சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 18, 2016

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 13


·         நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.


·         கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.


·         குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.


·         கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.


·         உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.


·         விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.


·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.


·         பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.


·         கூப்பாட்டால் சாப்பாடாகுமா?


·         இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.


·         திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.


·         ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.



தொகுப்பு: என்.கணேசன்



1 comment:

  1. நல்லதொரு பழமொழி திரட்டு!!

    ReplyDelete