சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, January 10, 2014

என் இரு நூல்களின் அடுத்த பதிப்பு வெளியீடு!


வாசக நண்பர்களே,

வணக்கம்.

தங்கள் அமோக ஆதரவினால் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் மூன்றாம் பதிப்பை இம்மாதம் கண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2013 ஜனவரியில் முதல் பதிப்பு, 2013 ஆகஸ்டில் இரண்டாம் பதிப்பு, 2014 ஜனவரியில் மூன்றாம் பதிப்பு என்று ‘ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ வெற்றிநடை போட ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


அதே போல ”வாழ்ந்து படிக்கும்  பாடங்கள்”நூலும் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது. 2013 ஆகஸ்டில் முதல் பதிப்பு, 2014 ஜனவரியில் இரண்டாம் பதிப்பு என்பதும் தங்களாலேயே சாத்தியமாகி உள்ளது. இதற்கும் என் நன்றிகள் பல.


இந்த நூல்களுக்கு விளம்பரம் அதிகமில்லை. தங்களைப் போன்ற வாசகர்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கு சிபாரிசு செய்தே இந்த நூல்கள் இப்படி விற்பனையில் சாதனை படைத்துள்ளன என்பதில் சந்தேகமே இல்லை. இது போல தொடர்ந்து ஆதரவளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஜனவரி 10 முதல் 22 தேதி வரை நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி செல்லும் வாசகர்கள் பதிப்பகத்தாரின் ஸ்டால் எண்கள் 51 மற்றும் 52ல் என் புத்தகங்களை 10% கழிவில் நேரில் வாங்கிக் கொள்ளலாம்.

நூல்கள் வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ள – 
Mobile: 9600123146  
Email: blackholemedia@gmail. com   

BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No.7/1 3rd Avenue, Ashok Nagar, 
Chennai-600 083 
Tel : 044 43054779

Bank Details

Name: blackhole media publication ltd

Indian overseas bank, current/account no:165302000000377

Branch:alandur, chennai

Ifsc code: ioba 0001653




அன்புடன்

உங்கள்
என்.கணேசன்.

11 comments:

  1. உங்கள் எழுத்துகளுக்கு விளம்பரம் தேவையில்லை. ஒரு முறை படித்தால் திரும்பத் திரும்ப உங்கள் எழுத்துகளைப் படிக்கத் தோன்றும். நிறைய தகவல்களும், அறிவுரைகளும், மன அமைதியும் எங்களுக்கு கிடைக்கின்றன. அதற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் இரயிலில் சென்ற மாதம் பயணம் செய்த போது இரண்டு இளைஞர்கள் உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்திகளையும், பரமன் ரகசியத்தையும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். உங்கள் எழுத்துக்கள் நிறைய பேர் மனதில் நிற்கிறது கணேசன் சார். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

    ReplyDelete
  2. பாராட்டுக்கள், வாழ்த்துகள், தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. Maduraila entha books kedaikuma sir

    ReplyDelete
    Replies
    1. Please call publisher in 9600123146 to know the shops where the books are available in Madurai.

      Delete
  4. வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் எழுத்துக்கள் வசீகரம்மிக்கவை...

    ReplyDelete
  5. day before yesterday i talked with u on fone.again i take this opportunity to congratulate u for ur book VAALNTHU PADIKKUM PAADANGAL.

    ReplyDelete
  6. Bought these books as well :) completed Parama(n) Ragasiyam !!! Keep the good work sir :)

    ReplyDelete
  7. என்.கணேசன் உங்களை நெற்றிக்கண் சிறந்த வலைப்பதிவராகத் தேர்ந்தெடுத்து உள்ளது.
    http://www.naamthamilar.ca/?p=4897
    சென்று பாருங்கள்.வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் தெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  8. வாழ்த்துக்கள்....!!!! சார்..!!!!!

    ReplyDelete
  9. மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

    ReplyDelete