சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, June 18, 2016

”புத்தம் சரணம் கச்சாமி” நாவல் வெளியீடு!


அன்பு வாசகர்களே!

வணக்கம். நீங்கள் ஆவலோடு படித்து வந்த ’புத்தம் சரணம் கச்சாமி’ நாவல் இன்று வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட மைத்ரேயன் எங்கு கொண்டு செல்லப்படுகிறான், லீ க்யாங், மாரா என்ற இரண்டு பெரிய எதிரிகளிடம் அவன் நிலை என்ன, அக்‌ஷய்க்கு மைத்ரேயனும், கௌதமும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிகிறதா, அவர்களைக் காப்பாற்றுகிறானா, போலி மைத்ரேயனை லீ க்யாங் அரங்கேற்றம் செய்யும் திட்டம் நிறைவேறுகிறதா, லீ க்யாங், மாரா, மைத்ரேயன் என்ற மும்முனை சக்தி சதுரங்க ஆட்டத்தில் ஒருவருக்கு மற்ற இருவர் எதிரிகள் என்ற நிலையில் யார் யாரை எப்படி வெல்கிறார்கள், மைத்ரேயன் தன் அபூர்வ சக்திகள் எதையாவது கடைசியிலாவது பயன்படுத்துகிறானா, முடிவில் என்ன ஆகிறது என்ற  கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நாவல் 122 அத்தியாயங்கள் வரை பல சுவாரசிய திகில் திருப்பங்களுடன் நீள்கிறது.

600 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலை வாங்கிப்படிக்க விரும்புபவர்கள் பதிப்பாளரை 9600123146 எண் அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். விலை ரூ.570/-

வலைப்பூவில் வழக்கம் போல் வியாழன் தோறும் புத்தம் சரணம் கச்சாமி தொடரும்.

அன்புடன்
என்.கணேசன்

9 comments:

  1. சுந்தர்June 18, 2016 at 7:50 PM

    வாழ்த்துக்கள். அட்டை சூப்பர்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.....

    அருமையான அனுபவம் இந்த புத்தகம் படிப்பது.

    விலை என்ன ?

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..
    நன்றி.

    ReplyDelete
  4. Good nice. Nice wrapper with himalayan background.

    ReplyDelete
  5. வாழ்த்துகள்

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
  6. Hi, Is it also published as ebook like other books.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கணேசன்

    ReplyDelete