என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Sunday, February 12, 2023

பிரசாதம் நூலுக்கு தினத்தந்தி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மதிப்புரை!

 இன்றைய தினத்தந்தி (12.02.2023)யில் என் பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்) நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது.


ஜனவரி 2023 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பிரசாதம் நூலுக்கும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் நூலுக்கும் மதிப்புரைகள் வந்துள்ளன.




நன்றி: தினத்தந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Sunday, October 30, 2022

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினத்தந்தியின் விமர்சனம்!

 தினத்தந்தியில் இன்று (30.10.2022) புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு விமர்சனம் இவ்வாறு வந்துள்ளது.






Thursday, October 13, 2022

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!

 அன்பு வாசகர்களே!


புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -




Sunday, October 9, 2022

தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூல் விமர்சனம்!

 இன்று (9 அக்டோபர் 2022) தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூலுக்கு வந்துள்ள விமர்சனம்.




Thursday, August 25, 2022

இன்று தினமலரில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்!

 இன்று (25.08.2022) தினமலர், மதுரை பதிப்பில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்!



 நன்றி: தினமலர்

Wednesday, August 17, 2022

சாணக்கியன் நாவலுக்கு துக்ளக்கில் வந்துள்ள விமர்சனம்!

 இந்த வார துக்ளக் (24.8.2022) இதழில் என் சாணக்கியன் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்-





நன்றி துக்ளக் 

Sunday, April 3, 2022

தினத்தந்தி, தினமலரில் சாணக்கியன் நாவல் மதிப்புரை!

என் வரலாற்று நாவல் சாணக்கியனுக்கு தினத்தந்தி மற்றும் தினமலர் பத்திரிக்கைகளில் வந்துள்ள மதிப்புரை! 






நன்றி தினத்தந்தி மற்றும் தினமலர் (மதுரை பதிப்பு)

Saturday, January 26, 2019

சத்ரபதி நாவல் விமர்சனம்


சத்ரபதி நாவல் படித்து முடித்து எனக்கு வந்த முதல் விரிவான விமர்சனம் இது. நிறை, குறைகள், ரசித்தது, ரசிக்காதது இரண்டையுமே சேர்த்து ஒரு முழுமையான விமர்சனம் எழுதிய திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
                                         - என்.கணேசன்

சத்ரபதி நாவல் விமர்சனம்

ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான். அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன். ஆனால் தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லை. சத்ரபதியைப் படித்து முடித்த பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. நாவல் அருமையிலும் அருமை.

உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புரிந்து கொண்டபின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.

உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் புரிந்து கொள்ள முடிந்தது.

ஷாஹாஜி, ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ், சிவாஜியின் நண்பர்கள், ஆதில்ஷா சுல்தான்கள், அப்சல்கான், செயிஷ்டகான், ஔரங்கசீப், ஜஹானாரா, ஜெப் உன்னிசா கேரக்டர்கள் மனதில் தங்கி விட்டார்கள். சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச் சின்ன கேரக்டர்களும் சூப்பர்.

சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மகாபுருஷனை பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள். அவனோடு வாழ்வது போலவே உணர வைத்ததற்கு நன்றி.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:

ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.

ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்

செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு தப்பித்த விதமும்.

சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்பு. திட்டமிட்ட விதமும், அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..

சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில் வெற்றி பெற்ற சம்பவம்.

ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச் சந்தித்துப் பேசும் இடம். முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும் பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க முடிந்ததில்லை. அப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள். இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த குறிப்பிட்ட இடம் சூப்பர்)

ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும் நிகழ்வு. அந்த மூதாட்டியின் மனமும், சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.

நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:

மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றன. சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது.

-     சங்கர சுப்பிரமணியன்


Wednesday, May 18, 2016

மகாசக்தி மனிதர்கள் நூல் விமர்சனம்!

ன்று (18-05-2016) தினத்தந்தியில் என் மகாசக்தி மனிதர்கள் நூலின் விமர்சனம் வந்துள்ளது.


ன்மிகம் என்னும் கடலில் அதன் ஆழம் வரை சென்று முத்து எடுத்த அரிதான மனிதர்களையே ‘மகாசக்தி மனிதர்கள்’ என்று போற்றுகிறோம். 

அத்தகைய மனிதர்களைப் பற்றி தினத்தந்தி வெள்ளி மலரில் என்.கணேசன் எழுதிய தொடர் இப்போது நூலாக வெளி வந்துள்ளது. 

இந்த நூலில் ஆதிசங்கரர், த்ரைலைங்க சுவாமிகள், மகாஅவதார் பாபாஜி, யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, ஷீரடி சாய்பாபா போன்ற மகான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை சுவையாக எடுத்துக் கூறுகிறார்.

மேலும், நினைக்கும் மணத்தையும், பொருளையும் வரவழைத்த விசுத் தானந்தர், விஷத்தை உண்ணும் யோகி நரசிங்க சுவாமி, கண்களைக் கட்டிக் கொண்டு கரும்பலகையில் எழுதுவதைப் படித்துக் காட்டும் குடா பக்ஸ், அமெரிக்காவில் மழையை வரவழைத்த சுவாமி லக்ஷ்மண்ஜு ரைனா, உணவில்லாமல், நீரில்லாமல் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிரஹலாத் ஞானி, இதயம் நின்றும் இறக்காத சுவாமி ராமா, அந்தரத்தில் மிதக்கும் தமிழ்நாட்டு யோகி சுப்பையா புலவர், மண்ணில் 40 நாட்கள் புதைந்து உயிரோடு வெளிவந்த யோகி ஹரிதாஸ், வெறும் கைகளால் புலிகளை அடக்கிய சோஹம் சுவாமி, மற்றவர்களின் எண்ணங்களையும் அறிய முடிந்த ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, இறந்த மூன்று நாட்களில் உயிர்தெழுந்த ஷீரடி சாய்பாபா என்று மகான்கள் வாழ்வில் நடந்த ஏராளமான செய்திகளை ஒரு நாவலைப்போல சுவாரசியத்துடன் விளக்கியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. 

நன்றி: தினத்தந்தி 18.05.2016

Tuesday, March 31, 2015

தினமலரில் “இங்கே நிம்மதி” நூல் விமர்சனம்!

தினமலர் திருச்சி பதிப்பில் என் நூல் “இங்கே நிம்மதி”பற்றிய விமர்சனம்  26-03-2015 அன்று வந்து உள்ளது.




இந்த நூலை வாங்கவும், தங்கள் ஊரில் கிடைக்கும் இடங்களை அறியவும் பதிப்பாளரை 9600123146, 7667886991 எண்களில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்
என்.கணேசன்

Wednesday, February 25, 2015

துக்ளக்கில் என் நூல் “இங்கே நிம்மதி” விமர்சனம்!


நன்றி: துக்ளக் 04.03.2015

நூலை வாங்கிப் படிக்க பதிப்பாளரை 9600123146, 7667886991 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்

Wednesday, November 5, 2014

தினத்தந்தியில் அமானுஷ்யன் விமர்சனம்!


இன்று (5.11.2014) தினத்தந்தியில் அமானுஷ்யன் விமர்சனம் வந்துள்ளது.

பரபரப்பும், சுவாரசியமும் நிறைந்த அமானுஷ்யன் நாவலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
என்.கணேசன்

Monday, May 19, 2014

தினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்

இன்று தினமணியில் வெளியான பரம(ன்) இரகசியம் விமர்சன்ம்


காதல், குடும்பம், பாசம், ஆழ்மன சக்தி, ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியில் ஆராய்ச்சிகள், தத்துவம், சஸ்பென்ஸ் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கிய கலவை நாவல் இது. இருப்பினும் இந்நாவலில் ஆன்மிக உணர்வே தூக்கலாகத் தெரிகிறது. நாவல் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் காட்சி தந்து நமது மனதில் நிறைந்து விடுகிறது. அத்துடன் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தில் காண்பதைப் போல நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். இத்துடன் மாமியார்-மருமகள், தாய்-மகன், தந்தை-மகள், பாட்டன்-பேரன், பாட்டி-பேரன் என பல்வேறு கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கணபதியின் கதாபாத்திரமும், ஈஸ்வரின் கதாபாத்திரமும் மானுட மேன்மையை உணர்த்துவதாக உள்ளன. இத்தகைய மனிதர்கள் உலகில் ஆங்காங்கே பிறந்து வளர்ந்தால் உலகமே அன்பு மயமாகத் திகழும். சில மெகா தொடர்களில் ஏராளமான கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டு, சிக்கல்களை விடுவிக்கத் தெரியாத நிலையில் திடுதிடுப்பென சீரியலை முடித்துவிடுவார்கள். அதுபோலன்றி, இந்நாவலின் இறுதி முடிவு வாசகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவலைப் படிப்பது ஓர் இனிய அனுபவம்.


நன்றி: தினமணி-நூல் அரங்கம் 19-05-2014

Wednesday, April 9, 2014

தினத்தந்தியில் ‘பரம(ன்) இரகசியம்’ புத்தக மதிப்புரை



இன்று (09-04-2014) தினத்தந்தியில் பரம(ன்) இரகசியம் நாவலின் விமர்சனம் வந்துள்ளது.

பரம(ன்) இரகசியம் நாவல் படித்து முடித்த வாசகர்களின் பாராட்டுகள் தொடர்ந்து எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பலர் இந்த நாவலை ஒரு கதையாக நினைக்க முடியவில்லை என்றும், படித்து முடித்த பின் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒருசில நாட்கள் தொடர்ந்து இருக்கின்றன என்றும் பலப்பல வார்த்தைகளில் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து வருகிறார்கள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்று வள்ளுவர் கூறிய நிலையிலேயே நான் இருக்கிறேன். இந்த நாவலை எழுதி முடித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடப் பலமடங்கு அதிக மகிழ்ச்சியையும், நிறைவையும் நான் உணர்கிறேன்.

இந்த நாவல் மேலும் பல வாசகர்களை தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. வாசகர்களின் வாய்வழி விமர்சனங்களும், கண்டிப்பாகப் படிக்கச் சொல்லும் மனம் உவந்த பரிந்துரையும் இந்த நாவலின் மிகப்பெரிய விளம்பரமாகிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.

படித்துப் பாராட்டிய, மற்றவர்களுக்கு பரிந்துரை செய்து கொண்டிருக்கிற, நான் முகமறியா அந்த வாசக அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- என்.கணேசன்


Friday, March 14, 2014

தினமலரில் ‘ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?’ விமர்சனம்

தினமலர் (திருச்சி பதிப்பு) நாளிதழில் 9.3.2014 அன்று ’ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?’ விமர்சனம் வந்துள்ளது.


நன்றி: தினமலர் (9.3.2014)

Sunday, November 10, 2013

தினமணியில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் பற்றி...


அன்பு வாசக நண்பர்களே,

வணக்கம். தினமலர், தினத்தந்தி, துக்ளக்கைத் தொடர்ந்து தினமணியில் இன்று “இந்த வாரம்” பகுதியில் நமது ”ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகம் பற்றி சிறப்பாக திரு.கலாரசிகன் எழுதியுள்ளார்.

பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள், சுயமுன்னேற்றம், வசியம், மனோதத்துவம் சார்ந்த நூல்கள் படிப்பதில் ஆர்வமில்லை என்று குறிப்பிடும் அவர் தொடர்ந்து எழுதியுள்ளதாவது -

“அன்று ஏனோ வித்தியாசமான எண்ணம். மாறுதலுக்காக என்.கணேசன் என்பவர் எழுதிய “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்துப் படித்தேன். கோவையில் வங்கி ஒன்றில் பணிபுரிபவர் என்று அட்டை குறிப்பு சொன்னது. புரட்டிப் படிக்கப் படிக்க எத்தனை எத்தனையோ புதுப்புது செய்திகள், எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள். நிஜமாகவே நான் வசமிழந்து விட்டேன்.

விபத்துக்களை முன்கூட்டியே அறிந்தவன், இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டிய ஆழ்மனசக்தி, மறுபிறவி நினைவுகள் உண்மையா?, நோய்களுக்கு எதிராக ஆழ்மனசக்தி ஆகிய கட்டுரைகள் எனக்கு புதியதொரு பார்வையை ஏற்படுத்தின.

ஒருமுறை படித்து விட்ட புத்தகத்தை இப்போது மீண்டும் ஒருமுறை படிக்க எடுத்து வைத்திருக்கிறேன். நான் முதலில் சொன்ன கருத்துக்களை இனிமேல் மாற்றிக் கொண்டாக வேண்டும். மொழிபெயர்ப்பு உள்பட!”

நன்றி: தினமணி - 10-11-2013

(தற்போது தான் எனக்கு திரு கலாரசிகன் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியர் உயர்திரு வைத்தியநாதன் அவர்கள் என்கிற உண்மை தெரிந்தது. அவர் போன்ற ஒரு மனிதர் இந்த நூலைப் படித்ததோடு இதைப் பற்றி நல்ல விதமாக எழுதவும் செய்தது என்னை நெகிழ வைக்கிறது.

அவருக்கும், இந்த நூலை எழுதும் போது பாராட்டி ஊக்குவித்த அனைத்து அன்பு வாசகர்களுக்கும்  முறையாக நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.  நன்றி... நன்றி... நன்றி.... 

உங்கள் கணேசன்)


http://epaper.dinamani.com/c/1894393

Saturday, September 21, 2013

தினமலரில் “சங்கீத மும்மூர்த்திகள்” விமர்சனம்

சங்கீத மும்மூர்த்திகள்


சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் இசைக்கே வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்கள். இவர்கள் அருளிய சில முக்கியப் பாடல்களின் பின்னணியை அறிமுகப்படுத்தும் இந்த நூல் எழுத்து வடிவக் கச்சேரியாக இருக்கிறது.

ரசனை நிறைந்த இந்த நூலில் இருந்து சில அரிய தகவல்கள்............->


நன்றி: தினமலர் (திருச்சி) 17-09-2013

நூலில் இருந்து சில சுவையான தகவல்கள்

ஒரு சமயம் தஞ்சை சமஸ்தானத்தில் பூலோக சாப கட்டி பொப்பிலி கேசவையாஎன்ற வித்வானுடன் சியாமா சாஸ்திரி ஒரு சங்கீதப் போட்டியில் ஈடுபட நேர்ந்தது. தாள சாஸ்திரத்தில் மிக வல்லவரான பொப்பிலி கேசவையா தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வத்துடன் அறிவிக்க தஞ்சையின் மானம் காக்கும் பொறுப்பு சியாமா சாஸ்திரிகள் மீது விழுந்தது. கோயிலிற்குச் சென்று பங்காரு காமாட்சி அம்மன் முன் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்த அவர் பின் மனமுருக சிந்தாமணி ராகத்தில் “தேவி ப்ரோவா சமயமிதே (தேவி என்னை நீ காக்க வேண்டிய நேரம் இது) என்று பாடினார். பின் தைரியம் வந்தவராகப் போட்டியில் கலந்து கொண்டார். பொப்பிலி கேசவையா கடினமான நீளமான  ஸிம்ஹநந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சாஸ்திரிகள் அதைக் கிரகித்து உடனே திரும்பப் பாடி, இன்னொரு கடினமான சரபநந்தன தாளத்தில் புதிதாக ஒரு பல்லவியை பாடி அந்தப் போட்டியில் வெற்றி கண்டார்.

அக்காலத்தில் புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடி மகிழ்விப்பது புதிதல்ல. எனவே தியாகராஜரைத் தமது சபைக்கு அழைத்து தம்மைப் பற்றியும் பாடச் செய்ய வேண்டுமென சரபோஜி விரும்பினார். பட்டு, பீதாம்பரம், பொற்காசுகள் எல்லாம் கொடுத்தனுப்பி அரசவைக்கு வந்து தன்னைப் பாட மன்னர் தியாகராஜருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தியாகராஜர் அரசவைக்கு செல்ல மறுத்து ‘நிதிசால சுகமாஎன்ற கிருதியைக் கல்யாண இராகத்தில் பாடினார்.
(நிதியும் செல்வமும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா, அல்லது ஸ்ரீராமனின் சன்னிதியில் சேவை புரிவது அதிக சுகம் தருமா? மனமே, இதற்கு உண்மையான பதிலைக் கூறு. தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவை தருமா, அல்லது தசரத குமாரன் இராமனைத் தியானித்துப் பாடல் அதிக சுவை தருமா? அடக்கம், சாந்த குணங்கள் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா? அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா அல்லது நல்ல மனம் படைத்த தியாகராஜன் வணங்கு தெய்வத்தைத் துதித்தல் சுகமா?)
தியாகையர் மனதிற்கு புத்தி சொல்லியும், நியாயம் சொல்லியும் பாடி இருக்கும் பாடல்கள் பலவும் நமக்காகவும், நம் மனதிற்காகவும் பாடப்பட்டது போலத் தோன்றும் அளவு இயல்பானவை. சில பாடல்களை இங்கே உதாரணத்திற்குப் பார்ப்போம்.
ஓ மனசா! ஸ்ரீ ஸாகேத ராமுனி பக்தியனே
சக்கனி ராஜ மார்க்கமுலு உண்டக சந்துல தூரனேல?
ஏ மனமே! ஸ்ரீராமபக்தி என்னும் அகலமான ராஜபாட்டை ஒன்று கடைத்தேறுவதற்கு இருக்கும் போது தீயவழிகளான சந்து பொந்துகளில் ஏன் நுழைந்து கொள்கிறாய் என்கிறார். கரஹரப்ரியா ராகத்தில் அமைந்தது இந்த அற்புதமான கிருதி. 

*முத்துசாமி தீட்சிதர் சாதி மத இன வேறுபாடுகளைப் பார்க்காதவர் என்பதற்கு சான்றாக அவருடைய சீடர்களில் பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். கமலம் என்ற தேவதாசியும் அவருடைய சிஷ்யையாக இருந்தாள். முத்துசாமி தீட்சிதரிடம் இசை கற்றுக் கொண்டிருந்த ஒரு சமயம் ஏதோ வேலையாக வீட்டினுள் சென்ற கமலம் முத்துசாமி தீட்சிதரின் மனைவி வறுமையின் காரணமாக அன்று சமைக்க ஏதும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மிகுந்த மனவருத்தம் அடைந்தார். உடனே தன் கையில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். 

விஷயம் அறிந்த முத்துசாமி தீட்சிதர் கமலத்தின் தங்க வளையல்களைத் திருப்பிக் கொடுத்து விட்டுச் சொன்னார். “கமலம். இன்று நீ எங்களுக்கு உதவலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு நீ எங்களுக்கு உதவ முடியும்? எங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நான் வணங்கும் இறைவன் தியாகராஜனுக்கு மட்டுமே உரியது. அவன் மீது நான் வைத்திருக்கும் பக்தி உண்மையானால் அவன் கண்டிப்பாக உதவுவான்என்று கூறிவிட்டு திருவாரூர் கோயிலில் இறைவன் தியாகராஜனைப் பார்த்து யதுகுல காம்போதி ராகத்தில் “தியாகராஜம் பஜரேகிருதியை மனமுருகப் பாடினார்.

அவர் வீடு திரும்பிய போது ஒரு வண்டி நிறைய உணவு தானியங்களும், சமையலுக்குத் தேவையான மற்ற பொருள்களும் இருந்தனவாம். வியப்பு மேலிட விசாரித்த போது தஞ்சாவூர் மன்னரின் மந்திரியார் ஒருவர் திருவாரூர் வந்து தங்க இருந்ததால் அரண்மனையில் இருந்து அந்த தானியங்களும், மற்ற பொருள்களும் முன்பே அனுப்பப்பட்டதாகவும் திடீரென்று அவர் வருகை ரத்தானதால் அந்த வண்டிப் பொருள்களை நல்ல வழியில் செலவிட திருவாரூரில் இருந்த அரசு அதிகாரி முத்துசாமி தீட்சிதருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிந்தது. முத்துசாமி தீட்சிதர் தன் நம்பிக்கைக்கு உடனடியாகப் பதில் சொன்ன இறைவனின் அருளில் மனம் நெகிழ்ந்து போனார். 

இது போல் சுவாரசியமான பல தகவல்கள் கொண்ட இந்த நூலைப் பெற விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க  9600123146

Saturday, September 14, 2013

தினமலரில் ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ விமர்சனம்

என்னுடைய “வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூலிற்கு தினமலர், திருச்சி பதிப்பில்
3-9-2013 அன்று வந்த விமர்சனம்  இது ---->


அன்புடன்,
என்.கணேசன்

என்னுடைய இந்த  நூலையும், மற்ற நூல்கள்
1)பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தின் தேடல் (ரூ100/-)
2)ஆழ்மனதின் அற்புத சக்திகள்  (ரூ200/-)
3) சங்கீத முமூர்த்திகள் (ரூ75/-)

 வாங்கும் வழிமுறை
 வணக்கம்.

தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை  மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும்.  நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை  எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com  )மூலமோ, 

மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

 

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் 

blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.

எங்களது வங்கி எண்:


name: blackhole media publication ltd

indian overseas bank, current/account no:165302000000377

branch:alandur, chennai

ifsc code: ioba 0001653

              மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க  9600123146

             Our Postal & Courier Address is:

             BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,

             No7/1 3rd Avenue, Ashok Nagar, 

             Chennai-600 083 

             Tel : 044 43054779