சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, February 2, 2016

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?- மூன்றாம் பதிப்பு!


வாசகர்களின் பேராதரவினால் ”ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?” நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகி உள்ளது.

ஜோதிட நுட்பங்கள் அறியாத, புரியாத, சாதாரண மனிதர்களுக்கு ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, போலிகளைக் கண்டுபிடிப்பதெப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா,  கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் இது.

முக்கியமாக நல்லதாகவோ, கெட்டதாகவோ எப்படி ஜாதகம் அமைந்து விட்ட போதிலும் அதைப் பயன்படுத்தி நன்மைகளை பெருக்கிக் கொள்ளவும், தீமைகளைக் குறைத்துக் கொள்ளவும் அறிவுபூர்வமான வழிகளை இந்த நூலில் நீங்கள் காணலாம். 

இது வரை நூலை வாங்கிப் படிக்காதவர்கள், இந்த நூலை வாங்கவும், தங்கள் பகுதியில் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசி எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

என்.கணேசன்

2 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா. . .
    ஏற்கனவே படித்துவிட்டேன்.
    எளிய நடையில் சிறப்பான புத்தகம். .
    நன்றி. . .

    ReplyDelete
  2. தெளிவான நடையில் புரிதலுக்கான புத்தகம்

    ReplyDelete