சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 28, 2014

முழுமையாக இறைவனை சரணடையுங்கள்!


கீதை காட்டும் பாதை 32


மூன்று வகை குணங்களையும், நான்கு ரக மனிதர்களையும் விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் மனிதர்களின் ஆன்மிகத் தேடலை வேறு கோணத்திலும் இந்த ஏழாவது அத்தியாயத்தில் அலசுகிறார். தேவைகளைப் பூர்த்தி செய்ய சில நியம நிஷ்டைகளைச் செய்து குறிப்பிட்ட தேவதைகளை வணங்கி பலன் பெறும் மனிதர்களைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்:

மக்கள் தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து தம்முடைய சுபாவத்திற்குக் கட்டுப்பட்டு அந்தந்த நியமங்களைக் கடைபிடித்து மற்ற தேவதைகளை (வடிவங்களை)ச் சரணடைகிறார்கள்.

நம்பிக்கையுடனும் பக்தியுடனும் ஒருவன் எந்த வடிவத்தைப் பூஜித்தாலும் அதே வடிவத்தில் அவனது நம்பிக்கை உறுதியாக இருக்கும்படி செய்கிறேன்.

அவன் அந்த சிரத்தையுடன் அந்த தேவதையைப் பூஜிக்கிறான். நானே அமைத்துத் தந்த பலனை அந்த தேவதை மூலமாகப் பெறுகிறான்.

ஆனால் அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்த பலன் அழியக்கூடியது. தேவதைகளை வழிபடுபவர்கள் அந்த தேவதைகளையே அடைகிறார்கள். என்னுடைய பக்தர்களோ எவ்விதம் வழிபட்டாலும் என்னையே அடைகிறார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு காலத்தில் வர்ணன், வாயு, இந்திரன் போன்ற தேவதைகளை தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் வணங்கியதைச் சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். சில தீவிர கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு எந்தக் கடவுளை வணங்கினாலும் அது தேவதைகளை வணங்குவது போல் தான் என்றும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குவது மட்டுமே மிக உயர்ந்த வழிபாடு என்றும் கூட பொருள் கொள்கிறார்கள். ஆனால் பகவத் கீதையை ஆழமாக அறிவுபூர்வமாகப் படிப்பவர்களுக்கு அது பிழையான கருத்தென விளங்கும்.

தேவகி புத்திரனும், பார்த்தனுக்கு சாரதியுமான ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசித்த நேரத்தில் அந்தப் பாத்திரமாக இருக்கவில்லை. மிக உயர்ந்த தெய்வீக நிலையில் இறைசக்தியாகவே பரிபூரணமாக மாறிவிட்டிருந்த அவர் கீதையில் சொன்னதெல்லாம் பரம்பொருளாகச் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பகவத் கீதை முழுவதும் ஒலிக்கும் குரல் பரம்பொருளினுடையதே ஒழிய ஸ்ரீகிருஷ்ணர் என்கிற அவதார பாத்திரத்தின் உடையது என்று புரிந்து கொண்டால் வடிவங்களில் சிக்கிக் கொள்ளும் தவறை ஆன்மிக வாசகர்கள் செய்ய மாட்டார்கள்.

இந்த வடிவத்தில் இப்படிப் பிரார்த்தித்தால் என் இந்தத் தேவையை இந்தக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இறைவனைப் பிரார்த்திப்பவன் முழுமையான இறைவனைப் பிரார்த்திப்பதிப்பதில்லை. அந்தத் தேவையைத் தீர்த்து வைக்கும் பகுதியாகவே இறைவனைப் பார்த்து அதற்காகவே அந்தப் பகுதி-இறைவனை வணங்கவும் செய்கிறான். அந்த இறைவனுக்கு அந்தப் பகுதி தவிர வேறு எத்தனையோ சிறப்பு அம்சங்கள் இருக்கலாம், அவனுக்கு அதைப்பற்றிய அறிவும் இல்லை. அக்கறையும் இல்லை. ஆனால் அந்தத் தேவைக்காக எப்படிப் பிரார்த்திக்கச் சொல்கிறார்களோ அப்படி சிரத்தையுடன் அவன் பிரார்த்திப்பான். எல்லாம் வல்ல இறைவனைத் தன் தேவையைப் பூர்த்திசெய்யவல்ல தேவதையாக மட்டும் குறைத்துப் பார்க்கும் பிழை இது.

ஆசைத் தேவையால் முழுமையாக உந்தப்பட்டு இப்படி வணங்கும் மனிதனை ஆட்டுவிப்பது அந்த ஆசையே. அப்படி வணங்கி அவன் இறைவனிடம் இருந்து பெறுவதும் அந்த ஆசை பூர்த்தி அடைவதே. இப்படி ஆசையே முழுமையாக வியாபிக்கும் இடத்தில் இறைவனை உணரும் வாய்ப்பு ஏது?

அதைக் கொடுக்கும் கடவுள், இதைக் கொடுக்கும் கடவுள் என்று வணங்கும் போது கொடுக்கப்படுவது பிரதானமாய் போகிறதே அல்லாமல் கடவுள் பிரதானமாக ஆவதில்லையே. ஆசையே பிரதானமாக இருக்கும் போது அறிவு அந்த ஆசை சம்பந்தமாக கூர்மை பெற்றாலும் மற்ற விதங்களில் மழுங்கியே விடும். ஆசையினால் கட்டுப்பாடில்லாமல் ஒருவன் பீடிக்கப்படும் போது ஆசையின் சம்பந்தப்பட்ட ஓரறிவு ஜந்துவாகத் தான் இருப்பானே ஒழிய ஆற்றிவு மனிதனாக இருந்து விட முடியாது. அதனால் தான் அறிவை இழந்தவர்கள் என்றும் சிற்றறிவு படைத்தவர்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் இங்கு சரியாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இங்கும் சிரத்தையுடன் எதைச் செய்தாலும் அதற்கான பலன் கண்டிப்பாகக் கிடைக்கும் என்றும், அந்த நம்பிக்கை வீண் போகாது என்றும், அந்தப் பலனை ஏற்படுத்தித் தருபவன் தானே என்றும் ஸ்ரீகிருஷ்ணர் உறுதி அளிக்கிறார். இங்கு சிரத்தை பிரதானமாகிறது. அரைகுறை முயற்சிகள் அந்தப் பலனையும் தராது.

இங்கு இன்னொரு உண்மையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிரத்தையுடன் கேட்டு ஆசையை ஒருவன் பூர்த்தி செய்து கொள்ளலாமே ஒழிய அந்த ஆசை பூர்த்தியாவதன் மூலமாக எத்தனையோ பிரச்னைகள் உருவாகலாம். அதனால் எத்தனையோ கஷ்டப்பட வேண்டி வரலாம். அதற்கு இறைவன் உத்திரவாதி அல்ல. நீங்கள் அதைத் தான் கேட்டீர்கள். நான் அதைக் கொடுத்து விட்டேன். என் வேலை முடிந்தது என்று இறைவன் விலகியே இருப்பான்.

சின்ன உதாரணம் ஒன்று பார்ப்போம். கோடிக்கணக்கில் பணத்தை சிரத்தையுடன் வேண்டி ஒருவன் இறைவனிடமிருந்து பெறுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.  அந்தப் பணத்தைத் திருட பலரும் முயற்சிக்கலாம். அந்தப் பணத்திற்காக பலர் பல விதங்களில் அவனைத் தொந்திரவு செய்யலாம். பலர் அவனுக்கு எதிரிகளாகலாம். இப்படி ஒரு ஆசை நிறைவேறி பல புதிய பிரச்னைகள் உருவாகுவதற்கு அவன் விலக்கு பெற்று விட முடியாது.

ஆசையை மட்டும் வைத்து அழியக்கூடிய பலன்களை, அழிவு தரக்கூடிய பலன்களைக் கேட்டுப் பெற்று அதனால் வரும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளாமல் தவிக்கும் மனிதர்கள் ஏராளம். பிறகு அவர்கள் அந்த ஒவ்வொரு பிரச்னையை விலக்கும் தேவைக்காக மட்டும் வழிபட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பிரச்னை விலகும் போதும் அதனால் ஒன்பது பிரச்னைகள் உருவாகலாம். இந்த பரிதாப நீட்சிக்கு முடிவே இல்லை.

சரி எது புத்திசாலித்தனமான வழி?

எல்லாமாக இருப்பவனை முழுமையாக ஆத்மார்த்தமாய் வணங்கி சரணடைந்தால் எல்லாமே நம்முடையதாகி விடுமே, இப்படி ஒவ்வொன்றிற்காகப் பிச்சை கேட்கும் அவசியம் நமக்கு இருக்காதே என்று உணர்வதே அறிவு. அப்படி உணர்ந்து வணங்கி முழுமையாகவே இறைவனை சரணாகதி அடைபவனையே தன்னுடைய பக்தன் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

அப்படிப்பட்ட பக்தன் இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதி எல்லாம் இல்லை. அவன் எப்படியும் வழிபடலாம். வழிபாட்டு முறைகள் சடங்குகள் மட்டுமே. வழிபடுபவன் மனமே முக்கியம். அந்த மனமெல்லாம் இறைவன் நிறைந்திருக்கும் போது எப்படி வழிபட்டாலும் அது ஆத்மார்த்தமானதே. இறைவனுக்கு உகந்ததே. அவன் இறைவனைக் கண்டிப்பாக அடைவான் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்



3 comments:

  1. Thalaivaa,
    No words..... to praise you.....
    Continue yours dedication in writing...........
    Irraivan always with you........we pray for that....
    I think Since 2008 I am reading you writing..........
    From this message I ask all followers............Dear all we have to give one Title to our Boss-Thalaivan------yes En .Ganeshan......If all suggest some title...then we can choose one .......First let me suggest Title"Vivekanadan"........still I did not read his param ragasiyam even though I suggest "Paraman" .

    Today i saw one news our chief minister annoucne காமன்வெல்த்: தங்கம் வென்ற சதீசுக்கு ரூ.50 லட்சம் பரிசு.......

    I am not a chief minister...............I am a common man.... I can only suggest....some title to our Bossssssss...........

    Sir I know one day you will become very...very ......Popular.......
    I have many wishes for you......My wishes are.........you will write one book that will publish by our President/ Prime minister. That book will be very interesting ....Not more pages.........every one of our Indian / nation will have in their home.........a complete guide for a common Indian.

    Wish no:2: One day you will direct a Tamil Movie.(why I am telling ........not to make money........I feel you have a capability).

    Finally:If possible you post this as a post........and ask your followers for this title...........let us see how many people have this same opinion......Even long back I want to write this to you..........
    If you feel no need to post this.....then just post as comment.If this is in comment
    only few people will read........decision is yours.

    thalaivanin படைப்புகள் தொடர.........இறைவனை வேண்டும் .
    G.Ganesh.
    Saudi Arabia.

    ReplyDelete
  2. I am honestly agree with the comment. Ganeshan has to reach more peaks and his invaluable service must reach more and more common men.

    ReplyDelete
  3. தூய மனதுடன் எளிமையாக இறைவனை வழிப்படும் முறையை விட்டுவிட்டு... பலன் வேண்டி இறைவனை வழிபட்டு மிகவும் சிரமப்படுகிறோம்...
    அருமை சார்

    ReplyDelete