சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 18, 2014

உலகப் பழமொழிகள் – 6



51. இதயத்தை விரிவாக்குவோன் வாயைச் சுருக்குவான்.

52. அன்பு குறைந்து வருகையில் குறைகள் பெரிதாகத் தெரியும்.

53. ஏழைகளுக்குத் திறவாத பணப்பெட்டி வைத்தியனுக்குத் திறக்கும்.

54. தானம் செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பிச்சை எடுக்க நேரிடாது.

55. ஓநாய்க்காவது சில சமயம் திருப்தி உண்டு. உலோபிக்கு அதுவும் கிடையாது.

56. நன்றியும் கோதுமையும் நல்ல நிலத்தில் தான் விளையும்.

57. கொடுத்து செலவழித்ததை கடவுள் நிரப்பி வைப்பார்.

58. ஒரு ஏழை இன்னொரு ஏழைக்கு உதவி செய்யும் போதெல்லாம் கடவுள் புன்னைகை செய்கிறார்.

59. நம்பிக்கையும் இல்லாதவன் தான் பரம தரித்திரன்.

60. நம்பிக்கைக் குதிரைகள் பாய்ந்து செல்லும். அனுபவக் குதிரைகள் மெதுவாகவே செல்லும்.

தொகுப்பு: என்.கணேசன்


3 comments:

  1. 53.palamozhi arumai and unmai

    ReplyDelete
  2. Replies
    1. நல்ல நிலத்தில் மட்டுமே கோதுமை விளையும். அதே போல நல்ல மனிதர்களிடம் மட்டுமே நாம் நன்றியை எதிர்பார்க்க முடியும்.

      Delete