·        
செத்த பிணத்திற்கு
அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
·        
எதிரிக்கு சகுனத்தடை
என்று மூக்கையா அறுத்துக் கொள்வது?
·        
எரிகிறதைப்
பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
·        
கடலைத் தாண்ட
ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
·        
கரும்பு கசப்பது
வாய்க்குற்றம்.
·        
கடன் வாங்கிக் கடன்
கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
·        
காட்டிலே செத்தாலும்
வீட்டிலே தான் தீட்டு.
·        
கூப்பாட்டால்
சாப்பாடாகுமா?
·        
எரிகிற வீட்டை அவிக்க
கிணறு வெட்ட நாள் பார்த்தது போல
·        
கும்பிட்ட கோயில் தலை
மேல் இடிந்து விழுந்தது போல
·        
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
·        
சொப்பனங்கண்ட அரிசி
சோற்றுக்கு ஆகுமா?
தொகுப்பு: என்.கணேசன்

பலது புதியவை...
ReplyDeleteநன்றி...
அருமை ! ரசித்தேன்!
ReplyDelete