சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 29, 2016

உலகப் பழமொழிகள் – 15



141. அறிவாளியானவன் முதிர்ந்து வரும் கதிரைப் போன்றவன். அவன் முதிர முதிர தன் தலையை அதிகம் தாழ்த்திக் கொள்வான்.


142. நாம் இல்லாமல் இந்த உலகம் இயங்க முடியும். அதை என்றும் மறந்து விடக்கூடாது.


143. பேசத் தெரியாத முட்டாளும், ஊசி இல்லாத திசை காட்டும் கருவியும் ஒன்று. அதனால் திகைப்பு அதிகமாகுமே ஒழிய திசை தெரியாது.


144. அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் பயன்படுத்துவதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும்.


145. நண்பன் துக்கத்தில் பங்கு கொண்டு பாதியாகக் குறைக்கிறான். மகிழ்ச்சியில் பங்கு கொண்டு இரட்டிப்பாக்குகிறான்.


146. பரபரப்பு மனதின் பலவீனத்திற்கும், சுறுசுறுப்பு மனதின் வலிமைக்கும் அறிகுறி.


147. பழிச்சொல்லை யாரும் அழைத்து வந்து இருக்க இடம் தராவிட்டால் அது தானாகவே வாடி மடிந்து விடும்.


148. அதிர்ஷ்டம் என்றும் சுறுசுறுப்பைப் பின் தொடர்ந்தே செல்கிறது.


149. முன்னதாகத் திட்டமிட்டு அவமரியாதை செய்தவனிடம் நஷ்ட ஈடு பெற வேண்டாம். ஆனால் அதைச் செய்தவனிடமிருந்து ஒதுங்கி விடு.


150. அறிவுடைமையின் முதல் படி நாம் அறியாமையில் இருக்கிறோம் என்று உணர்வதே.


தொகுப்பு: என்.கணேசன்




1 comment:

  1. these golden words would guide you properly provided if youadhere these....

    ReplyDelete