னு பேர் வாங்கிருக்கீங்க.... இப்படி Best Blogger ah வருவோமென்று எதிர்பார்த்தீங்களா..?? Best Blogger என்று உங்களைச் சொன்ன போது எப்படி feel பண்ணீங்க??


நான்: திருப்தியாக இருக்கிறது. வெற்றி மட்டுமே முக்கியம் அல்ல, வெற்றியை எந்த வகையில் பெறுகிறோம் என்பதும் முக்கியம் என்று நினைப்பவன் நான். என் ப்ளாகில் பரபரப்பான சூடான செய்திகள் போட்டதில்லை. சினிமா நடிகர் நடிகைகள், அரசியல் என்று பலரையும் இழுக்கக் கூடிய பதிவுகள் போட்டதில்லை. அப்படி இருந்தும், நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதியும், வெற்றி கிடைத்திருக்கிறது என்பதே ஒரு நல்ல செய்தி அல்லவா?


உங்களில் நிறைய ப்ளாகர்களும் இருக்கிறீர்கள். உங்களுக்கு நான் இதையே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனக்கு நல்ல பதிப்பாளர் கிடைத்ததும் ப்ளாக் மூலம் தான். என் ப்ளாகைப் படித்துத் தான் தினத்தந்தியிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். தொடர்ந்து தினத்தந்தியில் ஒரு வருடம் ”அறிவார்ந்த ஆன்மிகம்” பகுதியில் எழுதி இப்போது தான் முடித்தேன். மேலும் வேறு ஏதாவது பகுதியில் தொடர்ந்து எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் வலையுலகம் இப்போது எல்லோர் பார்வையையும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. திறமை எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு பலன் அளிக்கும். அதனால் வெறும் விளையாட்டாக இல்லாமல் சீரியஸாகவே உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக எழுதுங்கள். மேலும் பிரகாசிக்க நல்ல வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.


கார்த்திகா: நிறைய Motivational Articles எழுதறீங்க.. இப்போ இருக்கற இளைய தலைமுறையினருக்கு நீங்க சொல்ல நினைக்கற முக்கிய விஷயம் என்ன??


நான்: இன்றைய இளைய தலைமுறைக்கு நான் சொல்லும் அறிவுரை இது தான்.


உலகம் உங்கள் வெற்றியை நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தையும், சேர்க்கும் பொருளையும், அடையும் புகழையும் வைத்து தான் தீர்மானிக்கும். ஆனால் அதுவே எல்லாம் என்று எப்போதுமே முடிவுக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம். அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த முக்கிய விஷயம். உலகத்திற்கு அது பற்றிய கவலை இல்லை. அதை உலகம் கணக்கில் எடுப்பதும் இல்லை. உலகத்தின் பார்வையில் ஜெயித்து விட்டு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுப் போய் விடாதீர்கள். வெளிப்புற வெற்றி, தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கை இரண்டும் முக்கியம். இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்து இரண்டையும் சரியான கலவையில் வைத்துக் கொள்ளுங்கள்.


சந்திராவிமல்: Thanks for your answers sir, show is very very interesting.

I have interest in Astrology. Since you are also an astrologer i am asking this to you. How to trust a Astrologer and how to know whether he is good or not.

Can i learn astrology by myself by reading books alone if so please suggest me some good books. I know you tooo wrote a book named, "ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?" any other books pls suggest me sir.

நான்: ஜோதிடத்தின் அடிப்படைகளை வேண்டுமானால் புத்தகங்கள் மூலம் கற்கலாம். ஆனால் பலன் சொல்வது என்பது ஜோதிடத்தில் ஆழமாகப் போனால் மட்டுமே முடியும். அதற்கு புத்தக ஞானத்தோடு அனுபவ ஞானமும், எல்லா கோணங்களில் இருந்து அலசும் திறனும் அவசியம். அதற்கு பல வருடப் பயிற்சி தேவைப்படும். 


ஆங்கிலத்தில் B.V. Raman எழுதிய How to Judge a horoscope 2 volumes மற்றும் 300 important combinations போன்ற புத்தகங்களைப் படிக்கலாம். அதே போல தமிழிலும் ஜோதிடத்தின் அடிப்படைகளைச் சொல்லும் புத்தகங்கள் நிறைய உள்ளன. ஆரம்பத்திற்கு அது உதவும்.


கார்த்திகா: ‘பொன்னியின் செல்வன்’ கதைல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது?? பிடிச்ச கேரக்டர் எது?? பொன்னியின் செல்வன் கதைக்காக எழுத்தாளரின் திறமையைப் பாராட்டும்ன்னா கதையின் எந்த இடத்தில், எதற்காக நீங்க பாரட்டுவீங்க??

பொன்னியின் செல்வன் கதை முடிவுல பல விடை தெரியா கேள்விகளுக்கு கல்கி அவர்கள் பதில் கொடுக்கல… நீங்க எப்பவாவது அந்த கதைல அலசாம விட்ட பகுதிகளை பத்தி எழுதணும்ன்னு நினைச்சு இருக்கீங்களா…

சரித்திர நாவல் எழுதணும்னு உங்களுக்கு தோணினது உண்டா?? உங்களை மிகவும் கவர்ந்த சரித்திர நாவல் எழுத்தாளர் யார்??


நான்: பொன்னியின் செல்வன் நாவலில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், அத்தனை கேரக்டர்களைப் படைத்து அந்தக் கதைக்களத்தில் கடைசி வரை சுவாரசியம் குறையாமல் நாவலைக் கொண்டு சென்ற விதமும் கதாபாத்திரங்கள் மிக யதார்த்தமாக நம் மனதில் பதிகிற மாதிரி எழுதிய விதமும்.

கல்கி அதில் நந்தினி கதாபாத்திரத்தைப் படைத்த விதம் மிக அருமை. பல நேரங்களில் குழப்புவது போல் இருந்தாலும் ஒரு intelligent cynic கேரக்டர் போல் புதிராகவே காட்டியிருப்பார். எதிர்க்க நினைப்பவர்கள் எல்லாம் அவளிடம் சென்றவுடன் மாறும் விதத்தை அவர் காட்டி இருக்கும் விதம் அருமை.


பல கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற போதும் அது அந்த நாவலின் தரத்தைச் சிறிதும் குறைத்து விடவில்லை என்பது என் கருத்து. அவர் அலசாமல் விட்டதை எடுத்து எழுதும் எண்ணம் எனக்கு இல்லை.


எனக்கும் சரித்திர நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இறைவன் அருள் இருந்தால் சிவாஜியைப் பற்றி எழுத வேண்டும். எனக்கு இந்திய சரித்திரத்தில் மிகவும் பிடித்த மன்னர் அவர்.


கல்கியின் பொன்னியின் செல்வன் அளவுக்கு மற்ற சரித்திர நாவல்கள் என்னைக் கவரவில்லை. சாண்டில்யன் மிகவும் பிடித்த சரித்திர நாவல் எழுத்தாளர்.


கார்த்திகா: உங்களின் சரித்திர நாவலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் Sir.. சீக்கரம் எழுத வாழ்த்துக்கள் - அதும் மன்னர் சிவாஜி யைப் பற்றி,Hmm Cant Wait for that!!

சாண்டில்யன் மிகவும் பிடித்த சரித்திர நாவல் எழுத்தாளரென்று சொல்லிட்டீங்க.. அவரின் எந்த படைப்பு உங்களை மிகவும் கவர்ந்தது?? இது அவரின் சிறப்பு என்று நீங்கள் நினைப்பது எது?? 


நான்: சாண்டில்யனின் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல்புறா. சாண்டில்யனின் பெண்களைப் பற்றிய வர்ணனைகள் பேசப்பட்ட அளவு அவரது மற்ற வர்ணனைகள் பேசப்படுவதில்லை. கடலில் போர் நடக்கும் போது கப்பல்கள், கடலலைகள் பற்றிய வர்ணனைகள் அவர் செய்யும் விதம் நம்மை அந்த இடத்தில் நேரில் கொண்டு போய் நிறுத்துவது போல் இருக்கும். அதே போல் அவருடைய தத்துவ சிந்தனைகளும் நன்றாக இருக்கும். அத்தியாயங்களை அவர் முடிக்கும் போது பெரும்பாலும் ஒரு சஸ்பென்ஸ் வைப்பார். அதுவும் சிறப்பாக இருக்கும். 

(தொடரும்)  

4 comments:

  1. சிவசுந்தரன்April 12, 2014 at 6:53 PM

    இளைய தலைமுறைக்கு சொல்லி உள்ள அட்வைஸ் சூப்பர் சார். வெற்றி மட்டுமே பேசும் இக்காலத்தில் மகிழ்ச்சியும் முக்கியம் என்று சொல்லும் நீங்கள் வித்தியாசமானவர் தான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. // நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம் //

    அதே அதே...

    ReplyDelete
  3. அறிவுரையை உண்மையாய் மனதில் இருந்து சொல்லி இருக்கிறீர்கள்.எதார்த்தமான வார்த்தைகள்.சத்ரபதி சிவாஜியை ஏனோ? எனக்கும் பிடிக்கும். அந்நாவலுக்காக காத்திருக்கிறேன்.இறைவன் விரைவில் உங்களுக்கு எழுத அருள் புரியட்டும்.

    ReplyDelete
  4. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமை...

    ReplyDelete