·        
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
·        
கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.
·        
குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.
·        
கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.
·        
உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.
·        
விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.
·        
தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
·        
பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.
·        
கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
·        
இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.
·        
திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.
·        
ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.
தொகுப்பு: என்.கணேசன்

நல்லதொரு பழமொழி திரட்டு!!
ReplyDelete