சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 22, 2014

நம் பாவ புண்ணியம் நம் பிள்ளைகளுக்கா?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி

ஸ்ரீமதி வெங்கட்: ஒரு பழ மொழி உண்டு மாதா பிதா செய்தது மக்களுக்கு,சொத்து மட்டும் இல்லை பாவ புண்ணியமும் தான் என்றால் என் கர்ம வினை தீர்க்க நான் ஏன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்? என் மகளுக்கு மகனுக்கு தானே போய் சேர வேண்டும்.இதை என்னிடம் ஒரு mnc வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார்.. நீங்கள் இதற்கு என்ன சொல்வீர்கள்?


நான்: மாதா பிதா செய்தது மக்களுக்கு என்று சொல்வதில் உண்மை இல்லை. அவரவர் செய்தது அவரவர்க்கு மட்டுமே. பண்ணின பாவ புண்ணியக் கணக்கை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அவரவரே செலவு செய்து தீர்க்க வேண்டும். மாதா பிதா செய்ததற்கு ஏற்றாற் போல் பிள்ளைகள் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இவர்கள் கணக்கை அவர்கள் ஏற்பார்கள் என்பது தவறான அபிப்பிராயம். வால்மீகி திருடனாக இருந்த போது தன் திருட்டுப் பாவங்களையும் தன் குடும்பம் ஏற்கும் என்று நம்பியிருந்து, நாரதர் அவரிடம் “உன் குடும்பத்தினர் ஏற்பார்களா என்று கேட்டுப் பார்” என்று சொன்ன பிறகு போய் மனைவி மக்களிடம் கேட்டாராம். அவர்கள் அதில் தங்களுக்குப் பங்கில்லை என்று கறாராகக் கூற வால்மீகி வாழ்க்கை திசை திரும்பியது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.


ப்ரியா: I have a colleague who is a Maratti. We both share similar interest in reading. So I was just sharing my thoughts with her on "Paraman Ragasiyam". I quoted your lines about that comparison between cooking vessel and our own finger. Just because the vessel bears the brunt of fire, that doesn't make it powerful/greater(Sorry that I'm not quoting your exact words here). That was a fantastic comparison/narration. Hearing that she felt quite intrigued and asked me whether this book will be published/translated in other languages such as Hindi/English? So do you have any plans like that?


நான்:
பரம(ன்) இரகசியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும், அப்படி மொழி பெயர்க்கப்பட்டால் Best seller ஆக கண்டிப்பாக இருக்கும் என்று சில வாசகர்கள் என்னிடம் சொன்னார்கள். அதிலும் அர்ஜுன் என்ற ஒரு வாசகரும், சீதாலட்சுமி என்ற மூதாட்டியும் பல முறை தெரிவித்து ஆசைப்பட்டவர்கள். சீதாலட்சுமி அம்மாள் முதலில் இந்திய மொழிகளில் ஒன்றிற்கு பரம(ன்) இரகசியம் மொழி பெயர்ப்பு ஆனாலும் பரவாயில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரம் வந்தால் மொழிபெயர்ப்பாகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் என் சில வாசகர்களைப் போலவே அது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியடையும் தருணமாகவே இருக்கும்.


கார்த்திகா:
என்னைக் கவர்ந்த Quotes ஏராளம். இப்போது உடனடியாக நினைவுக்கு வருபவை இவை-


* தீதும் நன்றும் பிறர் தர வாரா. - புறநானூறு


* உன் விவாதமும், பேச்சும் அறிவாளிகளோடு இருக்கட்டும். அதை விட்டு விட்டு முட்டாள்களோடு நீ விவாதம் செய்தால் முடிவில் பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு யார் முட்டாள் என்பது தெரியாமல் போய் விடும். – பெர்னாட்ஷா

 * Envy is ignorance. Imitation is suicide. - Emerson


* I am grateful to all those people who said “no”. It Is because of them I did it myself. –
Anonymous


* The happiest people are rarely the richest, or the most beautiful or even the most talented. Happy people do not depend on excitement and fun supplied by externals, they enjoy the fundamental, often very simple, things of life.Jane Canfield

சித்ரா: "நீங்கள் எழுதிய அமானுஷ்யன்..பரம(ன்) ரகசியம் இரண்டிலும்...அக்க்ஷய்......ஈஸ்வர் ..இருவரும் அசாதாரண திறமை படைத்தவர்கள்......

கதைக்களமும் வேறுமாதிரியானவை..............

அப்படி இருக்கும்பொழுது.....இவ்விருகதைகளிலும் ஒரு சிறிய...யதார்த்தமான.....காதல்..பாசம்..புரிதல் கலந்த..ஒரு பகுதி வருகிறது.......

என்னுடைய கேள்வி.....கதைகளத்திற்கு சிந்திக்கும் பொழுது.......இரண்டின் பாதைகளும்...வேறு வேறு...சிந்தனைகளிலும் கண்டிப்பாக மாற்றம் தேவைபட்டிருக்கும் ............

கதை படித்த எங்களுக்கே சில விசயங்களில் இருந்து வெளியில் வருவதற்கு நாட்கள் ஆகின்றன...நீங்கள் எப்படி நினைவுகளை....மாற்றி எழுதுகிறீர்கள்......

காதலும்....அதிகம் இல்லையென்றாலும் அப்பகுதியும் அதன் சிறப்புடன்..அழகிய பாடல் வரிகளுடன்........செல்கின்றது..


அதே சமயத்தில் ஆன்மிகம்......அமானுஷ்யம் ....அதீத சக்தி.....அனைத்தும் ஒரு நேர்கோட்டில் எப்படி உங்களால் முடிகிறது...

அதன் தாக்கம் இரண்டிலும் ஊடுருவவதில்லையா....


நான்: காதல், பாசம், ஆன்மிகம், ஆழ்மனசக்தி, அமானுஷ்யம் இவை எல்லாமே நான் ஆழமாய் உணரும் விஷயங்கள். ஒரே மனிதன் காதலனாய், மகனாய், பக்தனாய், புதியன கற்பதில் மாணவனாய், வித்தியாச அனுபவங்களை அனுபவிப்பவனாய் இருக்கிறானல்லவா. அந்தந்த இடத்தில் அதற்குத் தகுந்த மாதிரி மாறிவிடுவதை நாம் தினமும் பார்க்க முடிகிறதல்லவா? அப்படித் தான் எழுதுவதும். அந்தந்த அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் போது அதை ஆழமாய் உணர்கிற போது அந்தந்த பகுதிகள் சிறப்பாக வந்துவிடும்.


ப்ரியா: Religion-Spiritualism => Are they always connected/inter-linked??


நான்:
Religion-Spiritualism இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்க முடிந்தது என்றாலும், எப்போதுமே சார்ந்தது என்று சொல்லி விட முடியாது. மதங்களில் ஆழமாக ஈடுபடுபவர்களில் சிலர் ஆன்மிகத்தில் பூஜ்ஜியமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதே போல் ஆன்மிக ஞானம் உள்ளவர்கள் மதங்களிலும், அதன் சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.


கார்த்திகா: உங்களோட எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் ஏது?? உங்களோட எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களுக்கு நீங்கள் உணர்த்த நினைக்கும் விஷயம் எது..??

நான்: என் எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரத்தியேக விஷயத்தையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எழுதுகின்ற கதை அல்லது கட்டுரைக்குத் தகுந்தபடி ஏதோ ஒரு நல்ல செய்தி வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்.


ஸ்ரீமதி வெங்கட்: முக்திக்கு வழி ஞானமா? பக்தியா?எனக்கு தெரிந்த எல்லோரும் ஞானம் தேவை என்கின்றனர். ஆனால் கண்ணப்ப நாயனாருக்கு இருந்தது ஞானம் என்பதை விட ஒருவித முரட்டு பக்தி மட்டுமே. மேலும் மீரா ஆண்டாள் வெறும் பக்தி மூலம் முக்தி அடைந்தவர்கள். பிறகு ஞானம் எதற்கு? முக்திக்கு வழி ஞானம் என்று சொல்வதின் பொருள் என்ன?


நான்: முக்திக்கு கர்மம், பக்தி, ஞானம் என்று மூன்று வழிகள் உண்டு. அவற்றில் இந்த வழி உயர்ந்தது, அந்த வழி தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. எந்த வழிப் பயணம் நமக்கு ஏற்றது, நம் இயல்பிற்குப் பொருத்தமானது என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எதிலும் முழுமையாகப் போக வேண்டும். இடையிலேயே இளைப்பாறி விட்டால் முக்தி உட்பட நாம் எந்த இலக்கையும் அடைய முடியாது. இலக்கை அடைந்த பின் இறைவன் நீ ஏன் வேறு வழியில் வரவில்லை என்று கேட்க மாட்டான்.


கார்த்திகா: கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் இதை பண்ண மாட்டேன்னு நீங்க சொல்ற ஒரு விஷயம் எது??

நான்: எத்தனை கோடி கொடுத்தாலும் ஈனத்தனம் என்று நான் நினைக்கிற, தரம் தாழ்ந்த, செயல்களைச் செய்ய மாட்டேன். பணம் கண்ணியத்திற்கு ஈடாகாது.



(தொடரும்)


5 comments:

  1. பதில்கள் சிறப்பு... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. mukthikku vazhi - arumaiyna pathil, thanks
    sir, naan ungal pathivugalai kadantha 3 mathangalaga padithuvarukiren melum thangalin azhmanathin arputha sakthigal padithirukiren, enakku oru doubt. nam azhmana sakthi moolam namathu udalai nam kattupattukul vaithukollalam endru koorineergal, annal thangal kannadi aninthirukirirgale!...? - enathu kelvi thavarendral mannikkavum. Nandri

    ReplyDelete
    Replies
    1. ஆழ்மனசக்தியால் நிறைய அற்புதங்கள் முடியும். ஆனால் முயற்சி எடுக்க வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள நேரத்தையும், சக்தியையும் நமக்கு எது மிக முக்கியம் என்று தோன்றுகிறதோ அதற்காகத் தான் செலவழிக்கிறோம். நான் ஆழ்மனசக்தியை கண்ணாடி அணியாமல் இருக்க பயன்படுத்தவில்லை. அதை விட முக்கியம் என்று நினைக்கும் விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

      Delete
  3. உண்மையான பதில். நன்றி சார்

    ReplyDelete