சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 29, 2021

இல்லுமினாட்டி 100




மிருதுளா தன் வாழ்க்கைக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. செல்லமா வளர்ந்தேன். நல்லா படிப்பேன். பள்ளிக்கூடத்துல எல்லாப் போட்டிகள்லயும் கலந்துக்குவேன். ஒவ்வொன்னுலயும் ஏதாவது ஒரு பரிசு வாங்காம இருக்க மாட்டேன். அப்பா என்னைப் பையன் மாதிரி வளர்த்தார். சுதந்திரம் கொடுத்தார். பத்தாம் வகுப்புல நான் மாவட்டத்துல முதல் மார்க் வாங்கினேன். ஆனால் ரிசல்ட் வந்த நாள் தான் என் அப்பா மாரடைப்புல காலமானார். அப்புறம் அம்மாவோட தம்பி வீட்டுல அடைக்கலம்... அவருக்கு ரெண்டு பொண்ணுங்க. என்னை விட வயசுல சின்னவங்க. கல்லூரிப் படிப்பு மாமா தயவுல கிடைச்சுது. அங்கே படிக்கறப்ப தான் கூடப்படிச்ச ரகு கூட காதல் வந்தது...”

வீட்ல மாமா எங்க காதலை ஏத்துக்கல. ஜாதி மாத்தி எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தா அவரோட பொண்ணுங்களுக்கு நல்ல வரன் கிடைக்காதுன்னு அவர் கவலைப்பட்டார். யாரும் இல்லாத காலத்துல ஆதரவு தந்தவர், படிக்க வச்சவர்ங்கற நன்றிக் கடன்ல காதலை மறந்து அவர் பார்க்கிற பையனைக் கட்டிக்க நான் தயாரானேன். ரகுவுக்கு அதில் வருத்தம்னாலும் என்னைப் புரிஞ்சுகிட்டு நாகரிகமா ஒதுங்கிட்டார்...”

உன் அப்பாவோட என் கல்யாணம் ஆச்சு. ஒரு வருஷத்துல நீயும் பிறந்துட்டே. உன் அப்பாவுக்கு ஈகோ அதிகம். நான் அவரை விடப் புத்திசாலியாயிருந்ததும், துணிச்சலாயிருந்ததும் அவருக்குச் சுத்தமா பிடிக்கலை.  மனைவிங்கறவ கணவனைக் கேட்டு தான் எல்லாம் செய்யணும், அடங்கி நடக்கணும், தானா சின்ன முடிவு கூட எடுக்கக்கூடாது, வெளியாள்கள் கிட்டப் பேசக்கூடாது, அழகா டிரஸ் பண்ணிக்கக்கூடாது, அவர் கூட இருந்தால் மட்டும் தான் வெளியே போகணும், இல்லாட்டி போகக் கூடாதுன்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவருக்கு இருந்துச்சு. என்னால அது முடியல சிந்து. ஒரு ஜெயில் வாழ்க்கையை விடக்கொடுமையாய் நான் உணர்ந்தேன். ஏதாவது நியாயம் கேட்டாலோ, எதிர்த்துப் பேசினாலோ அப்புறம் ஒரு மாசம் மனுஷன் பேச மாட்டார். என் கிட்டே மட்டுமல்ல குழந்தை உன்னைக் கூட எடுத்துக்க மாட்டார். எங்க மாமாவைக் கூப்பிட்டனுப்பி புகார் சொல்வார். என் மேல தப்பில்லைன்னு தெரிஞ்சாலும் மாமா அவரைத் திருப்திப்படுத்த எனக்கு புத்திமதி சொல்லிட்டு போவார் ...”

ஒரு தடவை என் மாமாவுக்கே சலிச்சுப் போச்சு. அவர் சொல்ற புகார் மகா அபத்தமாய் பட்டுடுச்சு. ”எந்தக் காலத்துல இருக்கீங்க மாப்பிள்ளை. படிச்சவங்க நீங்க இப்படிச் சொல்றதே தப்பில்லையான்னு அவர் கேட்டுட்டார். அதுல இருந்து அவர் மேல கூட உன் அப்பாவுக்குக் கோபம் வந்துடுச்சு. அப்ப இருந்து மாமாவுக்கு என் வீட்டுக்கு வர அனுமதி இல்லை. அதே மாதிரி எனக்கும் அவர் வீட்டுக்குப் போக அனுமதியில்லை... எங்கம்மா இறந்தப்ப மட்டும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வர அனுமதி கொடுத்தார். ஆனால் மாமா வீட்டில் அம்மா பிணம் இருந்ததால உங்கப்பா அவளைப் பார்க்கக்கூட வரலை... எங்கம்மா கருமாதி சடங்குகள் எதுக்கும் போக எனக்கும் அனுமதி இல்லை.”

அதுக்கப்புறம் எனக்கு ரொம்பவே வெறுத்துப் போச்சு.  அந்த ஆள் கூட வாழ எனக்குப் பிடிக்கலை. அவரை விவாகரத்து பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்குத் தெரிஞ்ச ஒரே வக்கீல் ரகு தான்... ரகு அப்ப தான் ப்ராக்டிஸ் ஆரம்பிச்சு இருந்தார். அவர் கிட்ட போய் என் நிலைமையைச் சொன்னேன். அவர் விவாகரத்து வாங்கித் தர்றது மட்டுமில்லாமல் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னார்.  உன்னையும் சேர்ந்தே ஏத்துக்கறதா சொன்னார்.  அந்தப் பெருந்தன்மையை நான் எதிர்பார்க்கலை.”

வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட எங்கள் முடிவைச் சொன்னேன். அவர் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ஆத்திரத்தில் கண்டபடியெல்லாம் கேவலமாய் பேசினார், அதுக்கெல்லாம் நான் அசராததைப் பாத்து பிறகு அமைதியானார். பிறகு உன்னையும் என்னையும் மாறி மாறி ரொம்ப நேரம் பார்த்தார். கடைசில  அவர்நீ வேணும்னா போய்க்கோ. நான் என் குழந்தைய விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னார்.”

ரகு கூட வீட்டுக்கு வந்து உன் அப்பா கிட்ட பேசினார். அவரையும் கேவலமா பேசி உன் அப்பா வெளிய அனுப்பிச்சிட்டார்.  நான் என்ன ஆனாலும் சரி அவர் கூட வாழ மாட்டேன்னு உறுதியா நின்ன பிறகு அவரும் உறுதியாவே சொன்னார். ”விவாகரத்து வேணும்னா தர்றேன். ஆனா எனக்குன்னு இந்த உலகத்துல இருக்கிறது என் பொண்ணு ஒருத்தி தான். அவளை மட்டும் விட்டே தர மாட்டேன். எவ்வளவு வருஷமானாலும் சரி, எத்தனை செலவானாலும் சரி சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்னு பிடிவாதமா சொன்னார்.”

ரெண்டு பேரும் சம்மதிச்சு விவாகரத்து கேட்டால் ஓரளவு சீக்கிரமே விவாகரத்து கிடைக்கும். அப்படியில்லாட்டி விவாகரத்து கிடைக்க குறைந்தது ஏழெட்டு வருஷமாவது ஆகும்ங்கற நிலைமை இருந்தது. அது வரைக்கும் அந்த ஆள் கூட வாழ்றதுல எனக்கு உடன்பாடு இருக்கலை. ஆனாலும் கடைசி வரைக்கும் தொடர்ந்து அந்த ஆள் கிட்ட உன்னை எடுத்துட்டு போறேன்னு கெஞ்சியிருக்கேன் சிந்து. அந்த ஆள் ஒத்துக்கலை. அது மட்டுமல்ல. அந்த ஒரு மாசம் உன் மேல உயிரையே வெச்சிருக்கற மாதிரி நடிச்சார்; எப்பப் பாரு உன்னை அவரே தூக்கி வெச்சிருப்பார்.... விவாகரத்துக்குக் கையெழுத்துப் போடணும்னா உன் தலை மேல கை வெச்சு எப்பவுமே உனக்காக உரிமை கொண்டாடி வர மாட்டேன்னும், உன்னைப் பார்த்துப் பேச நான் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேன்னும் சத்தியம் பண்ணித் தரச் சொன்னார்.”

எனக்கு அந்த ஆள் கூட அதுக்கு மேல மல்லுக்கட்ட முடியல. யோசிச்சுப் பார்த்தப்ப உன் மேல எனக்கு இருக்கிற உரிமை அவருக்கும் இருக்குன்னு தோணுச்சு. மனைவியைக் கொடுமை பண்றவன் கூட அவன் ரத்தம்கிறதால குழந்தைகள் கிட்ட நல்லபடியா இருக்கிறதை நானும் பல இடங்கள்ல பார்த்து இருக்கேன். அதையெல்லாம் நினைச்சு அழுதுகிட்டே உன் வாழ்க்கைல நான் எப்பவும் எந்த விதத்துலயும் குறுக்கிட மாட்டேன்னு உன் தலை மேல் சத்தியம் பண்ணிக் குடுத்தேன் சிந்து.... பிறகு தான் விவாகரத்துக்குக் கையெழுத்துப் போட்டார். விவாகரத்து கிடைச்சவுடனேயே யார் கிட்டயும்  சொல்லிக்காமல் உன்னைத் தூக்கிட்டு ஊரை விட்டும் போயிட்டார்.... எங்கே போனீங்கன்னும் தெரியல. அதே ஊர்ல இருந்திருந்தா தெரிஞ்சவங்க மூலமா என்ன நடக்குதுன்னாவது எனக்குத் தெரிஞ்சிருக்கும்... சத்தியமும் செஞ்சு குடுத்திருந்ததால நான் உன்னைத் தேடவும் முயற்சி எடுக்கல. எங்கேயோ நீ நல்லாயிருப்பாய்னு நம்பிக்கையோட இருந்துட்டேன்.. அப்படி உன் மேல வெறுப்பிருக்கிற ஆள் நான் கெஞ்சினப்ப என் கூடவே அனுப்பிச்சு அந்த ஆளோட அடுத்த குடும்பத்தோட நிம்மதியாய் இருந்திருக்கலாமே. அதை ஏன் செய்யலன்னு எனக்கு இன்னும் புரியல சிந்து....”

இன்னைக்கு உன்னைப் பார்த்தப்ப கூட அம்மாவை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து வந்திருக்கிறதாய் நினைச்சேனே ஒழிய ஒரு ஓடிப்போன அம்மா கிட்ட நியாயம் கேட்கற மகளாய் வந்திருப்பாய்னு நினைச்சே பார்க்கலை...”

மிருதுளா மகள் தோளில் சாய்ந்து அழுதாள். அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கையில் அவள் மகள் ஒவ்வொரு நிமிடமும் சித்திரவதைப் பட்டு வாழ்ந்து கொண்டிருந்ததை அவளால் தாங்க முடியவில்லை. சிந்துவின் கண்களும் மெல்லக் கலங்க ஆரம்பித்தன.

சிந்துவுக்கு நடந்திருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் தந்தையின் மகாமட்டமான குணத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் காரணத்தை உளவியல் நிபுணர்கள் கூட்டாக ஆராய்ந்தாலும் கண்டுபிடிக்க முடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளே காரணங்களை யோசித்துப் பார்த்தாள். ஆரம்பத்தில் இருந்தே அம்மாவைப் பற்றி ஒரு முற்றிலும் பொய்யான பிம்பத்தை அப்பா அவள் மனதில் மட்டுமல்ல, மற்றவர்கள் மனதிலும் உருவாக்கி வைத்தது தன் மேல் குற்றமில்லை என்று காண்பித்துக் கொள்வதற்காக இருக்கலாம். சிந்துவிடமே அந்தப் பொய்யைச் சொல்லி நம்ப வைத்து தாயை வெறுக்க வைத்ததும், மிருதுளாவுடன் மகளை அனுப்பாமல் இருந்ததும் மிருதுளாவைத் தண்டிக்கும் முயற்சியாக இருந்திருக்கலாம். மிருதுளாவின் தோற்றத்திலேயே வளர்ந்து வந்த மகள் அவளைப் போலவே புத்திசாலியாகவும் இருந்தது அவர் மனதில் மேலும் வெறுப்பை வளர்த்தியிருக்கலாம்...

காரணங்கள் என்னவாக இருந்தாலும் அவரால் அவள் இழந்தது ஏராளம். இழக்கவிருந்ததும் ஏராளம்.... க்ரிஷ் மட்டும் நெருக்கடியைத் தந்து அவளைக் கிளப்பியிருக்காவிட்டால் இங்கு வந்திருக்க மாட்டாள். அவள் தாயைப் பற்றிய தவறான அபிப்பிராயத்திலேயே வாழ்ந்து இறந்துமிருப்பாள்.

(தொடரும்)
என்.கணேசன்




11 comments:

  1. Sindhu's father is a heartless scoundrel. He made everyone think ill of Sindhu's mother. Very touching.

    ReplyDelete
  2. hmm. nice going..

    ReplyDelete
  3. சிந்துவுக்கு இது ஒரு மிகப் பெரிய திருப்புமுனை ... இனி அவள் எடுக்கப் போகும்ஸமுடிவு என்ன??? எனபது புதிராகவே உள்ளது....

    ReplyDelete
  4. Mruthula's narrative is not very convincing or strong. It is a let down to her character. Her husband, no doubt was bad, but not so cruel towards her for her to totally abandon her own girl child in this manner to get a quick divorce. Sounds more like she was ready to do anything to get married to Raghu. I am a very regular reader of Mr. Ganesan and highly appreciate and enjoy the reading. His stories are full of wisdom and very natural. I feel this is the first time, not convinced or not that happy. May be the author is portraying her a bit weak and slightly selfish, which is also not that uncommon.
    I live in UAE, difficult to get his books ordered. Thanks to Mr. Ganesan for his lovely writings and sharing in his blog.
    Regards Kannan

    ReplyDelete
    Replies
    1. Mr Kannan, we have to understand the circumstances under which Mruthula had taken the drastic step. No one can live for entire life under torture. You have commented "not so cruel to her". But he was unforgivably cruel. I don't find fault in the decision taken by Mruthula.

      Delete
    2. Well said, agreed. Thanks
      Regards Kannan

      Delete
    3. Mr Kannan,

      Why can't one choose their happiness..if mruthula sacrificed her entire life by living with that doubting husband who has no empathy just for the sake of their child. Both are responsible for the child (Sindhu) well-being right ? Mrithula tried what she could. How long this society expect a woman to sacrifice all the time?

      Delete
    4. Agree with kannan. What if she lies to sindhu about her husband? Sindhu should not believe or accept her mother. Is promise more important than her daughter well being. 0

      Delete
    5. @Jeni: I am fully with you that no woman should tolerate such behavious from men, as a wife, mother, sister or a daugher. My intension is not to expect her to sacrifce her entire life. However, I am not convinced with the narritive for her, as a mother, to "abandon" her child. Let us see who Mruthula was: Very intelligent, Very brave, emotionally strong and was asking for justice, express her views to her husband.
      Now the reason given for her to promise "never to claim any right over her girl child, never come to see her or talk to her" : 1) I begged / requested him - She knew the egoistic character of her husband and this would never work. 2) It would take many years to get diverse, living with him for so long was not possible for her - She could live separately. At least Raghu would be willing to support her till she finds some financial independance. 3) Her daughter was his own blood and so he would treat her well - She knew how her husband did not even carry his child / care for her months together when in angry. How could she believe him totally in just one month of showing affection? 4) He has equal right - This is what i could not digest. What about Mruthula's right? Why did she let go of her right so easily? What about the child's right over her mother?
      Generally woman will not seek for diverse so easily unless otherwise so pushed. Leaving a girl child is much more difficult for a mother. In this narrative, Mruthula did not even attempt to fight in the court at least for few months / year to get the custody of her child even having Raghu, a lawyer for her support. In just over a month, she decided to leave the small child entirely to her "bad" husband with whom she could not even imagine to continue to live. A strong mother could take this kind of extreme decision so quickly if there are some extreme situations, cruelty or life threating either for her child or for others. I don't see this stongly in the narrative. No woman should make such a promise for a quick diverse. She should fight for her right at least to a point where the fight is not feasible anymore. However this is just my feeling and opinion only. Thanks.

      Delete
  5. கடந்த சில வாரங்களாகவே க்ரிஷ், வில்வம், அமானுஷ்யன் போன்றோர் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்தை விட சிந்து என்ற செய்யப் போகிறாள் என்ற ஆர்வம்தான் ஒவ்வொரு வாரமும் அதிகமாகிறது. சிந்து கதாபாத்திரம் சில வாரங்களாக மற்ற கதாபாத்திரங்களை overtake செய்கிறது.

    ReplyDelete