சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 30, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 10



·         தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

·         காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
(காணும் போதே கும்பிட வேண்டியது தானே? காண ஒரு முறை போய் விட்டு கும்பிட ஒரு முறை போக வேண்டுமா?)

·         செக்கென்றும் சிவலிங்கம் என்றும் தெரியாது நக்குகிற நாய்க்கு.


·         திகம்பர சாமியாருக்கு வண்ணான் உறவு ஏன்?
(திகம்பர சாமியார் ஆடைகளே அணியாமல் இருப்பவர். அவருக்கு ஏன் வண்ணான் உறவு தேவைப்படுகிறது?)

·         சாகிற வரையில் வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக் காரன்.

·         தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

·         துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?

·         நல்ல வீடென்று பிச்சைக்கு வந்தேன். கரியை வழித்து கன்னத்தில் தடவினார்கள்.

·         நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

·         தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

தொகுப்பு: என்.கணேசன்




1 comment:

  1. எல்லாமே (எனக்குப்) புதுசு. எல்லாமே அருமை.

    ReplyDelete