சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 20, 2023

யாரோ ஒருவன்? 130



வேதாளத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் போல் அசராமல் ஆக்ரோஷமாய் பேசி விட்டு கல்யாண் மனைவியையும் மகளையும் பார்த்தான். ஆனால் அவர்கள் அவனைச் சிறிதும் நம்பாமல் இழிவாகப் பார்த்தார்கள். இந்தக் காட்சிகளைப் பார்க்கும் வரை அவர்களும் மாதவனைக் கொல்ல எந்த நோக்கமும் கல்யாணுக்கு இல்லை என்பதை உறுதியாக நம்பியிருந்தார்கள். ஆனால் நாகரத்தினக்கல்லைப் பார்த்தவுடனேயே அவர்களால் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து புரிந்து கொள்ள முடிந்தது. கல்யாண் அதை எவ்வளவு பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தான் என்று அவர்கள் அறிவார்கள். சமீபத்தில் அந்த நாகரத்தினக்கல்லைத் தொலைத்து விட்டு தந்தையும் மகனுமாய் சேர்ந்து பரிதவித்ததும், இந்தச் சின்னக் கல்லுக்கு ஏனித்தனை ஆர்ப்பரிப்பு என்று அவர்கள் நினைத்ததும் கூட நினைவுக்கு வந்தது. அவர்கள் அப்படிப் பார்த்ததும் கல்யாண் தன் காலடி மண்ணே பிளந்து கீழே அதளபாதாளத்துக்கு இழுக்கப்படுவது போல் உணர்ந்தான்.

நிலைமையை உணர்ந்த வேலாயுதம் எழுந்து மகன் உதவிக்கு வந்தார். “நீ சொல்றது சரிதான். இவன் இங்கே பக்கத்து வீட்டுக்கு வந்ததே நம்ம மேல வாய்க்கு வந்தபடி அபாண்டமான புகாரைச் சொல்லி நம்ம வாழ்க்கைல குழப்பத்தை ஏற்படுத்த தான். வந்தவுடன மொட்டைக் கடுதாசி அனுப்பிச்சான், அதுல நாம அசரலைன்னவுடனே மொட்டைக் கடுதாசி எழுதி ரா அதிகாரிய வரவழைச்சான். அதுலயும் நீங்க சரியா பதில் சொன்னதால அந்த அதிகாரி போயிட்டான். இப்ப இந்த அணுகுண்டை இப்ப போடறான்…. நாகராஜ், எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம். நீ இங்கே வந்ததுக்கு  உண்மையான காரணம் என்ன? அபாண்டமா பழி சொல்லத் தானா? அது முடிஞ்சதால நீ நாளைக்கே ஊரை விட்டுப் போகறியா? உனக்கு எங்க மேல என்ன கோபம். வெளிப்படையா சொல்லு. உனக்கிருக்கற சக்திக்கு நீ நாங்க தான் ராஜீவ் காந்திய கொன்னோம்னு கூடப் படமா காண்பிக்க முடியும்னு நான் ஒத்துக்கறேன். ஆனா இத்தனையும் ஏன்? அதை சொல்லிட்டு போ

இவர்கள் இருவரும் பேசிய பிறகு தானும் எதாவது சொல்லா விட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணிய சரத்தும் எழுந்து சொன்னான். “கல்யாண் சொன்ன மாதிரி நீ ஆரம்பத்துலயும், கடைசிலயும் காண்பிச்ச காட்சிகள் நிஜம். ஆனால் நடுவுல எல்லாம் கற்பனை வளத்தை நல்லாவே ஓட விட்டிருக்கறே. பார்க்கறவங்க உண்மைன்னு நம்பிடற மாதிரி காட்சிகளை அமைச்சிருக்கே. இத்தனையும் ஏன்? நாங்க உனக்கு என்ன கெடுதல் பண்ணினோம்?.”

கல்யாண் திருப்தி அடைந்தான். முதல் முறையாக முக்கியமான நேரத்தில் அப்பாவும், சரத்தும் கச்சிதமாகப் பேசியிருக்கிறார்கள்.

நாகராஜ் அவர்கள் மூவரையும் இகழ்ச்சியாகப் பார்த்தபடியே சொன்னான். “காட்டிய காட்சிகள் எதுவும் கற்பனை இல்லை சரத். அதுல நீங்க உட்பட இங்கே யாருக்குமே சந்தேகமுமில்லை. உங்களைக் குழப்பறது நான் யாரு, ஏன் இங்கே வந்தேன், ஏன் இந்த உண்மைகளை எல்லாம்  வெளிப்படுத்தினேன்கிறது தானே?   பூர்வீகத்துல என் பேரு மாதவன். ஒரு காலத்துல உங்களோட நண்பன், பழைய கணக்கைத் தீர்த்துட்டு போக தான் இங்கே வந்தேன்...”

அனைவருமே அதிர்ச்சியுடனும், நம்பமுடியாமலும் அவனைப் பார்த்தார்கள்கல்யாண் ஆவேசமாகச் சொன்னான். “சரியா மாட்டிகிட்டே அண்டப்புளுகா. நீயே காமிச்ச ஆரம்ப படங்கள்ல மாதவன் எப்படி இருக்கான்னு இருக்கு. அவன் குரல் எப்படி இருக்கும்னு இருக்கு. அதுக்கும் உனக்கும், உன் குரலுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? நீ மனப்பிராந்தி புடிச்சவன்னு உன்னைப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன். அது இப்ப உறுதியாயிடுச்சு. சரி தம்பி. இனி நீ போய்க்கோ. எங்களுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு. உன்னை மாதிரி ஒரு பைத்தியக்காரன் கிட்ட இனி கேட்க எங்களுக்கு எதுவுமில்லை...”

நாகராஜ் புன்னகைத்தான். “கல்யாண் நீ இடைவேளை வரைக்கும் தான் படம் பார்த்திருக்கிறாய். முழுசும் பார். எல்லா சந்தேகங்களும் தீர்ந்துடும்..”

கல்யாண் இனி எந்தப் படமும் பார்க்கவோ, மற்றவர்கள் பார்ப்பதை அனுமதிக்கவோ தயாராக இல்லைஇவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ அவன் சொன்ன ஒரு வாக்கியத்தை வைத்து இவனைப் பைத்தியக்காரன் என்ற சந்தேகத்துக்கிடமான ஒரு கருத்தை உருவாக்கியாகி விட்டது. அதையே பிடித்துக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்று நினைத்தவனாய்வெளியே போஎன்று சொல்ல வாயெடுத்தான்.

நாகராஜ்உட்கார்என்று சொன்னான். அப்படியே பின்னாலிருந்து யாரோ இழுத்து உட்கார வைப்பது போல கல்யாண் உணர்ந்தான். தடாலென்று உட்கார்ந்தவனை சரத்தும் வேலாயுதமும் திகைப்புடன் பார்த்தார்கள். ஆனால் அடுத்த கணம் அவர்களும் அப்படியே உட்கார வைக்கப்பட்டார்கள். முன்பு போல் மறுப்படியும் நாக்கையோ உடலையோ அசைக்க முடியாத நிலை

நாகராஜ் மேலே கை காட்டினான். மறுபடியும் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. கல்யாணால் மலையுச்சியிலிருந்து தள்ளி விடப்பட்ட மாதவன் ஒரு பெரிய பாறையில் குப்புற விழுந்து அங்கிருந்து வழுக்கி ஒரு மரக்கிளையில் சிக்கி ரத்தம் உடலெல்லாம் வழியத் தொங்கினான். அந்தக் கிளையும் அவன் உடல் பாரத்தால் முறிகிற மாதிரி இருந்தது. அவனால் சத்தமிட முடியவில்லை; மிகப் பலவீனமாக குரலில் அரற்ற மட்டுமே அவனால் முடிந்தது. பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்த அவனை அந்த மரத்திலிருந்த இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்தபடி பார்த்தனபின் ஒரு நாகம் மரத்தின் ஒரு பகுதியில் நன்றாகச் சுற்றி பின் தொங்கும் கிளையையும் சுற்றிக் கொண்டது. முறியப் போகும் கிளையின் பாரத்தை நாகமும், நாகத்தோடு சேர்ந்த மரப்பகுதியும் சேர்ந்து பகிர்ந்ததால் அந்தக் கிளை முறியாமல் இருந்தது

அடுத்த காட்சியில் ஒரு துறவி ஒரு பாறையின் மீது ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒரு நாகம் சுற்றி சுற்றி வந்து சீறியது. கண்களைத் திறந்த அந்தத் துறவியை அந்த நாகம் பயமுறுத்தவில்லை. அவர் என்ன என்பது போல் அதைப் பார்த்தார். நாகம் அங்கிருந்து பக்கத்துப் பாறைக்குச் சென்றது. பக்கத்துப் பாறையை அவர் பார்த்த போது தான் அதைத் தாண்டி சிறிது தூரத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் அவர் பார்வைக்குத் தெரிந்தான்.

அடுத்த காட்சியில் அந்தத் துறவியுடன் ஏழு திடகாத்திரமான காட்டுவாசிகள் தெரிந்தார்கள். அவர்கள் தலைவன் போலிருந்த ஒருவன் அவர்களிடம் எதோ சொன்னான். பின் நீண்ட கம்புகளும், கயிறுகளுமாக அவர்கள் பாறைகளில் தவழ ஆரம்பித்தார்கள்.

அடுத்த காட்சியில் மாதவனை துறவி இருந்த பாறையில் அந்தக் காட்டுவாசிகள் கிடத்துவது தெரிந்தது. ஒரு ஈரத்துணியால் அவன் உடலைத் துடைத்துப் பார்த்த போது அவன் முகமெல்லாம் காயங்கள்மூக்கும், தொண்டையும் உடைந்திருந்தன. தலையில் இரண்டு காயங்களும், கை கால்களில் காயங்களும் இருந்தன.  

அடுத்த காட்சியில் ஆம்புலன்ஸில் மாதவன் ஏற்றப்படுவது தெரிந்தது. காட்சிகள் நின்று போய் நாகராஜ் பேச ஆரம்பித்தான்.

மாதவனுக்கு நினைவு திரும்பினப்ப அவன் ஆஸ்பத்திரில இருந்தான். முகம் காயங்களாலயும், மூக்கு உடைஞ்சதாலயும் கோரமாக இருந்ததால அவனுக்கு முகத்துல சர்ஜரி பண்ணினாங்க. தொண்டை உடைஞ்சு அங்கேயும் ஆபரேஷன் பண்ணினதால அவன் குரல் மாறிடுச்சு. அவன் யாரு என்னன்னு கேட்டாங்கஅவனுக்கு எந்தப் பழைய நினைவுமில்லை. பேர் கூட ஞாபகம் இருக்கலை. சுவாமிஜி அவன் நாகப்பாம்புகளால் காப்பாற்றப்பட்டவன்கிறதால நாகராஜ்னு பேர் வெச்சார். அவர் கூடவே அவன் இருந்தான். அவர் போன இடங்களுக்குப் போனான். குடுத்தத சாப்பிட்டான். யார் கிட்டயும் எதுவும் பேசாம அவன் ஊமை மாதிரி வாழ்ந்தான். பகல் வாழ்க்கை ரொம்ப அமைதியாய் இருந்துச்சு. ஆனா ராத்திரில அவனுக்கு வந்த கனவுகள் அமைதியானதாய் இருக்கல. எவனோ ஒருத்தன் அவனைத் திரும்பத் திரும்ப மலையுச்சியில இருந்து தள்ளினான். ஒவ்வொரு தடவையும் அலறலோடயும் துக்கத்தோடவும் மாதவன் எழுந்துடுவான். சில சமயங்கள்ல சில முகங்கள் நினைவுக்கு வந்துச்சு. தலையெல்லாம் நரைச்சு பெருசா குங்குமப் பொட்டு வெச்சிட்டிருந்த ஒருத்தி, சாய்வு நாற்காலில உட்கார்ந்து நியூஸ்பேப்பர் படிச்சுகிட்டிருந்த ஒருத்தர், ஒரு சின்னப் பேப்பரைக் கைல வெச்சிட்டு எதையோ படிச்சுக்காட்டின ஒரு பொண்ணுஎல்லாருமே நெருக்கமானவங்களா தோணுச்சு. ஆனா யாரு என்னன்னு தெரியலை…”


ரஞ்சனி தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழ, தீபக்கும் கண்கலங்க, அதைப் பார்த்த தர்ஷினியும் மேகலாவும் கூடக் கண்கலங்கினார்கள். மாதவனின் அனுபவங்களை வேறு யாரோ ஒருவரது வரலாற்றைச் சொல்வது போல நாகராஜ் சொன்னது அந்த நிகழ்வுகளின் கனத்தைக் குறைப்பதற்குப் பதிலாகக் கூட்டுவது போலிருந்தது.  

(தொடரும்)
என்.கணேசன்

19 comments:

  1. இன்னும் எத்தனை வாரங்கள் தொடரும்....?

    ReplyDelete
  2. Suspense break..


    Ppppppaaa, type pannave mudila.,

    Today's update chancelessss

    ReplyDelete
  3. Heart touching Episode.

    ReplyDelete
  4. This story is what keeps my day going in my otherwise depressing mondays.

    ReplyDelete
  5. யூகிக்க முடியாத திருப்பங்கள், Outstanding touch...வாழ்த்துகள் Sir.

    ReplyDelete
  6. wow super climax nicely narrated thanks

    ReplyDelete
  7. இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை... தொடக்க எபிசோடில் இருந்து குறிப்பிட்டு சொன்ன சில புதிர்கள் இப்போது புரிய ஆரம்பிக்கிறது....

    உதாரணமாக ....நெருக்கமானவர்களிடம் கண்களை காட்டாமல் கண்ணாடி போட்டுக்கொள்வது....சுதர்சன் ரஞ்சனி வரும்போது வெளியே போனது...தீபக்கிடம் பழகியது...நரேந்திரனிடம் கூறிய பதில்கள்... அனைத்தும் இப்போது விளங்க ஆரம்பிக்கிறது....

    தங்களின் எழுத்து ஞானத்தை தலை வணங்குகிறேன்.....

    ReplyDelete
  8. Any news about new novel....

    ReplyDelete
    Replies
    1. New novel "yogi", a spiritual thriller will be released next month end.

      Delete
    2. Wow Super Sir. Congratulation. How is the novel coming along? Sir.

      Delete
  9. "பூர்வீகத்துல என் பேரு மாதவன்" இந்த வார்த்தைகள் again and again read pandren,

    Last 24 hours la intha episode ah epdiyum 15 times aavthu read panni iruppen,

    I'm crush on your words sir..

    ReplyDelete
  10. Wowww..thank you sir .... waiting eagerly

    ReplyDelete
  11. தூங்க முடியாமல் யோசிக்க வைத்து விட்டீர்கள். முதல் பாகத்தில் ஆரம்பித்த புதிருக்கு 130ம் அத்தியாயத்தில் பதில் கிடைக்கிறது. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  12. Awesome. Makes me read again and again..

    ReplyDelete
  13. From Monday morning, I am daily reading and reading without counting. May be hundreds of times. The author has divine blessing to present such an emotional and touching moments in all of his novels. I wish him a long and healthy life.

    ReplyDelete
  14. Unexpected twist. Very nice

    ReplyDelete
  15. This ud has many comments.., thus we know about how important and twisting ud this is...

    ReplyDelete