சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 12, 2012

அட ஆமாயில்ல! – 7




ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக் காரணமாய் இருக்கின்றது. 
                     -              காபெட்


கடமையும் இந்த நாளுமே நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
-          ஹாஸ்லிட்

ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.
-          டிரைடன்

ஒருவர் புன்னகை புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர் புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.
-          போவீ

பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.
-          பிளினி

மருந்துக்களில் முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.
-          ஃபிராங்க்ளின்

ஒன்றுக்கும் பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.
-          ஹென்றி ஃபோர்டு

வெறும் பேச்சும், பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள் என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில் நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?
-          மான்செஸ்டர் கார்டியன்

சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம், போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.
-          விதுர நீதி

ஒரு ஏழையான முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.
-          ஆபிரகாம் மில்லர்

தொகுப்பு : என்.கணேசன்

அனைவருக்கும் என் உளம்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

-என்.கணேசன்

5 comments:

  1. அட... ஆமா சார்... அனைத்தும் அனுபவ உண்மை வரிகள்...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே! அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    -என்.கணேசன்

    ReplyDelete
  4. அருமையான வரிகள்.
    தொகுப்புக்கு வாழ்த்துக்கள்.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பின்
    பணம் பொருள் நாம் நினைத்த விதம் கிடைக்கும்..

    ReplyDelete