சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 9, 2016

உலகப் பழமொழிகள் – 12


111. நீ என் முகத்தைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் படைத்தவனுக்கு; நீ என் உடையைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் தைத்தவனுக்கு; நீ என் செயலைப் பார்த்து சிரித்தால் அந்தக் கேவலம் எனக்குத் தான்.

112. ரோமாபுரியை ஒரு நாளில் கட்டவில்லை.

113. அசையாத மணி அடிப்பதேயில்லை.

114. வேகமான முடிவுகள் உறுதியானவை அல்ல.

115. எதிரிகள் ஓடி விட்டால் எல்லோரும் வீரர்களே.

116. இதயம் சிறியது தான். ஆனால் பெரிய பொருள்களாலும் அதை நிரப்ப முடிவதில்லை.

117. உணர்ச்சி மனிதனை ஆட்சி செய்கையில் அறிவு வெளியே போய் விடுகிறது.

118. ஓடக்கூட பயந்து போய் நின்ற சிலரும் வீரராகப் பாராட்டப்படுவதுண்டு.

119. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கிக் கொள்பவன் இருமுறை வெற்றி பெற்றவனாகிறான்.

120. பயந்தாங்கொள்ளி தான் எச்சரிக்கையாய் இருப்பதாகவும், கஞ்சன் தான் சிக்கனமாய் இருப்பதாகவும் சொல்வான்.

தொகுப்பு: என்.கணேசன்


1 comment: