சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 29, 2014

பாவ மன்னிப்பு எவ்வளவு தூரம் சத்தியம்?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி...



ஸ்ரீமதி வெங்கட்: நம்மிடம் எந்த கர்ம வினையும் இல்லை எனும் போது, மனிதனுக்கு மறு பிறவி தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டா?


நான்: மறுபிறவியைத் தேர்ந்தெடுப்பது அவரவர் கர்மவினைகளே. கர்மவினைகள் தீரும் போது பிறவி எடுக்க வேண்டிய அவசியமும் முடிந்து விடுகிறது.


கார்த்திகா: உங்களுடைய மிகப் பெரிய பலம் எதுன்னு சொல்வீங்க?? உங்களோட Co-Workers உங்களோட எழுத்துக்கள் அல்லது புத்தகம் பற்றி எதாவது கருத்து சொல்லி இருக்காங்களா... ??


நான்:
உள்ளதை, விருப்பு வெறுப்பைத் தாண்டி, உள்ளபடியே என்னால் பார்க்க முடிவதே என் பெரிய பலம் என்று நினைக்கிறேன். என் தவறுகளையும், பலவீனங்களையும் என்னால் மாற்றிக் கொள்ள சிரமம் இருந்த காலத்திலும் அவற்றை கண்டு கொள்ள மறுத்ததோ, காரணங்கள் கண்டுபிடித்து அவை இயல்பே என்று என்னை ஏமாற்றிக் கொள்ள நினைத்ததோ இல்லை. அதனால் தவறுகளின் போதும், பலவீனங்களின் போதும் உள்ளே ஒரு குரல் அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும். அந்தக் குரலை மட்டுப்படுத்த மாட்டேன். நாளாவட்டத்தில் அந்தக் குரலின் நாராசம் தாங்க முடியாமல் என் குறைபாடுகள் குறைந்திருக்கின்றன.


என் கூட வேலை பார்ப்பவர்களுக்கு என் ஆங்கில எழுத்துகள் மிகப் பழக்கமானவை. கிட்டத்தட்ட 25 வருடங்களாக எங்கள் வங்கி சிற்றிதழில் எழுதி வந்திருக்கிறேன். தமிழ் அறியாதவர்களுக்கு அவை மிகவும் பிடித்தமானவை. பல இடங்களில் இருந்து போனில் கூட பாராட்டுக்கள் வரும். தமிழ் அறிந்த அலுவலக நண்பர்கள் தமிழில் நான் எழுதிய கதைகளையும், புத்தகங்களையும் ரசித்துப் பாராட்டி உள்ளார்கள்.


கார்த்திகா: நீங்களே உங்களை ஒரு வெற்றியாளராக உணர்ந்தது எப்போது??


நான்: நான் இதற்கு முன்பே பதில் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். என்னை நான் இன்னும் முழு வெற்றியாளனாக உணரவில்லை. சில முயற்சிகளில் திருப்தியும் நிறைவும் அடைந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இனியும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


கார்த்திகா:
உங்களுக்கு பிடித்த Magazines என்னென்ன?? உங்களை மிகவும் கவர்ந்த மீடியா Person யார்??


நான்: பிடித்தது என்று சொல்லும்படியான பத்திரிக்கைகள் ஒன்றும் இல்லை. பிடித்த மீடியா person என சோ ராமசாமி அவர்களைச் சொல்லலாம்.


கார்த்திகா: காலையில் எழுந்ததும் நீங்கள் நினைக்கற முதல் விஷயம் என்ன??


நான்: இன்னது தான் நினைப்பேன் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு மனம் முழுதும் என் வசமில்லை. ஆனால் பெரும்பாலும் முக்கியமாய் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள் நினைவுக்கு வரும்.


கார்த்திகா: Turns U ON/OFF என்று ஒண்ணு இருக்கும்ல.. அப்படி உங்களை உற்சாகப் படுத்தும் ஒரு விஷயம் என்ன?? சோர்வடையச் செய்யும் விஷயம் என்ன??


நான்: என்னை உற்சாகப்படுத்தும் விஷயம் பாசிடிவ் மனிதர்கள், பாசிடிவ் புத்தகங்கள். சோர்வடையச் செய்யும் விஷயம் செய்தே ஆக வேண்டிய பிடிக்காத வேலைகள்.


கார்த்திகா: நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது??


நான்: நான் மட்டுமல்ல எல்லோருமே அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை “நான்” தான்.


கார்த்திகா: So Nice Sir.. "நான்" - அட.. ஆமாம் ல... இது இல்லாம என்னோட நாள் போகாது அப்படின்னு நீங்க சொல்ற விஷயம் எது??

நான்: இப்போதைக்கு கம்ப்யூட்டர் இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாளும் போவதில்லை.


கார்த்திகா: இப்போ இருக்கற Media ல என்ன changes வரணும் ன்னு நீங்க நினைக்கறீங்க??

நான்:
இப்போது மீடியாவின் நோக்கமும், போக்கும் பொழுது போக்கு அம்சங்களை நோக்கித் தான் அதிகம் இருக்கின்றது. பல நேரங்களில் அது தவறான எண்ணப் போக்கை மனித மனங்களில் விதைப்பதாக உள்ளது. தவறுகளை விதைப்பது எளிது. ஆனால் அறுவடை பயங்கரமானது. அதனால் நல்ல உபயோகமான விஷயங்களை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்வதாக இருப்பது அவசியத் தேவை என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் கெட்ட விஷயங்களையாவது சொல்லாமல் இருக்கலாம்.


ஸ்ரீமதி வெங்கட்: பாவ மன்னிப்பு என்பது எவ்வளவு தூரம் சத்தியம்,அப்போ நம் கர்ம வினை மன்னிக்கப்பட்டு விடுமா?அது தொடராதா?


நான்:
பாவமன்னிப்பு என்பது தன் பாவத்திற்காக மனிதன் மனம் மிக வருந்தி, உருகி மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்மையாகக் கிடைக்கக் கூடியது. அது மனிதன் திருந்த ஒரு வாய்ப்பு. அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை. அதனால் கர்மவினை அந்த தண்டனையோடு முடிவடைகிறது. மேல் போக்காக, மனம் மாறாமல் இது நடக்குமானால் பாவமன்னிப்பு கிடைக்காது. தன் செயலுக்கான தண்டனையை அவன் பெற்றே ஆக வேண்டும்.


ஸ்ரீமதி வெங்கட்: இன்றைக்கு சயின்ஸ் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் திருப்பதி தோன்றியதை கண்டு பிடித்து இருகின்றனர். ஆனால் கொங்கணர் 1 நூற்றாண்றை சேர்ந்தவர் தானே வள்ளுவர் மனைவி கொக்கு என்ன நினைத்தாயோ கொங்கனா?என்று கேட்பார்?இவர் எப்படி திருப்பதியில் ஜீவ சமாதி அடைந்து இருக்க முடியும்?


கொங்கணர் பற்றிச் சொன்ன இதே ‘கொக்கென்று நினைத்தாயோ?’ என்று கேள்வியை கௌசிகன் என்ற முனிவனைப் பார்த்து ஒரு பதிவிரதை கேட்டு அவர் அவளால் தர்மவியாதன் என்ற கசாப்புக்கடைக்காரனிடம் அனுப்பப்பட்டு அங்கு ஞான உபதேசம் பெற்றார் என்று மகாபாரதத்தில் வருகிறது.


மற்ற விஷயங்களில் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருந்த நம் முன்னோர்கள் வரலாற்றுக் குறிப்புகளில், கால அளவைப் பதிவு செய்வதில், அந்த அளவு சரியாக இருக்கவில்லை. (கல்ஹணரின் ராஜதரங்கிணி தான் ஓரளவு சரியான வரலாற்றுப் பதிவுகளை சரியாகச் செய்த முதல் நூல் என உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கிறார்கள். அது 12 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரத்து வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.)


அதனால் தகவல் பிழைகள் நீங்கள் சொன்னது போலவே இருக்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் சொல்லப்பட்ட செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சிகளின் காலப்பிழையை புறந்தள்ளி விடலாம்.


கார்த்திகா: எளிமையாகவும் அதே சமயம் எல்லார்க்கும் புரியும் படி தெளிவாகச் சொல்லிட்டீங்க Sir.. //அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை.// Fantastic Sir!

இப்பொழுது எந்த புத்தகம் வாசிக்கிறீர்கள்??

இக்கேள்வியின் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கோம் Sir..

நான்: Dan Millman எழுதிய The Life You Were Born to Live (A Guide to Finding Your Life Purpose) படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய Way of the Peaceful Warrior எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். இந்தப் புத்தகமும் நன்றாக உள்ளது.

கார்த்திகா: உங்களுடைய பலம் பற்றி ஏற்கனவே சொல்லிடீங்க.. அதே போல உங்க Plus - Minus இது ன்னு எதைச் சொல்லுவீங்க??

நான்: Plus நேர்மை, பல துறைகளில் ஆர்வம், விடாமுயற்சி, சந்தோஷமான மனம்

Minus பல விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாதது, உடல் உழைப்பு, அலைச்சல் உள்ள செயல்களில் சோம்பல், தேவைப்படும் போது கூட அடுத்தவர் மனதை நோகடிக்கிற மாதிரி பேச முடியாதது.


கார்த்திகா: Thanks & Sorry - இதை சொல்லணும் ன்னு நீங்க நினைக்கற Person யாராது இருக்காங்களா??


நான்: Thanks & Sorry – நியாயமாய் இந்த வார்த்தைகளை நான் என் மனைவியிடம் தான் சொல்ல நினைக்கிறேன். என் பல சாதனைகள் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நேரத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.


கார்த்திகா: இதுவரை நாங்க கேட்ட கேள்விகளுக்கு அழகாகவும் அருமையாகவும் பதில் சொன்னீங்க.. அதில் உங்களுக்குப் பிடிச்ச - நீங்க விரும்பி பதிலளித்த கேள்வி எது?? இப்படி கூடவா கேட்பீங்க ன்னு நினைச்ச கேள்வி எது??


நான்: எல்லாக் கேள்விகளுமே நான் விரும்பி பதில் அளித்த கேள்விகள் தான். வித்தியாசமான எதிர்பாராத கேள்விகள் எனக்குப் புதிதல்ல. அதனால் இப்படிக் கூடவா கேட்பீங்கன்னு நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் காலையில் எழுந்தவுடன் என்ன நினைப்பீங்க என்ற கேள்வி சிறிது வேடிக்கையாகப் பட்டது.


கார்த்திகா: இதோ Show முடிவுக்கு வந்துட்டோம்.. அப்படியே நம்ம Session ai Rate பண்ணுங்க sir..

Great!
Good!
OK!
Mokkai!


நான்: இந்த ஷோவை Good! என்றே ரேட் செய்ய வேண்டும். சில கேள்விகள் என் கடந்த வாழ்க்கையை ஒரு பரிசீலனை செய்ய உதவி இருக்கின்றன. கார்த்திகா, உங்களுக்கும் மற்ற பெண்மை டாட் காம் உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எத்தனை கேள்விகளுக்கு என் பதில்கள் திருப்திகரமாய் அமைந்தன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பேட்டி எனக்கு திருப்திகரமாய் இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


கார்த்திகா:
Felt So Honored.. ரொம்ப நன்றி சார். எங்க Show -க்கு வந்ததுக்கு. சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட ரொம்ப பொறுமையாக, ஆழமாக, தெளிவான பதில் சொன்னீங்க. தகுதியும் திறமையும் இருந்தால் வெற்றி தானாக தேடி வரும் அப்படிங்கறதுக்கு ஒரு முன்னுதராணம் சார் நீங்க. அதே போல் உங்களிடம் இருந்து நாங்க கத்துகிட்டது பொறுமை, நிதானம், விடாமுயற்சி, தெளிவான சிந்தனை. உங்களோட சில நிமிடங்கள் பேசினாலே போதும் எங்களுக்குள்ள ஏகப்பட்ட நல்ல எண்ணங்கள் வித்தாகிறது.

இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்களும் உங்களோட எழுத்துகளும் மிகப்பெரிய உந்துகோலாக அமையும்ன்னு சொன்னால் அது மிகையல்ல சார்.

எங்களோட பெண்மை Friends இப்ப அடிக்கடி சொல்ற ஒரு விஷயம், நாங்கள் NG Replies திரும்ப திரும்பப் படிச்சிட்டு இருக்கோம்ன்னு தான். எங்களுக்கு தெரியாத புரியாத பலவற்றை உங்கள் எழுத்துகள் மூலமாக ரொம்ப எளிமையாகவும் மனசில பதியும்படியும் சொல்லி இருக்கீங்க. On Behalf our Members, Our Sincerest Thanks to you sir!

உங்களோட எழுத்துக்கள் இன்னும் நிறைய வாசகர்ளை சென்றடையவும், இன்னும் உயர்ந்த நிலை அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள் சார்.

Many thanks for taking the time out of your busy schedules to talk with us. We look forward to the Opportunity to do so again.. Wishing you all Success in the forthcoming days.. All the Very Best Sir.

Last but Not the Least, I’d like to thank all our friends for your Support & Encouragement throughout Our show.. And This is an outcome of that Only. Esp Sakthi,You’re the one who is ever-ready to listen to my Annoying ques / wacky ideas, even at such late nights. Many Thanks for your Care & Assistance.. Cheers Dears!

And Sir,
Thanks for being a Part of our Penmai's Celebrity Talk Show.. In honor & Gratefulness of Our guest, We've made a Special gift for you..

Yeah, Here Comes a Cute Marble Ganesha & a Coffee Mug cum Pen Stand With Our logo + Your Name!! Hope you like our gift..












நான்: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அழகான பரிசிற்கும் மிக்க நன்றி கார்த்திகா. நான் பிள்ளையார் பக்தன். எனக்கு பிள்ளையாரையே பரிசளிக்கத் தோன்றியதற்கும், என் பெயரிட்ட Coffee Mug cum Pen Standக்கும் மீண்டும் நன்றி. நல்ல நினைவுகளுடன் உங்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன். Bye.

- என்.கணேசன்

1 comment:

  1. // சில முயற்சிகளில் திருப்தியும் நிறைவும் அடைந்திருக்கிறேன்.. //

    வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete