சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, August 23, 2016

வாசகர்களை சந்திக்கிறேன்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


வரும் வியாழன் 25.08.2016 அன்று என் பதிப்பாளரின் அழைப்பை ஏற்று கோவை கொடீசியாவில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவிற்கு வர உத்தேசித்திருக்கிறேன்.  ஈரோடு, சென்னை, மதுரை நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்த போதெல்லாம் அவர் அழைத்தும் வெளியூர்கள், நேரப்பற்றாக்குறை என்றெல்லாம் காரணம் சொல்லி தவிர்த்து வந்த எனக்கு சொந்த ஊரில் நடக்கும் புத்தகத் திருவிழாவிற்கு விடுத்த அழைப்பைத் தவிர்க்க முடியவில்லை.


எழுத்தின் மூலமாக மட்டுமே உங்களை இது வரை தொடர்பு கொண்டிருந்த எனக்கு, உங்களைச் சந்திக்கவும் இறைவனாக அளித்த நல்லதொரு வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன். 25.08.2016 அன்று மாலை 4.30 மணி முதல் 7.45 மணி வரை அரங்கு எண் 187 ல் நான் இருப்பேன். புத்தகங்களில் கையெழுத்து வாங்க விரும்பும் வாசகர்களும், சந்தித்துப் பேச விரும்பும் வாசகர்களும் கண்டிப்பாக அன்று வருகை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் இரண்டாம் பாகத்தை எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். ஆழ்மன சக்திகள் குறித்து வாசகர்களுக்குள்ள சந்தேகங்களுக்கு விரிவான பதில் அளிக்கும் அத்தியாயம் ஒன்றையும் அதில் எழுத உத்தேசித்துள்ளேன். அதில் இடம் பெறத் தகுந்த சந்தேகங்களை வாசகர்கள் என்னிடம் நேரில் தெரிவிக்கலாம்.


வியாழன் அன்று மாலை புத்தகத் திருவிழாவுக்கு நான் வருவதால் அன்று காலையிலேயே புத்தம் சரணம் கச்சாமியின் 113 வது அத்தியாயம் பதிவிடப்படும்.

அன்புடன்
என்.கணேசன்

2 comments:

  1. அர்ஜுன்August 23, 2016 at 9:26 PM

    மகிழ்ச்சி கணேசன் சார்.

    ReplyDelete
  2. Even though 25th is government holiday, that day is not holiday for private institutions. So if you could arrange a meet on sunday also many readers will use the opportunity.

    ReplyDelete