சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 27, 2012

அட ஆமாயில்ல! 2



மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.  
- பாரதியார்



ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
                                  -  டால்ஸ்டாய்


உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
                               - பி. எஃப். பெய்லி


நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான்.
-         எமர்சன்


நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர்.
-         கதே


நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
-         லாங் ஃபெல்லோ


மனிதனை எது அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
                                   - போப்


அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம் தெளிந்து விடும்.
-         கோல்பெர்ட்


மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம்.
                              - தாம்சன்


முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி விடும்.
-         ஜெரிமி டெய்லர்


உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
-         ஷேக்ஸ்பியர்


ஓர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று கருதுவதாகும்.
                             - வென்னிஸ்


8 comments:

  1. உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
    - ஷேக்ஸ்பியர்
    அருமையான கருத்துகள் பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவ,

      வாழுதுகள்!

      தன் முன்னே நிற்பவர்கலயும் தாம் தான் என்று நிநைதால் எந்த பிரச்சனியும் தோன்றது.

      - இராமனுசர்.

      Delete
  2. அட ! உண்மை சார் ! சிறப்பான பதிவு !

    ReplyDelete
  3. மிக மிக அருமை........

    ReplyDelete
  4. அருமையான தேர்வு... வாழ்த்துகள் .

    ReplyDelete
  5. 'நித்திலம்' அறிமுகத்தில் இங்கே வந்தேன். பிரமித்துப் போய் விலக மனமில்லாமல் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.//
    - ஷேக்ஸ்பியர்

    உண்மை.

    தேவையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  7. super sir! Pls continue Mr. Ganesh

    ReplyDelete