சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, May 18, 2016

மகாசக்தி மனிதர்கள் நூல் விமர்சனம்!

ன்று (18-05-2016) தினத்தந்தியில் என் மகாசக்தி மனிதர்கள் நூலின் விமர்சனம் வந்துள்ளது.


ன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே ‘மகாசக்தி மனிதர்கள்’ என்று போற்றுகிறோம். 

அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாக வெளி வந்துள்ளது. 

இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரைலைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார்.

மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. 

நன்றி: தினத்தந்தி 18.05.2016

5 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  2. இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. I PURCHASED THE BOOK TODAY BY CALLING DAILY THANTHI, ALL THE VERY BEST TO AUTHOR,WE EXPECT CONTINUOUS SUPPORT IN ELEVATING PEOPLE'S MENTALITY OF THINKING BY RELEASING THESE KINDS OF BOOKS,ONCE AGAIN ALL THE VERY BEST.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete