முகத்துதியாகப்
பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை
மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.                   
-        
ஆண்டிஸ்தினீஸ்
சில சமயம் இழப்பது
தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
-        
ஹெர்பர்ட்
போரிலே கூட புற
ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
-        
நெப்போலியன்
அற்ப விஷயங்கள்,
சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை
விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
-        
செஸ்டர்ஃபீல்டு
இதயத்தின் காரணங்களைப்
பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
-        
பாஸிட்
இயற்கையின் விதிகள்
நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
                           - லாங்ஃபெல்லோ
இழிவான அற்ப
விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும், மேலும்
பலவீனப்படுத்தும்.
-        
கௌப்பர்
வாழ்க்கையில்
நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம்
என்பதைப் பொறுத்தே இன்பம்.
-        
ஹம்போல்ட்
உலகின் இயல்பு இறந்து
போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
-        
என்.ஹேர்
உணர்ச்சி
மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள்.  அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-        
பிளேடோ
உலகில் நமக்குள்ள ஒரே
வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
                           - லாக்
களைப்பு கல்லின்
மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
                            - ஷேக்ஸ்பியர்
தொகுப்பு: என்.கணேசன்

அனைத்தும் அருமை சகோ!
ReplyDeleteஅருமையான வாசகங்கள்.
ReplyDeleteதத்துவ புதையல் ,அருமை சார்
ReplyDeleteசிறப்பான தத்துவங்கள் சார் ! வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteஅத்தனையும் இரத்தினங்கள்.
ReplyDelete