சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 7, 2015

உலகப் பழமொழிகள் – 8



71. கற்ற மனிதன் ஒரு குளம். அறிவுடையவன் ஒரு ஊற்று.


72. துன்பத்தில் இருப்பவனைப் போய்ப் பார். செல்வத்தில் இருப்பவன் கூப்பிட்டால் போ.


73. யானை காணாமல் போனால் அடுப்படியிலா தேடுவார்கள்.


74. கன்றுக்குட்டி அருகிலும் கடன்காரன் அருகிலும் இருக்கக்கூடாது.


75. எத்தனை புடமிட்டாலும் இரும்பு பொன்னாகாது.


76. மனோ தைரியம் தான் வறுமையின் விளக்கு.


77. தவிட்டுக்கு வந்த கை தான் தங்கத்திற்கும் வரும்.


78. கங்கையிலே பிறந்த நத்தை சாலிக்கிராமம் ஆகாது.


79. ஒரு பெண் இரு முறை தான் வீட்டை விட்டுப் போகலாம். ஒன்று திருமணம் முடிந்து. இன்னொன்று இறந்த பின்பு.


80. சுக சரீரம் கழுதைப் பிறப்பு.



தொகுப்பு: என்.கணேசன்.



2 comments: