சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 29, 2022

சாணக்கியன் 24

 

ல்லது நடக்க வழியில்லை என்று விஷ்ணுகுப்தர் சொன்னவுடன் வருத்தப்பட்டவனாக சந்திரகுப்தன் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அலெக்ஸாண்டரைப் பற்றி நான் கேள்விப்படும் எல்லாத் தகவல்களும் அவனை அசாதாரணமானவனாகவே அடையாளம் காட்டுகின்றன சந்திரகுப்தா. போர் புரியும் காலங்களில் அவன் முழுக் கவனமும் போரில் தங்கி விடும் என்கிறார்கள். எதிரிகளின் பலவீனங்களைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடித்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் அவனுக்கு ஈடு இணை யாருமில்லை என்கிறார்கள். அதே போல் காமக் களியாட்டங்களிலும் ஆழமாகப் போய் களிக்க முடிந்தவன் அவன் என்றாலும் அவற்றிலேயே மூழ்கி விடாமல் தேவையான நேரங்களில் வேகமாக மேலே வந்து அவற்றிலிருந்து விலகி அப்போதைய தேவைகளில் முழு கவனம் செலுத்த முடிந்தவன் என்கிறார்கள். மனித மனதை ஆழமாக அறிந்த எனக்கு அது எவ்வளவு கடினமானது என்பது தெரியும். எதிலும் மிக ஆழமாகச் செல்லவும், எதிலிருந்தும் எந்த நேரத்திலும் விலகி விடவும் முடிந்தவன் மிக வலிமையானவன் சந்திரகுப்தா. அதுமட்டுமல்லாமல் தத்துவ சாஸ்திரங்களிலும் ஆழமான ஞானம் உடையவன் அவன் என்று சொல்கிறார்கள். அவனுடைய குரு ஒரு மிகச் சிறந்த கிரேக்க ஞானியாம். அவரிடம் பயின்ற ஞானம் மட்டுமல்லாமல் போகிற இடங்களில் கூட ஞானத்தைத் தேடிக் கற்றுக் கொள்ள முடிந்தவனாகவும், ஞானத்தை மதிப்பவனாகவும் அவனைச் சொல்கிறார்கள். அவனால் மணிக்கணக்கில் தத்துவ ஞானங்களைப் பற்றி ஞானிகளுக்கு இணையாகப் பேச முடியும் என்றும் சொல்கிறார்கள். இப்படி உடல் வலிமையும், மன வலிமையும், அறிவுக் கூர்மையும் உள்ள ஒரு எதிரி ஆபத்தானவன். அவனை இங்கே அனைவருமாகச் சேர்ந்து எதிர்த்தால் வெல்வது ஒருவேளை சாத்தியமாகலாம். ஆனால் அவனை பாரதத்தின் தலைவாசலில் உள்ள ஆம்பி குமாரன் ஆதரிக்கவே முடிவெடுத்திருக்கிற நிலையில் பாரதம் ஆபத்தைத் தான் சந்திக்கும் நிலையில் இருக்கிறது”

 

சந்திரகுப்தன் சொன்னான். ”நிலைமை எத்தனை மோசமாக இருந்தாலும் நாம் செய்ய முடிந்தது எதாவது கண்டிப்பாக இருக்கும் என்று அடிக்கடி சொல்வீர்களே ஆச்சாரியரே.”

 

விஷ்ணுகுப்தர் பெருமூச்சு  விட்டார். “உண்மை. இப்போதும் நாம் முயற்சி செய்ய நிறைய இருக்கின்றன. அதைச் செய்வோம். பாரசீகத்திலிருந்து கிளம்பி இருக்கும் அலெக்ஸாண்டர் நம் எல்லையை எப்போது வந்தடைவான் என்று நீ நினைக்கிறாய்?”

 

இதற்கு பதில் அவருக்குத் தெரியாததால் அவர் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, அவன் அறிவைச் சோதிக்கத் தான் இதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட சந்திரகுப்தன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “இரண்டு மாதங்களுக்குள் அவன் படையுடன் இங்கே வந்து சேர்வான் என்று தோன்றுகிறது ஆச்சாரியரே”

 

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய் சந்திரகுப்தா?”

 

“பாரசீகத்திலிருந்து இங்கே வரும் வரை இடையில் அலெக்ஸாண்டரின் படையை எதிர்க்கும் அளவுக்கு வலிமையுள்ளவர்கள் யாருமில்லை.  எல்லாரும் அவன் சொல்வதை ஒத்துக் கொண்டு வழி விடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் வழியில் யாரிடமும் போரிட்டு கால தாமதம் நேர வாய்ப்பில்லை. ஆனால் படையோடு வரும் போது மிக வேகமாக அவர்கள் வந்து சேரவும் வாய்ப்பில்லை. அதனால் தோராயமாக இரண்டு மாத காலத்தில் வந்து சேர்வார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.”

 

விஷ்ணுகுப்தரின் முகத்தில் மலர்ந்த சிறு புன்னகை அவன் அனுமானம் சரியென்று அவர் நினைப்பதைத் தெரிவித்தது. அதையே பெரிய பாராட்டாக எடுத்துக் கொண்ட சந்திரகுப்தன் அக்கறையுடன் அவரிடம் கேட்டான். “இந்த வேளையில் நாம் செய்ய முடிந்தது என்ன ஆச்சாரியரே?”

 

விஷ்ணுகுப்தர் ஆழ்ந்த சிந்தனையுடன் சொன்னார். “ஆம்பி குமாரனைத் தவிர்த்து மற்றவர்களை ஒன்றுபடுத்த வேண்டும். ஒரே தலைமையில் அத்தனை பேரும் சேர்ந்து அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்டால் அவனைத் தடுத்து நிறுத்த வாய்ப்பிருக்கிறது.”

 

சந்திரகுப்தன் முகத்தில் கவலை தெரிந்தது. அவன் வாய் விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் அவன் கவலை தெரிவித்த செய்தியைப் புரிந்து கொண்ட விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதை விட்டால் அலெக்சாண்டரை எதிர்த்து வெல்ல வேறு வழியில்லை சந்திரகுப்தா.”

 

“உண்மை தான் ஆச்சாரியரே. ஆனால் யார் தலைமை ஏற்பது என்பதில் கடுமையான போட்டி உருவாகுமே.”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “வலிமையும், தேசப் பரப்பும் சிறியதென்றாலும் மனதளவில் அரசர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆகாய உயர்விலேயே நினைப்பார்கள் என்பதால் அது சிக்கலான விஷயம் தான். ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் யார் வலிமை அதிகமானவனோ அவன் தலைமையில் மற்றவர்கள் இணைவது தான் மரபு....”

 

“இது குறித்து ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசப்போவது யார் ஆச்சாரியரே”

 

“அனைவருக்கும் பொதுவான ஒரு ஆள் தான் அதைச் செய்ய வேண்டும். பாரத தேசத்தின் புதல்வனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கும் நானே இப்போதைக்கு அதற்குப் பொருத்தமான ஆளாகத் தெரிகிறேன். அதனால் நானே செல்வதாக இருக்கிறேன் சந்திரகுப்தா”

 

”உங்களுடன் நானும் வரட்டுமா ஆச்சாரியரே?” சந்திரகுப்தன் ஆவலோடு கேட்டான்.

 

“உனக்கும் மற்றவர்களுக்கும் வேறு வேறு வேலைகள் யோசித்து வைத்திருக்கிறேன் சந்திரகுப்தா. இவர்களை ஒன்று திரட்டுவது மிக முக்கியமான வேலை தான் என்றாலும் மற்ற வேலைகளும் நமக்கு நிறைய இருக்கின்றன...”

 

சந்திரகுப்தன் தலையசைத்தான். “முதலில் எங்கே செல்வதாக இருக்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

“அருகிலிருக்கும் கேகய நாட்டுக்கு முதலில் செல்லலாம் என்று நினைக்கிறேன். அங்கே அமைச்சராக என் நண்பன் இந்திரதத் இருப்பதால் அவனை வைத்து கேகய மன்னரிடம் உதவி கேட்கலாம் என்று நினைக்கிறேன். அதுவும் கஷ்டம் தான். ஆனால் இந்திரதத் நிலைமையைப் புரிந்து கொள்ளக் கூடியவன். கேகய அரசருக்கும் புரிய வைக்குமளவு அறிவும் படைத்தவன். அங்கு ஆரம்பித்து மகதம் வரை செல்லலாம் என்று நினைக்கிறேன்...”

 

சந்திரகுப்தன் மனத்தாங்கலுடன் மெல்லக் கேட்டான். “தனநந்தனிடம் போய் நீங்கள் உதவி கேட்கப் போகிறீர்களா ஆச்சாரியரே?” ஆச்சாரியரை அரசவையில் அவமானப்படுத்திய தனநந்தனை மறுபடி அவர் சந்திப்பதே தரம் குறைந்த செயலாக அவனுக்குத் தோன்றியது. அப்படி இருக்கையில் அவனிடம் சென்று அவர் உதவியும் கேட்பது அவர் தகுதிக்கு அடிமட்ட அவமானச் செயலாகத் தோன்றியது.  அது மட்டுமல்லாமல் ஆச்சாரியர் அவனிடம் அவர் தந்தையைக் கொன்றவன் தனநந்தன் என்பதையும் அக்காலத்தில் அது எப்படி நடந்தது என்பதையும் ஒரு முறை மனம் விட்டுச் சொல்லியிருக்கிறார். ஆச்சாரியரின் தந்தையைக் கொன்றவனை, ஆச்சாரியரையே சபையில் அவமானப்படுத்தியவனை, ஆச்சாரியர் மறுபடி சென்று சந்தித்து உதவி கேட்பது சந்திரகுப்தனுக்கே சகிக்க முடியாத சிறுமையாகத் தோன்றியது.

 

அவன் கேள்வியையும் முகபாவனையையும் வைத்து அவன் முழு எண்ண ஓட்டத்தையும் புரிந்து கொண்ட விஷ்ணுகுப்தர் சொன்னார். “மகதத்தின் வலிமை சேராமல் அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரன் கூட்டணியை மற்றவர்கள் சமாளிப்பது கஷ்டம் சந்திரகுப்தா. அது தோல்வியில் தான் முடியும். அதனால் தனிப்பட்ட மான அவமானங்களைப் பார்ப்பதை விட பாரதத்தின் நலனைப் பார்ப்பது தான் முக்கியம்.”

 

பாரதம் என்ற சொல்லையே பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்ட காலத்தில் பாரதத்தின் நலனுக்காக தன்மானத்தை விட்டு எதிரியிடம் கூட உதவி கேட்கப் போகும் அந்த மகத்தான மனிதரை சந்திரகுப்தன் பிரமிப்புடன் பார்த்தான். பின் மெல்லக் கேட்டான். “அவர்கள் உதவியைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்றால் நீங்களே தான் போக வேண்டுமா ஆச்சாரியரே. வேறு யாரையாவது அனுப்பிக் கேட்கலாமே?”

 

“வேறு யாரை அனுப்புவது சந்திரகுப்தா? தூதர் ஒருவரை அனுப்புவது போல் யாராவது ஒருவரை எங்கே அனுப்பியும் பயனில்லை. உணர்வு பூர்வமாகவும்,  ஆத்மார்த்தமாகவும் பேச முடிந்தவர்களாக இருக்க வேண்டும். உன்னைப் போன்றவர்களும் கூடப் போய் அப்படிப் பேச முடியும் என்றாலும் மாணவன், வயதும் அனுபவமும் போதாதவன் என்ற எண்ணம் கேட்பவர்களுக்கு வந்து விட்டால் சொல்வதை அவர்கள் கேட்டுக்கொள்ளக் கூடச் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தான் நானே போகலாம் என்று முடிவெடுத்தேன்.”

 

சந்திரகுப்தன் மெல்லக் கேட்டான். “தனநந்தன் நீங்கள் சொல்வதற்குச் சம்மதிப்பான் என்று நம்புகிறீர்களா ஆச்சாரியரே?”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “என் தாய் மண்ணுக்காக நான் இதை முயற்சி செய்து பார்க்கவில்லை என்ற உறுத்தல் என் மரணம் வரைக்கும் எனக்கு இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் சந்திரகுப்தா”

 

எத்தனையோ முறை தன் குருநாதரின் உயர்வுகளைக் கண்டு மெய்சிலிர்த்திருந்த சந்திரகுப்தன் அதிகபட்ச பிரமிப்பை அந்தக் கணம் உணர்ந்தான். இந்த பாரதம் இவர் போன்ற ஒரு மகனைப் பெற்றிருப்பது அதன் மிகப்பெரிய பாக்கியமே!

 

(தொடரும்)

என்.கணேசன்   

Monday, September 26, 2022

யாரோ ஒருவன்? 104


ஜீம் அகமது காளிங்க சுவாமியிடம் சொன்னான். “நீங்க சொல்றது சரி தான் சுவாமிஜி. இதெல்லாம் எப்படி நடந்ததுன்னு புரியல. திடீர்னு மகேந்திரன் மகன் சூப்பர் மேனாயிட்டானா?”

காளிங்க சுவாமி சொன்னார். “அவன் சூப்பர் மேன் ஆகவில்லை. சூப்பர் மேன் ஒருத்தனின் உதவி அவனுக்குக் கிடைத்திருக்கிறது

யாரந்த சூப்பர் மேன்?”

நாகராஜ் மகராஜ் என்ற பெயரில் ஒருவன் இருக்கிறான். நாகங்களின் அருளால் அவனுக்கு அபூர்வசக்திகள் நிறைய கிடைத்திருக்கிறது. அவன் உதவி அந்த ரா அதிகாரிக்கு இருக்கற வரைக்கும் உங்களால் எதையும் அந்த அதிகாரிக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. ஆனால் அவனால் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைமை தான் இப்போதைக்கு இருக்கிறது

ஜனார்தன் த்ரிவேதி பதறிப்போனார். “சுவாமிஜி. அன்னைக்கு என்னோட அரசியல் வாழ்க்கைக்குச் சொன்ன மாதிரி தயவு செய்து இதுக்கும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிடாதீங்க. அந்த நாகராஜ் மகராஜ்க்கு மட்டுமா நாகங்களோட அருளும் சக்தியும் கிடைச்சிருக்கு. உங்களுக்கும் அது பரிபூரணமா இருக்கே. நீங்க தயவு செஞ்சு எங்களுக்கு வழிகாட்டுங்க.”

காளிங்க சுவாமி அஜீம் அகமதைப் பார்க்க அவனும் சொன்னான். “ஆமா சுவாமி

காளிங்க சுவாமி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் ஓடும் கங்கையையே பார்த்தார்.  இத்தனை காலம் வரை அவருக்கு எல்லாவற்றையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல சொல்லித் தான் பழக்கம். ஏனென்றால் நடப்பது எதுவும் அவருக்கானதல்ல. ஆனால் இன்று முதல் முறையாக அவர் அருள்வாக்கு சொல்லப்போவதில் அவருடைய வேலையும் கலந்திருக்கிறது. அதை இந்த தீவிரவாதியும் அரசியல்வாதியும் அறிவது உசிதமல்ல…. அதனால் சொல்வதை யோசித்து அவர்கள் பங்கைச் சொல்வது போலத் தான் அவர் சொல்ல வேண்டியிருக்கிறது.

பின் அவர் சொன்னார். “எல்லா அற்புதங்களையும் செய்ய மகாசக்தியும் வேண்டும். அந்த மகாசக்தியைப் பயன்படுத்த முறையான மந்திர ஞானமும் வேண்டும். நாகராஜ் மகராஜ் ஒரு சக்தி வாய்ந்த ரத்தினக்கல்லை வைத்திருக்கிறான். அதை வைத்து மந்திரங்களைச் சொல்லித் தான் அவன் எல்லா வேலைகளையும் செய்கிறான். அந்த ரத்தினக்கல்லும், மந்திர ஞானமும் சேர்ந்து அவனிடம் இருக்கிற வரைக்கும் நீங்கள் அவன் செய்ய நினைப்பது எதையும் தடுக்க முடியாது

கவனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அஜீம் அகமது உடனே கேட்டான். “அவனுடைய மந்திர ஞானத்தை நம்மால் எடுத்துவிட முடியாது. ஆனால் அந்த ரத்தினக்கல்லை அவனிடமிருந்து பிரித்து விட முடியும்னு சொல்ல வர்றீங்களா சுவாமிஜி

அஜீம் அகமதின் அறிவு வேகம் காளிங்க சுவாமியை மிகவும் கவர்ந்தது. இவனிடம் அதிகமாக வார்த்தைகளை வீணாக்க வேண்டியதில்லை. அவர் சொன்னார். ”ஆமாம்

அஜீம் அகமது கேட்டான். “அவ்வளவு சக்திகளை வெச்சிருக்கிறவன் கிட்ட இருந்து அந்த ரத்தினத்தைப் பிரிக்க முடியுமா சுவாமிஜி?”

சுலபமல்ல. ஆனால் நானும் நாகசக்தி பெற்றவன். எனக்கும் சில பிரயோகங்கள் தெரியும். நான் சொல்கிறபடி நீங்கள் கேட்டால் உங்களுக்கு என்னால் உதவ முடியும்என்றார் காளிங்க சுவாமி.

என்ன செய்யணும் ஸ்வாமிஜி சொல்லுங்கஜனார்தன் த்ரிவேதி சொன்னார்.

காளிங்க சுவாமி அவரிடம் சொன்னார். “உனக்கு அது போன்ற ஆளைத் தெரியாது.” பின் அவர் அஜீம் அகமதைப் பார்த்துச் சொன்னார். “உனக்குத் தெரிந்த ஆட்களில் அபார தைரியமும், திருடுவதில் சாமர்த்தியமும், தெய்வ நம்பிக்கை அல்லது குறைந்தபட்சம் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதிலாவது நம்பிக்கை இருக்கிறவனுமான ஒருவனை நீ தேர்ந்தெடுத்து த்ரையோதசி திதி இருட்டுவதற்குள் என் காளி கோயிலுக்கு அனுப்பி வை...” 

அஜீம் அகமதுக்கு அபார தைரியமும், திருடுவதில் சாமர்த்தியமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தெய்வ நம்பிக்கை இருக்கிறவன் என்று அவர் சொன்னது புன்னகையை வரவழைத்தது. புன்னகைத்தபடி அவன் கேட்டான். “ஏன் தெய்வ நம்பிக்கை அல்லது மேலான சக்தியில் நம்பிக்கை இருக்கிற ஆளைக் கேட்கிறீர்கள் சுவாமிஜி?”

காளிங்க சுவாமி சொன்னார். “நாகராஜிடம் சாதாரணமாக யாரும் நெருங்கக்கூட முடியாது. அப்படியிருக்கிற போது அவனிடமிருந்து அந்த ரத்தினத்தைத் திருடி விட்டு வரக் கண்டிப்பாய் முடியாது. அது முடிய வேண்டுமென்றால் அவன் நான் சொல்கிற நேரத்தில் சொல்கிற விதத்தில் முயற்சி செய்ய வேண்டும். அவன் திரும்பி வருகிற வரை நாகராஜ் அவனை எதுவும் செய்து விடாதபடி, போகிறவனுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நான் மந்திர ரூபத்தில் ஒரு சக்திக் கவசத்தைப் போட்டு அனுப்ப வேண்டும். அதற்கு அந்த மனிதனுக்கு தன்னை விடப் பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையாவது குறைந்த பட்சம் இருந்தாக வேண்டும். அந்த சக்தி அவன் அல்லா என்று நினைத்தாலும் சரி, ஏசுநாதர் என்று நினைத்தாலும் சரி, காளி என்றோ, கிருஷ்ணன் என்றோ, ஈஸ்வரன் என்றோ நினைத்தாலும் சரி எல்லாம் ஒன்று தான். ஆனால் மேலான ஒரு சக்தி இருப்பதாகவே நம்பாதவனுக்கு சக்திக் கவசம் எல்லாம் வேலை செய்யாது....”

அஜீம் அகமதுக்கு காளிங்க சுவாமி சொல்வது எல்லாம் புதிராகத் தோன்றியது. ஆனால் அதை எல்லாம் மூட நம்பிக்கை என்றோ, அர்த்தமில்லாதது என்றோ அவனால் ஒதுக்கி விட முடியவில்லை. ஏனென்றால் சற்று முன் தான் இந்த மனிதர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை அவர்களுடைய வார்த்தைகளிலேயே சொல்லி அசத்தி இருக்கிறார்....

அவனுக்கு ஒரே ஒரு சந்தேகம் வந்தது. அவன் அவரிடம் கேட்டான். “நாகராஜ் தமிழ்நாட்டிலிருந்துகிட்டு டெல்லியில் பாம்புகளை வரவழைச்சு அற்புதம் செஞ்ச மாதிரி நீங்க இங்கேயிருந்தே ஏதாவது அவனைச் செய்ய முடியாதா?”

காளிங்க சுவாமி சொன்னார். “அந்த ரத்தினம் அவன் கையில் இருக்கும் வரை நான் எதுவும் செய்ய முடியாது....”

அஜீம் அகமது யோசித்தான். அவர் சொன்ன மாதிரியான ஒருவன் அவனுக்குத் தெரியும். அவன் இந்த நாட்டவன் தான். மிக வித்தியாசமானவன். அசாத்திய தைரியமும், யாரும் சந்தேகப்பட முடியாத தோற்றமும், லாவகமாகச் செயல்படும் திறமையும் கொண்டவன். திருட்டை ஒரு கலை போல் செய்வான். கடவுளைக் கும்பிட்டு தான் எந்தவொரு வேலைக்கும் அவன் இறங்குவான்.

ஒரு முறை அஜீம் அகமது வேடிக்கையாகக் கேட்டான். “நீ செய்யும் இந்தத் தொழிலை உன் கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா?”

அவன் சொன்னான். “ஏற்றுக் கொள்ளா விட்டால் இந்த அளவு சம்பாத்தியம் இருக்கும் வேறொரு தொழிலை அவர் எனக்குக் காட்டட்டும்.”

அந்தப் பதில் அஜீம் அகமதை அன்று வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மனிதரில் தான் எத்தனை ரகங்கள். சுவாமிஜி சொல்லும் வேலைக்கு அவன் பொருத்தமானவன் தான். ஆனால் பணம் தான் அதிகம் கேட்பான்...

காளிங்க சுவாமி சொன்னார். “பணத்தைப் பார்க்காதே

அஜீம் அகமது திகைத்தான். என்ன மனிதரிவர். மனதில் நினைக்க நினைக்க நினைப்பதற்குப் பதில் சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டபடி அவன் சொன்னான். ““சரி அந்தப் பொருத்தமான ஆளை உங்களிடம் அனுப்புகிறேன்.”

அவன் த்ரையோதசி திதியில் ராகு காலத்தில் வீட்டிலிருந்து கிளம்பி இருட்டுவதற்குள் என் கோயிலுக்கு வந்து சேர வேண்டும்.”

ஜனார்தன் த்ரிவேதி சந்தேகத்துடன் கேட்டார். “உங்கள் காட்டுக் காளிக் கோயிலில் தான் எப்போதும் பாம்புகள் நிறைஞ்சிருக்குமே. யாரையும் பக்கத்துலயே விடாதே. அந்த ஆள் எப்படி வருவான்....?”


காளிங்க சுவாமி சொன்னார். “அவனை பாம்புகள் எந்த தொந்திரவும் செய்யாது. தைரியமாய் வரலாம். த்ரையோதசி இரவில் அவனுக்கு மந்திரக்கவசம் உருவாக்கி அனுப்புகிறேன். பஞ்சமி நாளில் நான் சொல்லும் நேரத்தில் அவன் அந்த ரத்தினக்கல்லை அங்கிருந்து எடுக்க வேண்டும்””
       
ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “சுவாமிஜி திதி எல்லாம் எங்களுக்குச் சரியாக பார்க்க வராது. அது சில சமயம் முன்னே அல்லது பின்னே ஆகவும் வாய்ப்பிருக்கு. அதனால தேதி கிழமை சொல்லுங்கள்..”

காளிங்க சுவாமி சொன்னார். “22ஆம் தேதி வெள்ளிக் கிழமை, காலை பத்தரை மணியிலிருந்து 12 மணிக்குள் அவன் இருக்குமிடத்திலிருந்து கிளம்பி இருட்டுவதற்குள் கோயிலுக்கு வர வேண்டும். 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நான் சொன்ன வேலையை அங்கே முடிக்க வேண்டும்


இருவரும் தலையசைத்தார்கள். அஜீம் அகமது கிளம்புவதற்கு முன் ஆவலுடன் அவரிடம் கேட்டான். “உங்கள் இந்த சக்திகள் எல்லாம் ரொம்ப சுவாரசியாமாயிருக்கு. இதை நான் கத்துக்கணும்னா என்ன செய்யணும்?”

காளிங்க சுவாமி சொன்னார். “நான் முப்பது வருஷம் சாதகம் செய்து தான் இதைக் கற்றேன். நீயும் குறைந்தது அந்த அளவாவது சாதகம் செய்ய வேண்டி வரும்

அஜீம் அகமது பெருமூச்சு விட்டு விட்டுக் கிளம்பினான். ஜனார்தன் த்ரிவேதி மறுபடி காளிங்க சுவாமிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அவனுடன் கிளம்பினார்.

      
(தொடரும்)
என்.கணேசன்

      

Thursday, September 22, 2022

விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் - புதிய நூல் வெளியீடு!




 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஆழ்மனசக்தி நூல்கள் வரிசையில் மூன்றாவதாக “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” என்ற புதிய நூல் இன்று வெளியாகியுள்ளது. 

முதலிரண்டு நூல்கள் அபூர்வ சக்திகள் பெற ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற வகையில் இருந்தன. 

இந்தப் புதிய நூல் நாம் எப்படியெல்லாம் தவறாக நம் விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதை விளக்கி, விதியைத் திருத்தி எழுத ஆழ்மன சக்திகளை க்வாண்டம் என்னும் பிரபஞ்சக்களத்தில் பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது. 

மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லா விட்டால் நாம் பெறும் அனைத்து அபூர்வ சக்திகளாலும் நாம் பெறும் பலன் தான் என்ன?  எனவே வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும், மனநிறைவையும், வெற்றியையும் பெற ஆழ்மன சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதற்கான சூழல்களையும், மனிதர்களையும் நம் வாழ்வில் எப்படி ஈர்ப்பது என்பதையும், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுடன் எளிமையாகவும் விரிவாகவும் இந்த நூல் உங்களுக்கு விளக்கும்.

184 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.230/-

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 


இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


புத்தம் சரணம் கச்சாமி நாவலின் மறுபதிப்பு வெளியீடு!


 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வாசகர்கள் தந்த வரவேற்பு மகத்தானது. ப்ளாக்ஹோல் மீடியா வெளியிட்ட அந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகித் தீர்ந்து சில மாதங்கள் ஆகின்றன. இந்த நாவலைப் படிக்காத புதிய வாசகர்கள் இந்த நாவலை வாங்கிப் படிக்க, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே அமானுஷ்யனும், மைத்ரேயனும், லீ க்யாங்கும், மாராவும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் மறுபதிப்பை வெளியிடத் தீர்மானித்து தற்போது என்.கணேசன் புக்ஸில் வெளியிட்டிருக்கிறோம். 

608 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/- 

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 


இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8195612830?ref=myi_title_dp


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

சாணக்கியன் 23

 

சின்ஹரன் தட்சசீல நகருக்கு வெளியே இருக்கும் அந்தப் பாதுகாப்பான இடத்திற்கு வந்து ஒரு வாரமாகிறதுஅந்த இடம் தட்சசீல கல்விக் கூடத்திற்குச் சொந்தமானது. மாணவர்கள் குதிரையேற்றம் முதலான பயிற்சிகளை அங்கே தான் மேற்கொள்கிறார்கள். அங்கே குதிரைகளைப் பராமரிப்பவனாகவும், மாணவர்களுக்கு வீரப்பயிற்சிகளைக் கற்றுத் தருபவனாகவும் மாறுவேடத்தில் அவனை விஷ்ணுகுப்தர் தங்க வைத்திருந்தார். தட்சசீல கல்விக்கூடத்திற்குச் சொந்தமான இடம் அது என்பதாலும், ஆண்டாண்டு காலமாக கல்விக்கூட மாணவர்கள் போய் வந்து கொண்டிருக்கும் இடம் என்பதாலும் காந்தார ஒற்றர்களுக்கும் கூட அந்த இடத்தில் மாறுவேடத்தில் சேனாதிபதி சின்ஹரன் தங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வரவில்லை. எல்லோரும் சின்ஹரனை மைனிகாவுடன் தட்சசீலத்தை விட்டு ஓடிப்போனவனாகவே நினைத்திருந்ததால் சின்ஹரன் அங்கே பாதுகாப்பாகவே இருந்தான். ஒருவேளை ஆபத்து ஏற்பட்டால் அருகிலிருக்கும் காட்டுப் பகுதிக்கு அவன் வேகமாகத் தப்பிக்கவும் முடியும் என்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக அவனுக்கு இருந்தது.

 

ஆனால் நள்ளிரவில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி வெட்டவெளியில் படுத்திருந்த சின்ஹரன் மனம் மட்டும் இப்போதும் ரணமாக இருந்தது. மைனிகாவால் ஏமாற்றப்பட்டிருப்பதை அவனால் இன்னமும் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டமாகத் தானிருந்தது. எவ்வளவு எளிதாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று யோசிக்கும் போதெல்லாம் அவனுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின் மீதே கோபம் அதிகமாக வந்தது. அவளைச் சந்தேகிக்கவே அவனால் முடியவில்லையே. எல்லாமே நடிப்பு என்று இத்தனை ஆன பின்பு கூட அவனால் இப்போதும் முழுவதுமாகச் சந்தேகிக்க முடியவில்லை என்பது அவன் வேதனையைக் கூட்டியது.  இந்த வேதனையிலிருந்து சிறிதாவது ஆசுவாசம் கிடைத்தது என்றால் அது அந்த மாணவர்கள் மூலமாகத் தான். அவர்கள் யாருமே அவனை ஒரு குற்றவாளியாகப் பார்க்காதது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவர்களிடம் அவன் தன் இளமைப் பருவத்தை நினைவுகூர்ந்தான். துடிப்பும், உற்சாகமும் நிறைந்த அந்த மாணவர்கள் அவன் மனக்காயத்தை ஆற்ற உதவினார்கள். குறிப்பாக சந்திரகுப்தனிடமும், சாரங்கராவிடமும்  இந்த ஒரு வார காலத்தில் ஒரு அன்பான நெருக்கத்தை அவனால் உணர முடிந்தது

 

விஷ்ணுகுப்தர் அவன் கடமையும் பிராயச்சித்தமும் பாரதத்தைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது என்றும் காந்தாரம் என்ற சிறுபகுதிக்குள் அது டங்கி விடக்கூடாது என்றும் வலியுறுத்திச் சொல்லியிருந்தார். அதனால் தான் விதி அவனை மைனிகாவிடம் மயங்க வைத்து ஆம்பி குமாரன் பிடியில் இருந்து அவனைத் தப்ப வைத்திருக்கிறது என்று சொல்லியிருந்தார். காந்தார அரசரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் எந்த நேரமும் அவர் மரணமடைந்து விடலாம் என்றும் கேள்விப்படுவதாக விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்ன போது அவனுக்கும் ஆம்பி குமாரன் அரசனாகி அவனுக்கு சேனாதிபதியாக பல கோமாளித்தனங்களில் ஈடுபட வேண்டியிருக்காமல் தப்பித்ததும் ஒரு விதத்தில் நிம்மதியாகத் தான் தோன்றியது.

 

விஷ்ணுகுப்தரின் பாரதம் குறித்த அக்கறையும், பக்தியும் சின்ஹரனுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது. பரதக்கண்டம் என்ற சொல்லே புராதனமாக மாறி விட்டிருக்கும் காலத்தில் ஒன்றுபட்ட பாரதம் என்கிற சிந்தனையை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆச்சாரியர் அவனுக்கு வினோதமாகத் தோன்றினார். அவனே காந்தாரம் தான் தன் தாய் பூமி என்று நினைத்து வந்திருக்கிறான்.  அவன் மன ஓட்டத்தைப் படித்ததனாலோ என்னவோ வேதங்களையும் உபநிஷத்துகளையும் தந்த இந்த புண்ணிய பூமியில், சிந்து கங்கை, யமுனை முதலான புண்ணிய நதிகள் ஓடும் தெய்வாம்சம் பொருந்திய இந்த பாரதத்தில் பிறந்திருப்பதே பெரிய பாக்கியம் என்று அவர் அவனுக்கும் ஒரு பெரிய பாடம் நடத்தினார். அவர் மன ஆழத்தில் இருந்து வந்த வார்த்தைகளும், அதைச் சொல்கையில் அவர் கண்களில் தெரிந்த ஜொலிப்பும் அவன் மனதிலும் அந்த சிந்தனைகளை வேரூன்றின.   

 

நள்ளிரவில் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே படுத்திருந்த சின்ஹரன் தன் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய ஒரு வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தான். அந்த வாய்ப்பு கிடைத்து ஒரு போர்க்களத்தில் இந்த பாரத மண்ணிற்காக உயிர் விடும் வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய நிம்மதியாகவும், வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த மாதிரியும் இருக்கும்… அவன் வாழ்வில் இத்தனை விளையாடிய விதி இனி வேறென்ன யோசித்து வைத்திருக்கிறதோ?... அதை எண்ணுகையில் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

 

வனைப் போலவே அந்த நள்ளிரவில் உறங்காமல் விஷ்ணுகுப்தர் ஒருவனுக்காகக் காத்திருந்தார். வேறு சிலர் மூலமாக வதந்திகளாக அவர் கேள்விப்பட்ட செய்திகள் எந்த அளவு உண்மை, முழு உண்மை என்ன என்று அவருக்குத் தெரிய வேண்டியிருந்தது. ஊர் உறங்கிய பின் தான் அவன் வர முடியும். அதுவும் ஒற்றர்கள் யாரும் அறியாதபடி அவன் வர வேண்டும்….

 

கதவு மெல்லத் திறந்தது. “வணக்கம் ஆச்சாரியரே” என்று மெல்லிய குரலில் சொல்லி தலை தாழ்த்தி வணங்கியபடி ஆம்பி குமாரனின் காவல் வீரன் வந்து நின்றான்.

 

கை உயர்த்தி ஆசி வழங்கிய விஷ்ணுகுப்தர் தாழ்ந்த குரலில் கேட்டார். “மன்னர் எப்படி இருக்கிறார் வீரனே?”

 

வீரனும் தாழ்ந்த குரலிலேயே பதில் சொன்னான். “நவமி திதியை அவர் தாண்ட மாட்டார் என்று ராஜவைத்தியர் கூறி விட்டார் ஆச்சாரியரே”

   

“வேறு என்ன செய்தி வீரனே?”

 

“அலெக்ஸாண்டர் பற்றி ஒற்றன் வந்து கூறியதைக் கேட்டதிலிருந்து இளவரசர் அலெக்ஸாண்டர் பற்றியே அனைவரிடமும் உயர்வாகப் பேசிக் கொண்டிருக்கிறார் ஆச்சாரியரே. நேற்று அமைச்சரை அழைத்துப் பேசிவிட்டு, ஒரு தூதனை அலெக்ஸாண்டரிடம் அவர் அனுப்பி இருக்கிறார்.  அதில் உள்ள தகவல் என்ன என்று தெரியவில்லை…”

 

விஷ்ணுகுப்தருக்கு அதில் என்ன தகவல் இருக்கும் என்பதை யூகிப்பது எளிதாகவே இருந்தது. ’மூடன்…. மூர்க்கன்….’ என்று மனதில் ஆம்பி குமாரனை விமர்சித்தாலும் தன் எண்ண ஓட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் கேட்டார். “வேறு என்ன செய்தி வீரனே?”

 

“சேனாதிபதி சின்ஹரனைக் கொல்ல இன்று காலை கேகயத்திற்கு சிலரை இளவரசர் அனுப்பி இருக்கிறார் ஆச்சாரியரே. சின்ஹரனின் பிணத்தைக் கொண்டு வந்தால் கூடுதல் பரிசளிப்பதாக வாக்களித்திருக்கிறார்…. இந்த ஒரு வார காலமாக அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது ஆச்சாரியரே. அவர் மதுவிலும் அந்தப்புரத்திலும் கழிக்கும் காலத்தை மிகவும் குறைத்திருக்கிறார்”

 

அவன் தொடர்ந்து சொன்ன தகவல்கள் முக்கியத் தகவல்களாக இருக்கவில்லை. ஆனாலும் முழு கவனத்துடனேயே அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டறிந்து விட்டு நன்றி கூறி அவனை அனுப்பி வைத்த விஷ்ணுகுப்தர் கண்களை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்தார்.


மறுபடியும் அறைக்கதவு மெல்லத் திறக்கும் ஓசை கேட்டது. கண்களைத் திறக்காமலேயே விஷ்ணுகுப்தர் சொன்னார். “வா. சந்திரகுப்தா?”

 

அவன் புன்னகைத்தான். அவன் எப்போதும் அவருக்குத் தன் வருகையை அறிவிக்க வேண்டியிருப்பதில்லை. “என்ன செய்தி ஆச்சாரியரே?”

 

வருத்தத்துடன் விஷ்ணுகுப்தர் கண்களைத் திறந்தார். “நல்ல செய்தி இல்லை சந்திரகுப்தா. ஆம்பி குமாரன் தன் தாய்நாட்டுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறான். அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்ட முடிவெடுத்து இருக்கிறான்…”

 

சந்திரகுப்தன் திடுக்கிட்டான். ”அவனுக்கு புத்தி கெட்டு விட்டதா ஆச்சாரியரே. சகோதர நாடான கேகயத்தை எதிரியாகப் பார்க்கிறான்.  எதிரியான யவன அரசன் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டுகிறான்….”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “அகங்காரமும், அறியாமையும் குடியேறியிருக்கும் புத்தி கெட்டுத் தான் போகும் சந்திரகுப்தா. ஆம்பி குமாரனின் புத்தி என்றோ கெட்டுப் போய் விட்டது. அரியணை ஏறப் போகும் இந்த வேளையில் அழிவுக்கும் அவன் விதை விதைத்து விட்டான்…”

 

திகைத்து நின்ற சந்திரகுப்தனிடம் ஆம்பி குமாரனின் காவல் வீரன் சொன்ன தகவல்களை எல்லாம் விஷ்ணுகுப்தர் தெரிவித்தார்.

 

“ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டருக்கு என்ன தகவல் அனுப்பியிருப்பான் என்று தெரியாமலேயே எப்படி அவன் நட்புக்கரம் நீட்டித் தான் தகவல் அனுப்பி இருப்பான் என்று நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”  

 

“ஆம்பி குமாரனின் அறிவு எப்படி வேலை செய்யும் என்பதை நான் அறிவேன் சந்திரகுப்தா. அலெக்ஸாண்டர் வரப் போகிறான் என்று தெரிந்தவுடன் படைகளைத் திரட்டித் தயார் நிலையில் நிற்க வைக்கும் முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக அவனைப் புகழ்பவன் வேறு என்ன தகவல் அனுப்பியிருக்க முடியும்?..”

 

சந்திரகுப்தன் கவலையுடன் கேட்டான். “இனி என்ன நடக்கும் ஆச்சாரியரே?”

 

விஷ்ணுகுப்தர் மிகுந்த வருத்தத்துடன் சொன்னார். “நல்லது நடக்க வழியில்லை சந்திரகுப்தா”

 

(தொடரும்)

என்.கணேசன்  

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.