சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 13, 2016

உலகப் பழமொழிகள் – 13


121. அறிவாளிகளுக்கு புத்திமதி தேவையில்லை. மூடர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.


122. மின்மினிப்பூச்சியைக் கண்டு சூரியன் கோபிக்கக் கூடாது.


123. ஒரு ரூபாயின் மதிப்பு தெரிய வேண்டுமானால் யாரிடமாவது கடனாகக் கேட்டுப்பார்.


124. மனிதன் சவக்குழியில் புகழப்படுகிறான்.


125. கண்ணியமானவனை நீதியில்லாமல் புகழ்ந்தால் வருந்துவான்.


126. வசையால் செத்தவனும் இல்லை. வாழ்த்தால் வாழ்ந்தவனும் இல்லை.


127. எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. ஒன்று காலம். மற்றது பொறுமை.


128. சரியாகச் செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.


129. பாய் முடைபவர்கள் பாயில் படுப்பதில்லை.


130. சிடுமூஞ்சி கடை வைக்கக் கூடாது.


தொகுப்பு: என்.கணேசன்


No comments:

Post a Comment