சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, August 4, 2017

வலைத்தமிழ் வானொலியில் என் பேட்டி!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் வலைத்தமிழ் வானொலியில் என் பேட்டி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒலிபரப்பாகிறது.  பேட்டி எடுத்த சகோதரி மைதிலி தியாகுவின் பல கேள்விகளில்  சில இதோ-

ஆழ்மன சக்திகளின் தேடல் உங்களுக்குள் எப்படி, எப்போது உதித்தது?

இன்றும் சித்தர்கள் இந்த பூவுலகில் வாழ்கிறார்கள் என்று நம்புறீங்களா? ஆம் என்றால் அவர்களை சந்தித்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

பரமன் ரகசியத்தில் பாட்டி, கணபதி, ஈஸ்வர், குரு போன்ற என்னைக் கவர்ந்த கதாப்பாத்திரங்கள் நிறைய உண்டு. உங்கள் மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்த கதாப்பாத்திரங்கள் எவை ? ஏன்?

 நீ நான் தாமிரபரணி போன்ற வாழ்க்கை இவ்வுலகில் சாத்தியமா? 

 
 இருவேறு உலகில் சொல்லுவது போல் எண்ண அலைகள் மூலம் நடந்தவற்றை ஒன்று விடாமல் காண்பது என்பது நடைமுறையில் சாத்தியமா?

இன்றைய இளைஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து? அத்துடன் அனைவரும் வாழ்நாளில் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்களாக நீங்கள் எதையெல்லாம் கூற விரும்புறீங்க?

இந்தக் கேள்விகளுக்கும் அவரது மற்ற பல கேள்விகளுக்கும் நான் அளித்த பதில்களை இந்தப் பேட்டியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதன் மறு ஒலிபரப்பு ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

http://radio.valaitamil.com/

அன்புடன்
என்.கணேசன்

4 comments:

  1. Can you please publish the interview here or provide us the link to hear or read the interview? we are very much eager to hear or read

    ReplyDelete
  2. Yaeh Ganeshan Sir.. We are eager to hear or read the interview as we missed it on sat n Sunday.

    ReplyDelete
  3. Tomorrow morning I'll upload in youtube and post that it this blog. Thanks.

    ReplyDelete