சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 17, 2015

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 12



·       மலை இலக்கானால் குருடனும் அம்பெய்துவான்.


·       மரம் சுட்டுக் கரியாக வேண்டுமே அல்லாமல் மயிர் சுட்டுக் கரியாகப் போகிறதா?


·       வணங்கின புல் பிழைக்கும்


·       முட்ட நனைந்தவனுக்கு ஈரமில்லை. முழுதும் கெட்டவனுக்குத் துக்கமில்லை.


·       முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்.


·       வலிமைக்கு வழக்கில்லை.


·       கல்யாண வீட்டில் பந்தற்காலைக் கட்டி அழுகிறவள் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?


·       மரத்திலிருந்து விழுந்தவனை மாடும் மிதித்தது போல.


·       ஒரு ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறுவென்று சுற்றுகிறது.


·       வளர்ந்த உயரத்தை வாசற்படியிலா காட்டுவது?


·       வியாதிக்கு மருந்து உண்டு. விதிக்கு மருந்து உண்டா?




தொகுப்பு: என்.கணேசன்

3 comments: