சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 10, 2020

அமானுஷ்யன் நாவலின் இரண்டாம் பதிப்பு இன்று வெளியீடு!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இன்று அமானுஷ்யன் நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

இக்காலத்தில் பொதுவாக நாவல்கள் இரண்டாம் பதிப்பைச் சந்திப்பது அரிதாக இருக்கிறது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது, மின்னூல்களின் ஆதிக்கம் போன்ற காரணங்களை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். மிக நீண்ட நாவல்கள் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாத சூழலே நிலவுகிறது. ஆனால் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பில் பரம(ன்) இரகசியத்தைத் தொடர்ந்து இரண்டாம் பதிப்பு காணும் நாவலாக அமானுஷ்யன் நாவல் வெற்றி பெற்றுள்ளது. (பரம(ன்) இரகசியம் இரண்டாம் பதிப்பும் முழுவதுமாக விற்பனையாகி விட்டது இன்னொரு மகிழ்ச்சிகரமான தகவல்)

இந்த வெற்றிக்குக் காரணமான வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  

நூல்கள் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


அன்புடன்
என்.கணேசன்

5 comments:

  1. எத்தனை தடவை படித்தாலும் சிறிதும் சலிக்காத நாவல் இது. உண்மையில் சாரோட மாஸ்டர்பீஸ் இது.

    ReplyDelete
    Replies
    1. நான் சாரோட மாஸ்டர் பீஸாக புத்தம் சரணம் கச்சாமி நாவலை பார்க்கிறேன்..

      Delete
  2. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete